மும்பையைச் சேர்ந்த அமைரா தஸ்தூர் முதல் கதாநாயகியாகவும் ஐஸ்வர்யா தேவன் என்ற மலையாள வரவு இரண்டாவது கதாநாயகியாகவும் (இப்ப இப்படி மாத்திட்டாங்க) நடிக்கும் இந்தப் படத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழும் நான்கு காதல் நிகழ்வுகளில் தனுஷ் காதலனாக நடிக்கிறார் .
இரட்டை எழுத்தாளர்கள் சுபா இந்தப் படத்தின் கதை திரைக்கதையில் கே வி ஆனந்தோடு இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள் . இந்தக் கூட்டணி ஒன்றும் புதுசு அல்ல
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் உட்பட, விழாவில் கலந்து கொண்ட எல்லோரும் தனுஷின் நடிப்புத் திறமையை வெகுவாக புகழ்ந்து தள்ளினார்கள் . “ரஜினியை விட கமலை விட மிகப்பெரிய நடிகர் தனுஷ் ” என்ற ரீதியில் ஆர்.வி.உதயகுமார் பேச, மேடையில் இருந்து நடையைக் கட்டுவது போல பாவ்லா காட்டி கலகலக்க வைத்தார் தனுஷ் .

“இப்ப உள்ள நடிகர்களிலேயே அதிகமாக காதல் அனுபவம் .. அதில் தோல்வி வெற்றி எல்லாம் பார்த்த நடிகர் தனுஷ்தான் .. அதாவது நடிச்ச கதாபாத்திரங்கள் மூலமா ..” என்று கலகலக்க வைத்து ஆரம்பித்த கே வி ஆனந்த் ” பொதுவா என் படங்களில் ஏதாவது சமூக பிரச்னை முக்கியமாவும் காதல் செகண்டரி விஷயமாகவும் இருக்கும் . ஆனா இது முழுக்க முழுக்க காதலை சொல்லும் படம் .அதுக்கு தனுஷ் ரொம்ப பொருத்தமா இருப்பாருன்னு முடிவு செஞ்சு அவரை நடிக்க அழைச்சேன் .

அதே மாதிரி ஒரு குறிப்பிட்ட கேரக்டரை கார்த்திக் பண்ணினா நல்லா இருக்கும்னு நினைச்சப்ப அவரு எல்லாம் நடிக்க மாட்டாருன்னுதான் நினைச்சேன். ஆனா ஒத்துக்கிட்டு நடிச்சதோட பிரம்மாதமா நடிச்சு இருக்காரு . அவர் கூட ஒர்க் பண்ண வாய்ப்பு கிடைச்சது எனக்கு பெரிய கொடுப்பினை .
ஆனா கதாநாயகியா அறிமுகம் ஆகும் அமைரா நடிப்பில் தனுஷ் , கார்த்திக் இவங்க ரெண்டு பேருக்கும் ஈக்குவலா நடிச்சு இருக்காங்க .
ஹாரீஸ் ஜெயராஜ் முதன் முதலா ஒரு கானா பாட்டுக்கு இசை அமைச்சு இருக்காரு . டங்கா மாரின்னு ஆரம்பிக்கும் அந்தப் பாட்டை ரோகேஷ்னு ஒரு கானா கவிஞர் எழுதி இருக்கார். வைரமுத்து சார் மூணு பாடல்களை அற்புதமா எழுதி இருக்காரு . கபிலன் வைரமுத்து ஒரு பாட்டுல மணிச்சிகைன்னு ஒரு சங்ககாலப் பூவின் பெயரை பயன்படுத்தி இருக்காரு .
டங்கா மாரியில நாங்க பண்ணி இருக்கிற பாவத்துக்கு பரிகாரமா இந்த நாலு பாட்டுகள் இருக்கும் .இவ்வளவு விதம் விதமான பாடல்கள் ஹாரீஸ் ஜெயராஜ் போட்டு இருக்கறது இதுதான் முதல் தடவை ” என்றார் .

அது சரி டங்கா மாரி என்றால் என்ன? மாத்தி மாத்தி பேசுற பொண்ணு என்று அர்த்தமாம் . சர்தான் பா !
சரி .. படத்தின் டிரைலரும் பாடல்களும் எப்படி இருக்கு .
படத்தின் வண்ணம் , காட்சி அமைப்பு, ஷாட்கள், கேமரா கோணங்கள் ,பின்புலங்களை பயன்படுத்தும் விதம் , அழகழகான லொக்கேஷன்களில் அழகோ அழகான பெண்கள் …. அவர்களை கேமராவில் விழுங்கும் விதம் , உடைகள், ஆர்ட் டைரக்ஷனை பயன்படுத்தும் விதம்…. ஒரு நொடி கண் இமைக்கக் கூட மனசு வரவில்லை
சும்மா சொல்லக் கூடாது… கே வி ஆனந்த் நிஜமாவே ரசனைக்கார மனுஷன்யா !