கில்லி பம்பரம் கோலி @ விமர்சனம்

ஸ்ரீ சாய் பிலிம்ஸ் சர்கியூட் தயாரிப்பில், பிரசாத், நரேஷ், தமிழ், தீப்தி ஷெட்டி, சந்தோஷ், கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய் நடிப்பில் மனோகரன்,  இயக்கி இருக்கும் படம் கில்லி பம்பரம் கோலி.

 சிறுவயதில் கில்லி , பம்பரம் , கோலி போன்ற ஆட்டங்களில் திறமையுடன்  விளங்கிய மூன்று இளைஞர்களும் , நடனத்தில் ஆர்வம் உள்ள ஒரு பெண்ணும் விளையாட்டுகள் பயன்தராமல் நடனமும் கற்றுக் கொள்ள முடியாத நிலையில் படிக்கவும் முடியாமல் , ஒரு நிலைக்குப் பிறகு மலேசியாவில் வேலைக்கு வருகிறார்கள். அவர்களது முதலாளிகள் கசக்கிப் பிழிகிறார்கள் .

 தவிர சந்திரா என்ற ரவுடியின் கோபத்துக்கும் ஆளாகிறார்கள் . ஒரு நிலையில் அனைவரும் நண்பர்கள் ஆகிறார்கள் . எல்லோரும் சந்திராவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இணைந்து எதிர்க்க முயல்கிறார்கள் . ஆனால் சந்திரா அவர்களை அடித்து துவைப்பதோடு இளம்பெண்ணை சீரழிக்கவும் முயல்கிறான்.

 ஒரு நிலையில் அவர்கள் ஒன்று சேர்ந்து , ”நமக்கு தெரிஞ்ச கலையில் அடுத்தவங்களை வீழ்த்துவது வீரம் இல்லை . அவர்களுக்கு தெரிந்த கலையில் அவர்களை வீழ்த்துவதுதான் வீரம். 
எங்களுக்கு சண்டை போட தெரியாது . அதனால கில்லி , பம்பரம் , கோலி இதில் ஏதாவதில் எங்களை வீழ்த்து” என்கிறார்கள் .

 சந்திரா கில்லி ஆட கற்றுக் கொள்ள , அப்புறம் என்ன நடந்தது என்பதே படம் . மலேசியாவில்  எடுக்கப்பட்ட படம் . பத்துமலை முருகன் கோவிலை எழிலாக காட்டுகிறார்கள் .  சந்தோசம் .

 நாக கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் இரவு நேரத்தில் மலேசிய டுவின் டவர்ஸ் சும்மா தகதகக்கிறது. அருமை.

 நகைச்சுவை என்று காட்சிகள் இருக்கின்றன . பேசுகிறார்கள் . ஆடுகிறார்கள் . பாடுகிறார்கள். ஓடுகிறார்கள் . படமும் போகிறது . உப கதாபாத்திரங்களில் பலரது நடிப்பும் படு செயற்கை .

முக்கிய நடிகர்களும் பாராட்டும்படி செய்யவில்லை. நடிக்கும் பலருக்கு உதடுகள் மட்டுமே அசைகிறது . சந்திரா அணி இந்த அப்பாவிகளை பார்க்கும் இடம் எல்லாம் அடித்து துவைக்கிறது . மலேசியாவில் போலீஸ் என்று யாருமே இல்லை .

லாஜிக் மருந்துக்கும் இல்லாத கிளைமாக்ஸ் ஏரியா நகைச்சுவையாகவும் இல்லை .

 மலேசியாவில் வேலைக்கு போய் கஷ்டப்படும் நம்மவர்கள் என்ற விஷயத்தை எடுத்தவர்கள் அதை வைத்து இன்னும் நல்ல கதை திரைக்கதை வசனம் இயக்கம் எல்லாம் செய்து இருக்கலாம் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *