தமிழ்த் திரை உலகின் ஒரு சில பிறவி மேதைகளில் முக்கியமானவரான கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாள் அன்று (ஜூன் 24)
அந்த நன்னாளில், அவரது பேரனான ஆதவ் கண்ணதாசன்,தனது அடுத்த படம் பற்றிய செய்தியைச் சொல்லி இருக்கிறார் .
பொன்மாலைப் பொழுது படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் கண்ணதாசன் .
அதற்கும் முன்பு உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு .
முதல் படத்திலேயே பலரும் பாராட்டும்படி நடித்து இருந்தார் .
அதைத் தொடர்ந்து யாமிருக்கே பயமேன் என்ற படத்தில் தமிழ் கன்னடம் இரண்டு மொழிகளில் நடித்தார் . அடுத்து பகல் என்ற படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்
இப்போது அடுத்து ஓம் சினிமா நிறுவனம் தயாரிக்கும் ‘வதனமே சந்திர பிம்பமோ’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் .
ஷங்கர் டக்கர் என்பவர் இசையில் ஸ்ரீநிவாசன் இயக்கும் இந்தப் படத்தில் , ஆதவ் கண்ணதாசனுக்கு அடுத்த முக்கியக் கேரக்டரில் விசாரணை சந்திரன் நடிக்கிறார் .
“கதாநாயகி உட்படமற்ற கதாபாத்திரங்களில் பல பிரபலமான தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாது உலக சினிமா ஜாம்பவான்கள் சிலரும் நடிக்க இருக்கிறார்கள் ” என்கிறார் ஆதவ்
வாழ்த்துகள் ஆதவ், எங்கள் கவியரசரின் வாரிசே !