வன்முறையை வளர்க்கும் அஞ்சான் கேம்ஸ்

surya
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த கோச்சடையான் படத்துக்கான விளம்பர உத்திகளின் ஒரு பகுதியாக கோச்சடையான் கேம்ஸ் என்ற பெயரில் வீடியோ கேம்களை வெளியிட்டார்கள் .அது படத்தின் வெற்றிக்கு எந்த அளவுக்கு உதவியது என்பது ஒரு பக்கம் இருக்க, இப்போது மற்ற படங்களுக்கும் வீடியோ கேம்ஸ் வெளியிடுகிற கலாச்சாரத்தை தொடர்ந்து இருக்கிறது அஞ்சான் படக்குழு .கோச்சடையான் படத்துக்கு அடுத்தபடியாக அஞ்சான் படத்துக்கும் இப்போது மொபைல் கேம்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. ஹங்கமா என்ற டிஜிட்டல் மீடியா நிறுவனமும் கேம்சாஸ்த்ரா என்ற வீடியோ கேம் நிறுவனமும் இணைந்து இந்த அஞ்சான் படத்துக்கான மொபைல் வீடியோ கேமை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

mobile game launch of anjaan
வன்முறை வெள்ளோட்டம்

இதற்காக நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் “கோச்சடையான் படத்துக்கான வீடியோ கேமை 1.2. மில்லியன் மக்கள் பார்த்தார்கள் . ஆனால் அஞ்சான் படத்துக்கான இந்த மொபைல் கேமை 12 மில்லியன் மக்கள் பார்ப்பார்கள்” என்று படக் குழுவினர் பெருமிதப்பட்டு பேசியது  ஒரு பக்கம் இருக்கட்டும் .

ஆனால் அஞ்சான் படத்துக்காக வெளியிடப்பட்டுள்ள மொபைல் கேம் குழந்தைகள் மனதில் வன்முறையை தூண்டும் படியாக இருப்பதுதான் வருத்தமான விஷயம்.

சூர்யா காரில் பலரையும் துரத்தி செல்வதுதான் இந்த மொபைல் கேமின் அடிப்படை .. விளையாட்டு முழுக்க  துப்பாக்கி ,  ஷாட் கன் உட்பட பலவித ஆயுதங்கள்,  குண்டு வெடிப்பு, கார் மீது காரை மோதுவது, கார் சிதறுவது  என்று இதில் வன்முறை மிகுந்து காணப்படுகிறது. எப்படி குழந்தைகள் WWF பார்ப்பது அவர்களின் மன நலன் குண நலத்தை பாதிக்குமோ அப்படியேதான் இதுவும் பாதிக்கும் என்பதே மனநல மருத்துவரின் கருத்தாக உள்ளது

ஒரு பிரபல சினிமா பெயரில் வரும் விளையாட்டில் , சிறுவர் சிறுமியரை  அதிக ரசிகர்களாக கொண்ட ஒரு நடிகரின் படம் தொடர்பாக வரும் மொபைல் கேம் விளையாட்டில் இவ்வளவு  வன்முறையை வைக்க வேண்டுமா ? அதற்கு பதிலாக வீரம் , நல்ல குணங்கள் இவற்றை அடிப்படையாக வைத்தோ அல்லது புதுமையான கார் பந்தய அடிப்படையிலோ  வெகு சுவாரஸ்யமாக இந்த கேமை வடிவமைத்து இருக்கக் கூடாதா என்பதுதான் சமூக அக்கறையாளர்களின் அஞ்சாத கேள்வி .

யாராவது பதில் சொல்வார்களா ?

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →