ஐ படத்தின் கதை இதுதான் என்று அனைவரும் ஏற்கும் வகையில் உலாவரும் ஒரு கதை, ஓர் அறிமுக இயக்குனரை ”ஐயோடா” என்று சொல்ல வைத்திருக்கிறது. அவர்தான் ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படத்தின் இயக்குனர் கஸாலி.
ஏன் அந்த ஐயோடா?
ஐ படத்தின் கதை என்னவென்று ஊடகங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார்களோ, அதுதான் அப்படியே சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தின் கதையும்!

நாம என்ன சொல்வது என்று முடிவு செய்வதற்கு முன்பு வலைதளங்களில் வரும் ஐ படத்தின் கதையையும், அப்படியே சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தின் கதையையும் பார்க்கணும் இல்லையா?
இந்நிலையில் எமி ஒரு பெரிய தனியார் நிறுவனத்தின் விளம்பர தூதராக மாறுகின்றார். அதன் பின்னர் ஒலிம்பிக் போட்டியின் தூதராக மாறுகின்றார். எனவே விக்ரமால் எமியை நெருங்க முடியவில்லை. இதனால் தானும் ஒரு மாடலாக வேண்டும் என விக்ரம் முடிவு எடுக்கின்றார். தன்னுடைய கிராமத்தில் உடற்பயிற்சியை மேற்கொள்கின்றார்.
அதே சமயம் வில்லன் உபேன் ஒரே நாளில் அழகிய தோற்றம் பெற வேண்டும் என்று ஒரு மருந்தை கண்டுபிடிக்கின்றார்.9ஏழு நாள் சிகப்பழகு கிரீமை விட இது ரொம்ப பவர் போல!) அதை தன்னுடைய உடம்பிலேயே பரிசோதனையும் செய்து பார்கின்றார். ஆனால் மருந்து சரியாக வேலை செய்யாமல் அவரை விசித்திரத் தோற்றத்திற்கு மாற்றிவிட்டது. இருப்பினினும் மருந்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்ய முயற்சிக்கிறார்.
அதை செய்து பார்க்க ஆள் இல்லை என வில்லன் யோசித்துக் கொண்டிருக்கையில், உபேனை சந்திக்கின்றார் விக்ரம். அவரது உடம்பிலும் அந்த மருந்து ஏற்றப்படுகிறது. ஆனால், அந்த மருந்தை செலுத்திய உடன் அழகிய வாலிபராக மறுக்கின்றார் விக்ரம். ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு செல்கின்றார். ஆனால் கொஞ்ச நாள் கழித்து மருந்தின் பக்க விளைவுகளால் மிகவும் மோசமான உருவத்திற்கு மாறுகின்றார் விக்ரம்
. எமி ஜாக்சன் தான் தன்மேல் உள்ள பொறாமையால் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டதாக கருதி அவரை கடத்துகின்றார். இதற்கு எல்லாம் காரணம் உபேன் தான் என அப்புறமாக கண்டுபிடிக்கின்றார். அந்த சமயம் உபேன் விக்ரமை விட கொடிய மிருகமாக மாறியுள்ளார். விக்ரமும் ஓநாய் போன்று ஒரு கொடிய விலங்காக மாற, இருவரும் க்ளைமேக்ஸ் காட்சியில் கொடூரவிலங்குகளாக மோதுகின்றனர்.
“இயக்குநர் ஷங்கர் தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவர். அவர் இதுவரை அந்தப் படத்தின் கதையைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. எனவே, அதைப் பற்றி நான் சொல்வதற்கு ஏதுமில்லை! “