“இவனுக்கு தண்ணில கண்டம் ”

thanni 4
வி.வெங்கட் ராஜ் தயாரிக்க, ஒரே நேரத்தில் இரண்டு தொலைக்காட்சித் தொடர்களை இயக்கி,இரண்டையும் டி ஆர் பி யில் நிறுத்தும் சக்தி உள்ள எஸ்.என் .சக்திவேல் இயக்கத்தில் , நிகழ்ச்சித் தொகுப்பு மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் நடிப்பு இரண்டிலும்  பேர் வாங்கிய தீபக் நடிக்க உருவாகும் படம்….. இவனுக்கு  தண்ணில  கண்டம் .

பொதுவாக ஜோதிடத்தில் நீர் நிலைகளால் உயிராபத்து ஏற்படும் வாய்ப்பை பற்றி சொல்லும்போது தண்ணில  கண்டம் என்று சொல்வார்கள். ஆனால் இப்போது தமிழ்நாட்டில் எத்தனையோ இளைஞர்களுக்கு கண்டமாக இருக்கிற தண்ணி … ‘சரக்கு’ தண்ணிதான். . இந்தப் படத்தின் கதை இரண்டாவது ரகம்.

 ஒரு இளைஞனின் வாழ்வில்,  ஒரு நாள் டாஸ்மாக்கில் சரக்கு அடிக்கும்போது நடக்கும் சம்பவம்,  எப்படி அவனது வாழ்க்கைக்கே கண்டமாக  மாறுகிறது என்பதுதான் படத்தின் கதை என்கிறார் சக்திவேல் .

thanni 1இந்தக் கதையை தீபக், அறிமுகம் நேகா, இவர்களுடன் குமாரவேல், சென்ட்ராயன் , மனோ பாலா, எம் எஸ்  பாஸ்கர் , நான் கடவுள் ராஜேந்திரன், சுவாமிநாதன் , கானா பாலா, ஆர், பாண்டியராஜன், சுப்பு பஞ்சு இவர்களை வைத்துக் கொண்டு காமெடியாகவும் பொழுது போக்காகவும் சொல்லி இருக்கிறர்களாம்.

“என்ன தீபக் திடீரென்று சினிமா பக்கம் ?” என்று கேட்டால் , ” ஆமா சார்.. காம்பியர் , டி.வி. சீரியல் ஆக்டர் .. அடுத்து என்ன பண்ணப் போறன்னு என் நண்பர் ஒருத்தர் என்கிட்டே கேட்டார் .  அவரே சினிமாவில் நடியேன்னு  சொன்னார் . அப்போ சக்திவேல் சார் கிட்ட கதை கேட்டேன் . அவர் சொன்ன கதையை அந்த நண்பர்கிட்ட சும்மா நல்லா இருக்கான்னு கேட்கறதுக்காக நானும் சக்திவேலும் சொன்னோம் . ரொம்ப நல்லா இருக்கு. நானே தயாரிக்கறேன்னு  வந்துட்டார் . அந்த நண்பர்தான் படத்தோட புரடியூசர் வெங்கட் ராஜ் ” என்று  டுவிஸ்ட் கொடுக்கிறார் தீபக் .

“. சும்மா ஆர்வத்துலதான் கதை கேட்டேன் . ஆனா காமெடியும் மற்ற விஷயங்களும் ரொம்ப நல்லா இருந்தது . நானே தயாரிக்க முடிவு பண்ணி இறங்கிட்டேன் ” என்கிறார் வெங்கட் ராஜ் .

thanni 3
“சீரியலில் வெற்றிகளை கொடுத்த நீங்க சினிமாவிலும் அதே மாதிரி வருவோம்னு நம்பிக்கை இருக்கா?”‘ என்று இயக்குனர் சக்திவேலிடம் கேட்டால் , “மேக்கிங் முறையில் சினிமாவுக்கும் தொலைக்காட்சித் தொடர்களுக்கும் வித்தியாசம் இருக்கு . ஆனா தொடர் இயக்கிய அனுபவம் சினிமாவில் பெருசா கை கொடுக்குது” என்கிறார் .

வாழ்த்துகள் …..  தண்ணி யூனிட் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →