விழாவில் எடிட்டர் விஜய் வேலுகுட்டி பேசியபோது, “ஜாக்பாட் ட்ரைலரைப் பார்த்த அனைவரும் ரஜினி சார் படத்தின் ட்ரைலர் போல இருக்கிறது என்றார்கள். அது மகிழ்ச்சியாக இருக்கு” என்றார்
ஒளிப்பதிவாளர் ஆனந்த் பேசியபோது “படம் ரொம்ப ஜாலியா இருந்தது. கிரேன்ல இருக்கும் போது சூட்டிங்கில் பலமுறை சிரித்து இருக்கிறேன்ஜோதிகா மேடத்தைப் பார்த்தால் வியப்பாக இருக்கும். ரொம்ப நிதானமா இருப்பாங்க. அவர்களிடம் இருந்து நிறைய கத்துக்கணும்.” என்றார்
ஸ்டண்ட் மாஸ்டர் ராக்பிரபு , ” என்னிடம் முதலில் இது காமெடி படம் என்று தான் சொன்னார்கள். ஆனால் ஒரு ஆக்ஷன் படம் அளவிற்கு சண்டைக்காட்சிகள் அமைந்துள்ளது” என்றார்
நடிகர் ஜெகன் ,” ரொம்ப இதயப்பூர்வமான லேடி ஜோதிகா. தாமரை எழுதிய ஒவ்வொரு வரிக்கும் பொருத்தமானவர் ஜோதிகா. தவமே பெற்றவரம் சூர்யா. அவருக்கு நிறம் கொடுத்தவர் ஜோதிகா” என்றார்
நடிகர் டேனி ,” இப்படி ஒரு புரொடக்சன் கம்பெனியை நான் பார்த்ததே இல்லை. சாப்பாடு விசயத்தில் மிகச் சிறப்பாக கவனிப்பார்கள். சுகர்லாம் இல்லாமல் நாட்டுச் சக்கரை தான் கொடுப்பார்கள். ஜோதிகா மேடம் போல ஒரு ஆக்ஷன் ஹீரோ பைட் செய்வாரா என்பதே சந்தேகம். கல்யாண் அவர்கள் மனிதரா இல்லை ரோபோவா என்று தெரியாதளவில் வேலை செய்கிறவர்” என்றார்
பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ்,”பாட்டெழுதி முடித்ததும் பாட்டு ரொம்ப நல்லா இருக்கு என்று கோ புரொடியூசர் ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் சார் போன் பண்ணி சொன்னார். முதல் முதலாக பாட்டெழுதிய உடனே ஒரு தயாரிப்பு நிறுவனம் சார்பில் போன் பண்ணிய வாழ்த்தியது 2D எண்டெர்டெயின்மெண்ட்-ல் தான்ஜோதிகா மேடத்தின் ரசிகன் நான். சூர்யா சார் எல்லோரும் பேசத்தயங்கும் விசயங்களை தைரியமாகப் பேசினார். அவர் பேசியதை நாம் வழி மொழிந்து பேச வேண்டும்” என்றார்
நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது, ,” சிவக்குமார் அவர்களின் அர்ப்பணிப்புகளை உள்வாங்கி சூர்யா சிறந்த படங்களை கொண்டு வரும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஜோதிகா நடித்ததும் எனக்குப் பயம். ஜெயலலிதாவைப் பார்த்தால் அமைச்சர்கள் எப்படி பயப்படுவார்களோ அப்படி பயந்தோம். ஏன்னா விஜய் குஷி படத்தில் பட்டபாடு தான் தெரியுமே. ஜோதிகாவைப் பார்க்கும் போது ராஜராஜ மன்னன் போல அவ்வளவு கம்பீரமாக இருக்கும். கல்யாண் மிகப்பெரிய இயக்குநராக வருவார்.
தயாரிப்பாளர் சக்திவேல் “ஒரு படத்தின் வெற்றி என்பது பர்ஸ்டே பர்ஸ்ட் சோவில் தான் தெரியும். ஆனால் எங்களுக்கு முன்னாடியே தெரிந்து விட்டது. ஏன் என்றால் தமிழ்நாட்டில் பல திரையரங்க உரிமையாளர்கள் போன் பண்ணி கேட்கிறார்கள். இந்தப்படம் அவ்ளோ நல்லாருக்கு. ஜோதிகா மேடம் நடித்ததிலே இந்தப்படம் தான் எனக்கு ரொம்ப பிடித்தது. 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் படங்களை வெளியீடுவதை பெருமையாகச் சொல்வேன். சூர்யா அண்ணன் என்மேல் வைத்துள்ள நம்பிக்கைக்காக வேகமாக ஓடுவோம்.” என்றார்
இயக்குநர் கல்யாண் “எனக்கு பெரிய ஜாக்பாட் என்னன்னா 2D எண்டெர்டெயின்மெண்ட் தான். நான் ராஜா சாரிடம் போய் மூன்று சீன் தான் சொன்னேன். உடனே செக் கொடுத்துட்டார். பிறகு ஜோதிகா மேடத்திடம் கதையைச் சொன்னேன். அவர் உடனே சூட்டிங் போகலாம் என்றார்.
ஸ்பாட்டில் சூர்யா தான் ஜோதிகாவுக்குள் வந்துவிட்டாரோ என்று நினைக்கும் அளவிற்கு பிரமாதமாகப் பண்ணி இருக்கிறார். படத்தில் ஜோதிகா பாதி சூர்யாவாகவும் பாதி ஜோதிகாவாகவும் தெரிவார்.” என்றார்
சூர்யா தன் பேச்சில், “. என்னோட ஜோ தான் என்னோட ஜாக்பாட். 100 சதவிகிதம் 200 சதவிகிதம் எந்த காம்ப்ரமேஸும் இல்லாமல் சரியாச் செய்ற அம்மா ஜோதிகா. அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள் எல்லாவற்றையும் மிகவும் யோசித்து யோசித்து தான் செய்வார். தமிழ்நாட்டுப் பெண்கள் ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றி, சமூகத்தைப் பற்றி மிகச் சரியான மதிப்பீட்டை வைத்திருப்பார்கள்.
தயாரிப்பாளர் ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் ” எனக்குச் சூர்யா நண்பராக கிடைத்தது ஜாக்பாட். இப்படி ஒரு ஸ்கிரிப்ட்டைக் கேட்டு சிரித்தளவுக்கு வேறு எந்தக்கதையைக் கேட்டும் நாங்கள் சிரித்ததில்லை. 2D எண்டெர்டெயின்மெண்ட் பேர்லே எண்டெர்டெயின்மெண்ட் இருக்கு. எங்கள் கதைகளில் 70% கமர்சியல் இருக்கும் 30% மெசேஜ் இருக்கும். கல்யாண் வெறித்தனமாக வேலை செய்பவர். அவரது டீமும் அப்படித்தான்” என்றார்
ஜோதிகா பேசும்போது “முதல் நன்றி சிவக்குமார் அப்பாவிற்கு. 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் இரண்டு வருசத்துக்குப் பிறகு நடிக்கிறேன். இது எனக்கு ரொம்ப புதுசான படம். இப்படி ஒரு கதையில் நான் நடித்ததே இல்லை. ரேவதி மேடத்திற்கு ஈக்குவலான ரோல். அதற்கு கல்யாண் சாருக்கு நன்றி. ஹீரோஸ் என்னன்ன பண்றாங்க என்பதைப் பார்த்து எல்லாவற்றையும் எங்களைப் பண்ணச் சொன்னார்.