‘தனி ஒருவன்’ படம்போல பின்னணி இசை கொண்ட ‘ஆகம்’

agam 8

என் ஐ டி யில் (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ) எம் டெக் படித்து லண்டனில் வாழும் தொழில் அதிபரும்  ஆந்திராவில் பல கல்வி நிறுவனங்கள் நடத்துபவருமான  

கோட்டீஸ்வர ராஜூவும் அவரது மனைவி ஹேமா ராஜுவும் ஜ்யோ ஸ்டார் என்டர்பிரைசஸ் சார்பில் தயாரிக்க , 

விகடன் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் பெஸ்ட் செல்லர்களில் ஒன்றாக பாராட்டப்படும் ஒரு சிறகு போதும் நூலை எழுதியவரும் மனித வள மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறைகள் பல நடத்தியவருமான

டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் கதை  எழுதி இயக்க, 

இர்ஃபான் , ஜெயப்பிரகாஷ், தீக்ஷிதா , ஒய்.ஜி மகேந்திரன் ஆகியோர் நடித்து இருக்கும்  படம் ஆகம் . ஆகம் என்ற சொல்லுக்கு வந்து சேர்தல் ”என்று பொருள் 

படத்தின் திரைக்கதை வசனம் ஜினேஷ், இசை விஷால் சந்திர சேகர், ஒளிப்பதிவு ஆர் வி சரண் 

படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தொழிலதிபர் வி ஜி சந்தோசம் பாடல்களை வெளியிட தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் பெற்றுக் கொண்டார் .

agam 4

நிகழ்வில் படத்தின் முன்னோட்டத்தையும் மூன்று பாடல்களையும் திரையிட்டனர் .  கமர்ஷியலாகவும் அழகாகவும் இனிமையாகவும் இருக்கின்றன பாடல்கள் . எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது முன்னோட்டம் . 

படத்தில் நடித்து இருக்கும் ஒய் ஜி மகேந்திரன் நிகழ்ச்சியில் பேசும்போது ” சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் பணியாற்றிய முன் அனுபவம் இல்லாமல் ,
சினிமா ஆர்வத்தோடு சினிமா எடுக்க வந்த ஒரு குழு என்னை தன் படத்தில் நடிக்க அழைத்தது . அவர்களுக்கு அனுபவம் இல்லை என்றாலும் ஆர்வம் பார்த்து நான் ஒத்துழைப்பு கொடுத்தேன் .
அவர்களும் அதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஓர் அட்டகாசமான திரில் படத்தை கொடுத்து அசத்தினார்கள். ராஜ்பரத் எடுத்த உச்சகட்டம் படம்தான் அது 
இந்தப் படத்தின் இயக்குனர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் மற்றும் தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராஜு  என்னை அணுகியபோது மீண்டும் உச்சக் கட்டம் படக் குழுவை பார்க்கும் உணர்வு ஏற்பட்டது .
agam 3
இப்போது பாடல்கள் மற்றும் முன்னோட்டததைப் பார்க்கும்போது நான் நினைத்தது மிக சரி என்பது புரிகிறது . இந்தப் படம் ஐம்பது நாட்களாவது ஓடும் ” என்றார் . 
 அபிராமி ராமநாதன் தன் பேச்சில் “என்னை பேச அழைக்கும்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் பெண்மணி நடிகர் என்று சொல்லி அழைத்தார் . அது தப்பில்லை . நான் ஒரு படத்தில் நடித்து இருக்கிறேன் .
தியாக பூமி உள்ளிட்ட மாபெரும் படங்களை இயக்கிய கே.சுப்பிரமணியம் இயக்கிய – நேரு பற்றிய ஒரு படத்தில் நான் நடித்தேன் . அப்போது என் வயது எட்டு .
படத்தில் ஒரு காட்சியில் நேருவாக நடிப்பவரின் கையை நான் பிடித்துக் கொண்டு நடக்க, அடுத்து ஓர் ஐந்து வயது சிறுமி அடுத்து என் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கும் . 
இந்தக் காட்சியைப் பார்த்த என் ஆத்தா (அம்மா) , ” என்ன இவன் இந்த வயசுலேயே பொம்பளப் புள்ள கையைப் பிடிச்சு கிட்டு நடக்குறான். இனிமே இவன நடிக்க விடக் கூடாதுன்னு சொல்லிருச்சு.
agam 7
அப்புறம் நடிக்க விடவே இல்ல . என்னை மட்டும் என் ஆத்தா நடிக்க விட்டிருந்தா நான் பெரிய பெரிய நடிகர்களுக்கு எல்லாம் போட்டியா வந்திருப்பேன். 
அப்புறம் தியேட்டர் ஆரம்பிச்சேன் . பட விநியோகம் பண்ணினேன் . படம் தயாரிக்க ஆரம்பிச்சேன் . இப்போ கூட ஒரு படம் தயாரிச்சுக்கிட்டு இருக்கேன் . என்கிட்டே நாலு தியேட்டர் இருக்கு .
ஒவ்வொரு படமும் ரெண்டு வாரம் ஓடினாலே எனக்கு ஒரு தியேட்டருக்கு வருஷம் 26 படம் வேணும் . நாலு தியேட்டருக்கும் 104 படம் வேணும் .
அதனால்தான் என் தியேட்டருக்கு படத்துக்கு வர்ற டிக்கெட் புக் பண்றவங்களுக்கு கார் வசதியும் அதுக்குரிய சார்ஜ் வாங்கிட்டு பண்ணித் தர்றேன் .
இப்படிப்பட்ட நிலையில் ஆகம் மாதிரி படங்கள் நல்லா ஓடினா அது பல வெற்றிப் படங்களை உருவாக்க வழி செய்து கொடுக்கும் 
agam 6
இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா சினிமா தொழிலுக்கு வந்துட்டா அப்புறம் அந்த  தொழிலை விட்டுப் போக யாருக்கும் மனசு வராது . 
இந்தப் படங்கள்ல பல புதுமுகங்களும் நடிச்சு இருக்காங்க. அவங்க எல்லாம் ஜெயிக்கணும்னா  இந்தப் படம் நல்லா ஓடணும் . 
இந்த நேரத்துல ஒண்ணு சொல்லிக்க விரும்பறேன் . இந்தப் படத்துல நடிச்ச நடிகைகள் எல்லாம் இங்க பேசினாங்க . ஆனா எல்லாரும் ஆங்கிலத்துலேயே பேசறாங்க . அது ஏன் ?  
பம்பாய்ல இருந்தும் ஃபாரின்ல இருந்தும் வந்த நடிகைன்னா, தமிழ் தெரியாது அவங்க தமிழ்ல பேசலன்னா பரவால்ல . ஆனா  தமிழ் தெரிஞ்சவங்களே ஆங்கிலத்துல பேசறீங்களே . அது ஏன் ? 
நிகழ்ச்சித் தொகுப்பு பண்ற பொண்ணு எவ்வளவு அழகா சேலை கட்டி வந்திருக்கு . ஆனா நீங்க எல்லாம் எதையோ மாட்டிக்கிட்டு வந்தது ஏன்? சேலை கட்டி வந்தா  என்ன ? 
agam 1
இனியாவது நடிகைகள் நிகழ்சிகளில் தமிழ்ல பேசுங்க “என்றார் .
நடிகை ரஞ்சனி பேசும்போது ” ஒரு படத்துல மெசேஜ்  மட்டும் இருந்தா அது ஓடறது கஷ்டம் . கமர்ஷியலா மட்டும் இருந்தா அதுக்கு மரியாதை கிடைப்பது கஷ்டம் .
இந்த இரண்டையும் பேலன்ஸ் பண்ணி மரியாதையும் பெற்று வெற்றிகரமாக ஓடவும் செய்யும் படமாக  இந்த ஆகம் படம் இருக்கும் ” என்றார்  
இயக்குனர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் ” நானும் பரமக்குடிகாரன்தான். பரமக் குடியில் உலக நாயகன் கமல்ஹாசன் வீட்டுக்கு பக்கத்து வீட்டில்தான் என் தாத்தா  அப்பா எல்லாரும் வாழ்ந்தனர் . 
இந்தியாவின் அறிவை அன்னிய நாடுகள் சுரண்டும் அறிவுத் தீவிரவாதம் பற்றி பேசும் படம் இது . வெளிநாடு சென்று வாழ்வதுதான் வாழ்க்கை என்று என்னும் ஒரு அண்ணன் .
தான் மட்டுமல்ல ..இந்தியாவில் இருந்து யாரும் வெளிநாட்டு வேலைக்குப் போகக் கூடாது என்று என்னும் தம்பி .இவர்களுக்கு இடையேயான குடும்பப் பிரச்னை எப்படி ஒரு நாட்டின் பிரச்னயானது என்பதுதான் இந்தப் படம் .
கதையைக் கேட்ட உடன் படம் தயாரிப்பதற்கான பட்ஜெட் போட்டுக் கொண்டு வந்தார் தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராஜு.
இசையமைப்பாளர் விஷால் சந்திர சேகர்,  ஆரம்பத்துல இந்தப் படத்தை  ஒத்துக்கல .
விஷால் சந்திரசேகர்
விஷால் சந்திரசேகர்
முழு கதையும் கேட்டு  திருப்தி வந்த பிறகுதான் ஒத்துக்கிட்டார் . அவர் கடமைக்கு வேலை செய்பவர் அல்ல எனது அப்போது புரிந்தது .
படத்துக்கு சிறப்பான பாடல்கள் மட்டுமல்லாது அற்புதமான பின்னணி இசையும் கொடுத்துள்ளார் .தனி ஒருவன் படத்துல பின்னணி இசை எப்படி பேசப்பட்டதோ, அப்படி இந்தப் படத்தின் பின்னணி இசையும் பேசப்படும் .
ஒரு மணி நேரம் 57 நிமிடம் ஓடும் இந்தப் படம் ஏராளமான சுவையான திருப்பங்களோடு உங்களை செல் போனை நோண்ட விடாமல் வேடிக்கை பார்க்க விடாமல் கட்டிப் போடும்.
சீட்டின் நுனியில் உட்கார்ந்து மொத்தப் படத்தையும் பார்ப்பீர்கள் ” என்றார் 
தயாரிப்பாளர்கள்  கோட்டீஸ்வர ராஜுவும் ஹேமா ராஜுவும்  நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வரவேற்றனர் .
தயாரிப்பாளர்கள்  கோட்டீஸ்வர ராஜு , ஹேமா  ராஜு
தயாரிப்பாளர்கள் கோட்டீஸ்வர ராஜு , ஹேமா ராஜு

” ஆகம் படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வருகிறது.

நல்ல கருத்து சொல்கிற வெற்றிப் படங்களை தொடர்ந்து எடுப்போம் ” என்றார் கோட்டீஸ்வர ராஜூ.
படக் குழுவை விஜி சந்தோசம், நித்ய ஸ்ரீ மகாதேவன் ஆகியோர் வாழ்த்தினார் . நிகழ்ச்சியில் இர்பான், ஜெயப்பிரகாஷ், தீக்சிதா, ரியாஸ் கான் , ஸ்ரீ ரஞ்சனி உள்ளிட்ட பலரும் பேசினர்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →