நிபுணன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது .
நிகழ்வில் பேசிய இயக்குனரும் தயாரிப்பாளருமான அருண் வைத்யநாதன் ” நிபுணன் கதையின் மீது எழுதும் போதே எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது.
அர்ஜுன் சாரின் 150ஆவது படத்தை இயக்கியது எனக்கு மிக மிக பெருமை.
இந்த படத்தில் என்னுடன் பணி புரிந்த நடிக நடிகையர்,
மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் உமேஷ் பேசும் போது” ஊடகங்களின் கருத்தும் , மக்களின் கருத்தும் ஒன்றிப்போனது
இந்த படத்தின் வெற்றிக்கு மிக பெரிய அடித்தளமாகும்” என்றார்.
அர்ஜுன் பேசும்போது “நன்றி அறிவிப்புக்கு என்று ஒரு விழாவை நடத்தி இருப்பதற்காக இந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இந்த 150 பட பயணத்தில் என்னுடன் பணிபுரிந்த அத்தனை திரை கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
கதை வடிவத்தில் இருந்த இந்த அற்புதத்தை திரை வடிவத்தில் கொண்டு வந்தமைக்கு இயக்குனர் அருண் வைத்தியநாதனுக்கு நன்றி” என்று கூறினார்.