எலி @ விமர்சனம்

NA0A6064
சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஜி.சதிஸ் குமார் தயாரிக்க, வடிவேலு, சதா , பிரதீப் ராவத் நடிக்க , யுவராஜ் தயாளன் இயக்கி இருக்கும் படம் எலி. ரசிகர்களிடம் இந்த எலி சிக்குமா ? இல்லை இந்த எலியிடம் ரசிகர்கள் சிக்குவார்களா ? பார்க்கலாம் . 1960களில் சென்னையில் நடக்கும் கதை. அப்போது நாடு முழுதும் சிகரெட் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்க, சிகரட்டை விற்பனை செய்வதும் புகைப்பதும் சட்டப்படி குற்றம் என்ற (அற்புதமான) நிலை . அதே நேரம் கடைகளில் ரகசிய விற்பனையும் அதை வாங்கி போலீசில் பிடிபடுவோரின் கூட்டமும் குறையவில்லை .
காரணம் ஒரு தாதா (பிரதீப் ராவத்) பெரிய அளவில் வெளி நாட்டில் இருந்து சிகரெட் கடத்தி வந்து விற்பனை செய்வதுதான். அவனை போலீசால் பிடிக்க முடியவில்லை . காரணம் போலீஸ் துறையிலேயே அவனுக்கு கையாட்கள் இருக்கிறார்கள். எனவே அவனது பாணியில் ஒரு ஒற்றனை அவனது கூட்டத்துக்குள் அனுப்பி அவனது நடவடிக்கைகளை மோப்பம் பிடித்து அந்தக் கூட்டத்தை வளைக்க திட்டமிடுகிறது போலீஸ். அவர்கள் தேர்ந்தெடுப்பது,  வெள்ளைகார அம்மா எலிசபத்துக்கும் தமிழ் நாட்டு அப்பா சாமிக் கண்ணுவுக்கும் காதல் திருமணத்தில் பிறந்த எலிச்சாமி என்கிற எலியை (வடிவேலு)
 IMG_1673
நகைக்கடை, வங்கி என்று விதம் விதமாகத் திட்டமிட்டு கொள்ளையடித்து வாழும் எலிச்சாமிக்கு போலீஸ் ஆக வேண்டும் என்பதே ஆசை. ஆனால் நெஞ்சு அரை இஞ்ச அகலம் குறைந்ததால் போலீஸ் தேர்வில் தோற்றுப் போகிறார் . எவ்வளவோ கெஞ்சியும் தன்னை தேர்வு செய்யாத அந்த அதிகாரி வீட்டில் கொள்ளையடிக்கிறார் எலி. அப்போது அங்கு இன்னொரு போலீஸ் அதிகாரி வந்தும் அவரையும் ஏமாற்றி தப்பிக்கிறார் . எலிச்சாமி தங்கள் இருவரையும் ஏமாற்றி கொள்ளையடித்த விதத்தில் ஈர்க்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள், சிகரெட் கடத்தல் தாதாவின் கோட்டைக்குள் புகுந்து உளவு பார்க்க எலிதான் சரியான நபர் என்று முடிவு செய்கிறார்கள் .இந்த விஷயத்தை வெற்றிகரமாக முடித்தால் எலியை போலீஸ் ஆக்குவதாகவும் உறுதி தருகின்றனர் . அதன்படி கடத்தல் கும்பலுக்குள் எலி நுழைய, 

NA0A5238
அப்புறம் என்ன ஆச்சு என்பதே இந்த எலி .

தெனாலிராமனை அடுத்து வடிவேலு நடித்து இருக்கும் படம். கெட்டப் செட்டப் எல்லாம் அருமை . சில நேரம் சிரிக்க வைக்கிறார் . சில நேரம் புன்னகைக்க வைக்கிறார் . சில நேரம் ரசிக்க வைக்கிறார் . பே பே பே என்று ஆரம்பித்து மஹபூபா  வரை போவது ரகளை . பேங்க் கொள்ளை காட்சி நல்ல காமெடி .

கிளைமாக்ஸ் சமயத்தில் வில்லன் தன்னை கண்டுபிடித்து விட்டதாக நினைத்து உள்ளுக்குள் பயந்து ஆனால் வெளியே காட்டிக் கொள்ளாமல் கர்ஜிக்கும் காட்சியில் கலகலக்க வைக்கிறார் .

படத்தின் பெயருக்கு ஏற்ப சண்டைக் காட்சிகளில் எலியின் உடல் மொழிகளோடு அவர் நடந்து கொள்வதும்பாராட்டவைக்கிறது .

அவர் தலையில் இருக்கும் எலி வடிவ ‘விக்’ சிறப்பு

IMG_0789

 ஆனால் முழுப் படத்துக்கும் இவை மட்டுமே போதுமா ?

காட்சியில் மக்கள் நேரடியாக பார்த்து விட்ட விஷயத்தை மீண்டும் ஒருமுறை வாய் விட்டோ அல்லது மைன்ட் வாய்சிலோ இன்னும் பேசிக்கொண்டு இருப்பது எல்லாம் கொடுமை வடிவேலு .

சதா ஜஸ்ட் லைக் தட்  ஆடுகிறார் . பாடுகிறார் . முறைக்கிறார் . சிரிக்கிறார் .ஒகே . 

தோட்டா தரணியின் கலை இயக்கத்தில் நடன அரங்குகள் அருமை .

NA0A4566

ஆனால் தாதாவின் இருப்பிடம் போன்ற அரங்குகளில் 1960களின் கால கட்ட குணாதிசயம் முழுமையாக வெளிப்படவில்லை .

ஜேம்ஸ்பாண்ட் படங்களின் தீம் மியூசிக்கை சற்றே இழுத்து இந்தப் படத்துக்கு ஒரு தீம் மியூசிக்கையும், எம் ஜி ஆர் நடித்த ராமன் தேடிய சீதை படத்தில் வரும் ”மச்சானா மாமானா யாரோ இவரு” பாடலின் பாணியில் சதாவுக்கு ஒரு அறிமுகப்பாடலும்,  கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.   பின்னணி இசையில் அந்தக் கால இசையை  கொண்டு வர முயன்று இருக்கிறார் . அவரது மனசில் அது இருந்தாலும் அதற்கேற்ற இசைக் கருவிகளை பயன்படுத்தாததால் , அந்த முயற்சி வெற்றி பெறவில்லை .

ஆராதனா இந்திப் படத்தில் இடம்பெற்ற மேரே சப் நோக்கி பாடலுக்கு வடிவேலு சதா ஆடிப் பாடுவது நகைச்சுவையாகவும் இருக்கிறது . படமாக்கி இருக்கும் விதம் வலிக்கவும் செய்கிறது .

NA0A8265

பால் லிவிங்க்ஸ்டனின் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது . எடிட்டிங்கை குறை சொல்ல எல்லாம் ஒன்றும் இல்லை .

1960களின்  சென்னையைக் காட்ட கை ரிக்ஷாவை எல்லாம் காட்டுகிறார்கள் . ஆனால் எங்கு பார்த்தாலும் தெருவில் சோடியம் வேப்பர் விளக்குகள் எரிகின்றன. நவீன கட்டிடங்கள் தெரிகின்றன.  கால கட்டத்துக்கு அப்பாற்பட்டு வடிவேலு ” அவனவன் கிட்னி, இதயம், கல்லீரல் , மண்ணீரல், எல்லாத்தையும் தொலைச்சுட்டு நிக்கிறான் ” என்று வசனம் பேசுகிறார் .

NA0A8094

ஒரு தயாரிப்பாளராக தனது பங்களிப்பை அருமையாக வியந்து பாராட்டும்படி மிக சிறப்பாக செய்து இருக்கிறார் சதிஸ் குமார் . இப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் கிடைப்பது ஒரு கொடுப்பினை.

உண்மையிலேயே இந்தப் படம் ஒரு வித்தியாசமான முயற்சி என்பதில் சந்தேகமே  இல்லை . ஆனால் முயற்சியில் தீவிரம் இல்லை . இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் .

IMG_0043

மொத்தத்தில் எலி….. ஒலி !

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →