புது முகங்களுக்கு வாய்ப்புத் தரும் ‘அக்பர்’ எம்.ஏ.ஹபீப் !

Producer M A HABEEP (2)
தமிழ் சினிமாவில் ஒரு படம் தயாரித்துவிட்டு காணாமல் போகும் தயாரிப்பாளர்களுக்கு இடையே, தொடர்ந்து படங்கள் தயாரிப்பது ஒரு சில தயாரிப்பாளர்கள் தான்.
அந்த வரிசையில் புதிதாக இடம் பிடித்திருக்கிறார் எம்.ஏ.ஹபீப்.
தனது முதல் தயாரிப்பான ‘சேதுபூமி’யைத் தொடர்ந்து அவர் தயாரிக்கும் இரண்டாம் படம்‘அக்பர்’ 
தயாரிப்பாளர் எம்.ஏ.ஹபீப் அது பற்றிக் கூறும்போது ,
“ராயல் மூன் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் நான் தயாரித்த முதல் படம் ‘சேதுபூமி’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இந்த அக்பர் படத்தையும் இயக்குகிறார். தமன் ஹீரோவாக நடிக்கிறார்.
முத்துராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார். வி.டி.பாரதி – வி.டி.மோனிஷ் இசையமைக்கிறார்கள். இப்படி முழுக்க முழுக்க ‘சேதுபூமி’ படத்தில் பங்கேற்றவர்களுக்கு தான், இந்த படத்திலும் வாய்ப்பு அளித்துள்ளேன்.
கதாநாயகி மட்டும் புதுமுகம். அநேகமாக மும்பை அல்லது பெங்களூரில் இருந்து கதாநாயகி ஒருவரை தேர்வு செய்ய உள்ளோம். அதற்கான பணியில் இயக்குநர் ஈடுபட்டுள்ளார்.
‘அக்பர்’ என்ற தலைப்பைக் கேட்ட உடன், இது என்ன வரலாற்று படமா? என்று கேட்கிறார்கள். ’அக்பர்’ வரலாற்று படம் இல்லை என்றாலும், தமிழ் சினிமாவின் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் படமாக இருக்கும்.
படத்தின் முழு கதையும் ராமநாதபுரம் மாவட்டத்தில்தான் நடக்கிறது. ‘சேதுபூமி’ படத்தில் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் உணர்வுகளை சொன்னது போல,
இந்த படத்தில் அம்மாவட்டத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் எப்படி சொந்த பந்தங்கள் போல பழகுகிறார்கள் என்பதை எதார்த்தமாக சொல்லப் போகிறோம்.
அதற்காக இப்படத்தின் கதை விவாதத்தைக் கூட இயக்குநர் ராமநாதபுரத்திலே நடத்துகிறார்.
இப்படத்தின் மற்றொரு சிறப்பு அம்சம், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகள் அனைவரையும்,
  80 மற்றும் 90 களில் முன்னணி கதாநாயகிகள் மற்றும் கதாநாயகர்கள் வலம் வந்தவர்களாக தேர்வு செய்துள்ளோம். 
தற்போது கதை விவாதத்தில் உள்ள ‘அக்பர்’ படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய உடனே, எனது மூன்றாவது படத்தின் தயாரிப்பு பணிகளையும் தொடங்க திட்டமிட்டுள்ளேன்.
ஒரு படம் முடிவதற்குள் எதற்கு அடுத்த படத்தை தொடங்குகிறீர்கள்?, என்று என்னிடம் கேட்கிறார்கள்.
நான் சேதுபூமி படம் தயாரிக்கும்போதே கூறினேன், தமிழ் சினிமா கலைஞர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற முடிவில் நான் இருக்கிறேன் என்று .
அதனால், நான் தொடர்ந்து பல படங்கள் தயாரிப்பேன். அதன் மூல பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன்.” என்று தயாரிப்பாளர் எம்.ஏ.ஹபீப் தெரிவித்தார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →