பேரழகி ஐ.எஸ்.ஓ @ விமர்சனம்

கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்க,  

 ‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’  ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும்,  காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை ஷில்பா மஞ்சுநாத்  கதாநாயகியாகவும் நடிக்க,

நடிகை சச்சுஇயக்குனர் சரவண சுப்பையா,  நடிகர்கள் லிவிங்ஸ்டன்,  உள்ளிட்ட பலர்  உடன் நடித்துள்ள படம் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ ‘.

ஐ எஸ் ஒ என்றால் அகில உலக தர அமைப்பு ( internatinal standardization organization ) என்று பொருள் . 
படம் எப்படி இருக்கு ? பேசலாம் . 

முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவ ர் தான் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர்களை கொண்டு ஒரு மருந்து கண்டுப்பிடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த மருத்துவ குறிப்பு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது. 

தான் இளமையாக நவீனமாக நடந்துகொள்வதை மகன்  (லிவிங்ஸ்டன்) விரும்பாத நிலையில் வீட்டை விட்டு வெளியேறும்  ஒரு பாட்டி ( சச்சு)  அந்த நிறுவனத்தை அணுகி தன்னை இளமையாக மாற்றிக்கொள்ளகிறார். பாட்டி சச்சு, இப்போது தனது பேத்தி போல ( ஷில்பா மஞ்சுநாத்)  மாறிவிடுகிறார்.

பேத்தியை காதலிக்கும் இளைஞன்  (விவேக்) பேத்தி போல மாறி விட்ட பாட்டியிடம் சிக்கி குழம்புகிறான் . 

ஒரு நிலையில் பேத்தி போல மாறிய பாட்டியின் உடல் பழைய நிலைக்கு மாற ஆரம்பிக்கிறது . இளம் பெண்ணாக நிறைய விளம்பரப் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கும் பாட்டி அதிர்ச்சி ஆகிறார் .

அதே நேரம் கார்ப்பரேட் நிறுவன அதிகாரி ( சரவணன் சுப்பையா ) ஊரில் உள்ள ஆதரவற்ற பாட்டிகளை எல்லாம் இளம்பெண்ணாக மாற்றி  வெளிநாட்டுக்கு அனுப்ப முயல , அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்தப் படம் .

சின்ன பட்ஜெட்டில் ஒரு விஞ்ஞானக் கதைப் படம் . 
ஷில்பாவுக்கு இரட்டை வேடம் . முயற்சி செய்து இருக்கிறார் . ஆனால் இன்னும் வித்தியாசம் காட்டி இருக்கலாம் . விவேக்  சொன்னதை செய்து இருக்கிறார் .

நவ்ஷத்தின் ஒளிப்பதிவும் சார்லஸ் தனா இசையும் ஒகே 
பாட்டி சிறுவயதில் அச்சு அசல் பேத்தி மாதிரியாகவா இருந்திருப்பார் ? அவர்கள் என்ன இரட்டையரா ? ஒரே நடிகை நடிப்பது ஓகே. ஆனால் தோற்றத்தில் நடை உடை பாவனையில் இன்னும் கொஞ்சம் தனித்தன்மை கொடுத்து இருக்கலாம் .

அடிப்படைக் கதை பாராட்டுக்குரியது . இன்னும் நல்ல திரைக்கதை , நல்ல படமாக்கல் இருந்திருக்கலாம் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *