பிச்சைக்காரர்களைத் தேடிக் கண்டு பிடித்து அவருக்கு வேலை வாங்கிக் கொடுக்கிறார் அறக்கட்டளை நடத்தும் ஒருவர் . பலன் பெற்ற பிச்சைக்காரர்களில் சிலர் அவர் மீது மிகுந்த விசுவாசமாக இருக்கிறார்கள் .
தவிர அவர் காண்ட்ராக்டராகவும் இருக்கிறார் .
எம் எல் ஏ ஒருவர் காண்ட்ராக்ட் எடுக்கும் விசயத்தில் போட்டி போடுவதோடு அறக்கட்டளைக்காரரை மிரட்டவும் செய்கிறார்.
அந்த எம் எல் ஏவுக்கு முதல்வரே பயப்படுகிறார் .
விசுவாசமான பிச்சைக்காரர் ஒருவரின் உணர்வைத் தூண்டி எம் எல் ஏ வைக் கொல்கிறார்கள் . (அதற்குள் படம் பார்ப்பவர்களைக் கொன்று விடுகிறார்கள். அது வேறு விஷயம் )
அப்புறம் என்ன நடந்தது என்பதே உணர்வு .
பிச்சைக்கார்களாக நடித்து இருக்கும் சிலரின் உழைப்பை பாராட்டலாம் .
மற்ற எல்லாருமே செயற்கையான நடிப்பு . நல்ல நடிகரான அருளையே இயல்பாக நடிக்க விடாமல் சொதப்பி இருக்கிறார்கள் . சுமனும் வீணடிக்கப்பட்டு இருக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவரும் ஸ்கூல் டிராமாவில் நடிப்பது போல நடிக்கிறார்கள்
கதைக்கேற்ற திரைக்கதை அமைப்பது , காட்சிகளின் போதுமான நீளத்தை முடிவு செய்வது , கதாபாத்திரங்களின் குணாதிசயத்தை முடிவு செய்வது , இயல்பாக நடிக்க வைப்பது , சமூக நியாயங்களின் பக்கம் நிற்பது இப்படி எதிலும் அக்கறையோ திறமையோ இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் படம் .
வில்லனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து , கையில் பட்டாலே ஆபத்தான விஷம் என்று குறியீடு காட்டி தமிழ் தேசிய உணர்வுக்கு எதிரான சீழ் பிடித்த அரிப்பை சொறிந்து கொள்வதில் காட்டிய அக்கறையில் ,( இதில் கப்பலோட்டிய தமிழன், திருப்பூர் குமரன் என்று அசந்தர்ப்பமாக வசனம் பேசி விட்டால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விடலாம் என்ற நம்பிக்கை வேறு.. ஹா ஹா ஹா )
கொஞ்சமாவது நல்லவிதமாக படம் எடுப்பதில் காட்டி இருக்கலாம்
அரைகுறை அனர்த்த இரண்டுங்கெட்டான் டுபாக்கூர் முயற்சிகளை தமிழ் சினிமா ரசிகன் என்றுமே அங்கீகரித்தது இல்லை .
உணர்வு …… கூமுட்டைத்தனமும் கொழுப்பும் !