டுடு டூ… ஊ… பாட்ஷாவின் உல்டாவாம் அஞ்சான் !

rajini in baashsha
rajini in baashsha
பட்டையைக் கிளப்பிய பாட்ஷா

“ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி …”

ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தில் வந்த ஹிட்  வசனம் இது . அதற்காக அந்தப் படத்தையேவா  நூறு தடவை எடுப்பது ?
அஞ்சான் படத்தைப் பற்றி, அது பாட்ஷாவின் உல்டாதான் என்று  நஞ்சாக ஒரு செய்தி வருகிறது,  நம்பிக்கையான சோர்ஸ் மூலமாக .

சரி காதில் விழுந்ததை கச்சிதமாக சொல்லி கடமையை செய்வோம் .

பாட்ஷா படத்தின் கதை ஞாபகம் இருக்கா ? (மறக்க முடியுமா என்கிறீர்களா ?)

surya in anjaan
அஞ்சான் சூர்யா

அதில் பாட்ஷாவாக மாறும் ரஜினி , மற்றும் அவரது தம்பி கதாபாத்திரம்  இரண்டையுமே சூர்யா நடித்து இருந்தால் எப்படி இருக்கும்?. அதுதான் அஞ்சான் திரைப்படமுங்கோ …(எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது !)

பாட்ஷா படத்தில் ரஜினியின் ஆருயிர் மும்பை நண்பராக சரண்ராஜ் நடித்த கதாபாத்திரத்தில் அஞ்சான் படத்தில் வித்யுத் நடிக்கிறார் . பாட்ஷாவில் மும்பை ரகுவரன் சென்னை தேவன் என்று ரஜினிக்கு இரண்டு வில்லன்கள் அல்லவா? இதிலும் அப்படியே . ப்ளஸ் எக்ஸ்ட்ராவாக ஒரு வில்லன் .

“ஆகா .. சூப்பர் …! அப்படியானால் இன்னொரு முறை பாட்ஷா பார்க்கும் பரவச அனுபவத்தை   அஞ்சான் கொடுக்கும் என்று ஆரவாரமாக சொல்லுங்க” என்றால்…

ம்ஹும் ! உதடுகள் பெரிதாக பிதுக்கப்படுகின்றன.

”அடப்பாவி ! இன்னும் ரிலீஸ் ஆகாத படத்தை பற்றி இப்படி அபாண்டம் சொல்லலாமா ? இது நியாயமா? நேர்மையா? தர்மமா? அடுக்குமா/”  என்றால் பார்த்திபன் செய்திருக்கும் ஒரு விஷயத்தை நோக்கி கை காட்டுகிறது அந்த தகவல் சோர்ஸ் !

என்ன ?

rajini in badhsa
ஒரே தடவை போதும் ! ஒகே ?

பார்த்திபன் தனது கதை திரைக்கதை வசனம் படத்தை ஆகஸ்டு ஒன்றாம் தேதி வெளியிட திட்டமிட்டு இருந்தார். பின்னர் எட்டாம் தேதி வெளிவரலாம் என்று கூறப்பட்டது .

இந்நிலையில் ஆகஸ்டு பதினைந்தாம் தேதி அஞ்சான் ரிலீஸ் உறுதியாக , தனது படத்தின் ரிலீசை அதில் இருந்து ரெண்டு வாரம் தள்ளி ஆகஸ்டு 29ஆம் தேதிக்கு கொண்டு போனார் பார்த்திபன் .

காரணம் அஞ்சான் படம் பிரம்மாதமாக இருந்து சக்கைப் போடு போட்டால் அதனால் தனது படத்தின் வசூல் பாதிக்கப் படக் கூடாது என்பதுதான் .

தவிர இப்போதெல்லாம் எந்தப் படத்துக்கும் ரெண்டு வாரம்  தாண்டி ஓட்டம் இல்லை என்பதால் அஞ்சான் ரிலீஸ் ஆகி ரெண்டு வாரம் கழித்து வரலாம் என்று எண்ணி பார்த்திபன் எடுத்த முடிவு அது .

ஆனால் அஞ்சான் படம் பற்றிய அச்சச்சோ செய்திகளை கேட்டதும்,  தன்னமபிக்கையாக –  தில்லாக – அஞ்சான் ரிலீஸ் ஆகும் அதே தினத்தில் தனது படத்தை இறக்குகிறார் பார்த்திபன் .

“இப்போ கூடவா புரியல?” என்கிறது அந்த சோர்ஸ் !

கூட்டிக் கழிச்சு பார்த்தா கணக்கு சரியாத்தான் வருது . ஆனா படம் எப்படி வந்துருக்கோ ?

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →