எதிர்பார்ப்பில் எகிறும் 24.

rendu 999

சூர்யா நடிக்கும் 24. படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது .

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட்  நிறுவனம் தயாரிக்க, ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா வெளியிட, 

சூர்யா , சமந்தா, நித்யா மேனன் சரண்யா  ஆகியோர் நடிப்பில் தமிழில் அலை, யாவரும் நலம் ஆகிய படங்களையும்  தெலுங்கில் 

இஷ்க் , மனம் ஆகிய படங்களையும் இயக்கிய விக்ரம் குமார் இயக்கும்  படம் 24.

ஒரு கடிகாரம் கண்டுபிடிக்கப்படுவதால் ஏற்ப்படும பிரச்னைகளை மையமாகக் கொண்டு சயின்ஸ் பிக்ஷன் படமாக வரும் இந்தப் படத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடிக்கிறார் . அதில் ஒன்று வில்லன் கதாபாத்திரம் .

rendu 6

மே ஆறாம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தில் சூர்யா ஏற்று இருக்கும் கதாபாத்திரங்களை வைத்து  ‘ஆத்ரேயா ரன்’ என்ற பெயரில் ஒரு வீடியோ கேம் வெளியிடப்பட்டுள்ளது . 

அதை அறிமுகப்படுத்தவும் படம் பற்றிப் பேசவும் பத்தீர்க்கையாளர்களை சந்தித்தது படக் குழு .

வீடியோ கேம் வித்தியாசமான தடைகள், திருப்பங்கள்  மற்றும் புதிர்களோடு எல்லோரையும் கவரும் வகையில் இருந்தது . முன்னோட்டமும்  பாடல் துணுக்குகளும் திரையிடப்பட்டன.  

பிரம்மிப்பான எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது முன்னோட்டம் .  திருவின் ஒளிப்பதிவில் ஒரு 3D தன்மை தெரிகிறது. சிறப்பு 

நிகழ்ச்சியில் பேசிய பாடலாசிரியர் மதன் கார்க்கி

rendu 9

” பொதுவாக எனக்கு டைம் டிராவல் கதைகள் ரொம்பப் பிடிக்கும் . அப்படி ஒரு படமான இந்த 24-ல் பணியாற்றுவது சந்தோஷமான விஷயம் . 

இயக்குனர் விக்ரம் குமார் மனம் படத்தில் நாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா , நாக சைதன்யா என்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பரம்பரை நடிகர்களில்,

மகனை அப்பாவாக தாத்தாவை பேரனாக பயன்படுத்தி இருப்பார். 

 அதே போல இந்தப் படத்தில் என் அப்பாவுக்குத் தரவேண்டிய  பக்குவமான பாடல்களை எனக்கும் , எனக்குத் தரவேண்டிய இளமையான பாடல்களை அப்பாவுக்கும் கொடுத்து வித்தியாசமாக பாடல் வாங்கி இருக்கிறார் . 

அதனால் பாடல்களும் மிக சிறப்பாக வந்துள்ளன ” என்றார் .

நடிகர் மோகன்ராம் பேசும்போது

rendu 4

” சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் பெயரிலேயே எண்ணும் எழுத்தும் இருக்கிறது . இதை ஆல்ஃபா நியூமரிக்கல் என்பார்கள். அவர் தயாரிக்கும் படங்களின் பெயரையும் பாருங்கள் . 

முதல் படம் 36 வயதினிலே . அடுத்த படம் பசங்க 2.  இப்போது 24  .  இந்தப் படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. 

படத்தில் எனது கேரக்டர் உட்பட எதையும் இப்போது வெளியே சொல்ல முடியாது . ஆனால் மே ஆறாம் தேதி உங்களுக்கு ஓர் அற்புத திரை விருந்து இருக்கிறது ” என்றார் .

நடிகை சரண்யா பேசும்போது

rendu 3” எல்லா படத்திலும் ஆண் பிள்ளைகளின் அம்மாவாகவே நடிக்கிறேன் . இதிலும் மகனின் காதலுக்கு ஆதரவு தருகிற அம்மா. ஆனால் படத்தின் கதை பிரம்மாதமானது.

மிகச் சிறந்த இயக்குனரான விக்ரம் குமார் சாருடன் எனக்கு இது நான்காவது படம். சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் எங்களை கவனித்துக் கொண்ட விதம் மறக்க முடியாத ஒன்று. ” என்றார் .

ஒளிப்பதிவாளர் திரு தன்  பேச்சில்

rendu 7

” காதல், குடும்ப செண்டிமெண்ட், திரில் , சயின்ஸ்பிக்ஷன், ஆக்ஷன் காமெடி எல்லாம் கொண்ட படம்  இது . விக்ரம் குமார் என்னை முழுமையாக இயங்க அனுமதித்தார்.  

தயாரிப்பு நிறுவனம் கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது . சூர்யாவின் நடிப்புக்கு ஒளிப்பதிவு செய்தது சந்தோசம் ” என்றார் . 

2D எண்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் ராஜ சேகரப் பாண்டியன் பேசும்போது

rendu 2

சரண்யா ஒரு லக்கி சார்ம். படப்பிடிப்பில் சரண்யா மேடம் கிட்டத்தட்ட நிஜ அம்மா போலவே இருந்தார் .

திருவின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலம் . 

விக்ரம் குமார் இந்தக் கதையை பல தடவை சொல்லச் சொல்லிக் கேட்டேன். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது அவர் சொல்லும் விதம் . அதே நேரம் சொன்னதை விட சிறப்பாக படமாக்கி இருக்கிறார் . 

எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எல்லா படங்களுக்கும் ஒரு தூண் போல இருப்பவர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா. இந்தப் படத்தை ஆரம்பித்தவர் அவரே .

வழக்கமான  எங்கள் படங்களை எல்லாம் வெளியிடும் அவரே இந்தப் படத்தையும் வெளியிடுகிறார். ” என்றார் .

இயக்குனர் விக்ரம் குமார் தன்  பேச்சில்

rendu

” படம் மிக சிறப்பாக வந்துள்ளது . ஏ. ஆர் ரகுமான் இந்தப் படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்ட உடனே இந்தப் படம் உத்வேகம் எடுத்து கிளம்பியது . 

சரண்யாவின் பங்களிப்பு சிறப்பானது . சூர்யா சாரின் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மிக பிரம்மாதமான ஒத்துழைப்புக் கொடுத்தது . 

ஆனால்  ஹீரோவாக  சூர்யா இல்லாமல் இந்தப் படத்தை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது . சார்… நீங்க நடிக்க ஒப்புக் கொண்டதற்கு மிக்க நன்றி சார் ” என்றார்  நெகிழ்வோடு 

சூர்யா தனது பேச்சில்

rendu 5” இது ஞானவேல் ராஜா ஆரம்பித்து  வைத்த படம் . வேறொரு கதை கேட்கப் போய் , எதிர்பாராமல் எனக்கு வந்த கதை இது . மிக சிறப்பான கதை . சிறப்பாக படம் ஆக்கி இருக்கிறார் விக்ரம் குமார் .  

திருவின் ஒளிப்பதிவு இந்தப் படத்துக்கு பெரிய பலம் . படம் பார்த்த எல்லோரும் அவரை கொண்டாடுகிறார்கள். அவர் படத்துக்கு கொடுத்திருக்கும் சக்தி பிரம்மாதமானது . 

சரண்யா சிறப்பாக நடித்து உள்ளார். நித்யா மேனன் . சமந்தா இவர்களின் கேரக்டர்களும் மிக சிறப்பாக வந்துள்ளது. . ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ” என்றார் .

நிறைவாகப் பேசிய ஞானவேல் ராஜா ” 

rendu 8

நடிகர் மோகன்ராமின் மகள் வித்யுத் லேகா தெலுங்கில் பெரிய நடிகையாக வந்து கொண்டு இருக்கிறார் . அண்மையில் ஒரு தெலுங்குப் படத்தில் அட்டகாசமாக நடித்துள்ளார் .

நகைச்சுவையில் கோவை சரளா அளவுக்கு அவர் வருவர் என்று எல்லோரும் அங்கே சொல்கிறார்கள் .வாழ்த்துகள் 

 இந்த 24 படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.  இது  உலகம் முழுக்க 1300 தியேட்டர்களுக்கும் மேல் வெளியாகிறது . அமரிக்காவில் மட்டும் 200 தியேட்டர்கள் .

rendu 99

தமிழகம் மட்டுமல்லாது கேரளா ஆந்திராவிலும் பெரிய வரவேற்பும் எதிர்பார்ப்பும்  இருக்கிறது .

 தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு இந்தப் படம் தெலுங்கிலும வரும் மே ஆறாம்தேதி வெளியாகும் நிலையில் , அங்கு பல நேரடி ஆந்திரப் படங்களே சூர்யா படத்தோடு போட்டி போட விரும்பாமல் ,

தங்கள் படங்களை தள்ளி வெளியிட முடிவு செய்துள்ளார்கள் . 

அந்த அளவுக்கு நம்ம சூர்யாவுக்கு அங்கு வரவேற்பு இருப்பது பெருமைக்குரிய விஷயம் ” என்றார் .

உண்மை . !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →