கிருஷிக்கும் (கிருஷிக் திவாகர்) ஸ்ருதியும் சிறுவயது முதலே ஒன்றாகப் படித்தாலும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பவர்கள் . வேலை செய்யும் அலுவலகப் பருவம் வரை அது தொடர்கிறது. ஆனால் கிருஷிக்கின் தந்தையும் (ஆடுகளம் நரேன்) ஸ்ருதியின் தந்தையும் (தாயுமானவன் மதி) நெருங்கிப் பழகும் ஆத்மார்த்தமான நண்பர்கள்.
இந்த நிலையில் கிருஷிக் – சுருதி இருவரும் பணி புரியும் அலுவலக நண்பன் ஒருவனுக்கு இப்போது கர்நாடக மாநிலத்தோடு இருக்கும் குடகு பகுதியில் திருமணம் நடக்கிறது.
– என்பதே இந்த ஜிப்பா ஜிமிக்கி .
குடகுப் பகுதியின் கொள்ளை கொள்ளையான இயற்கை அழகே இந்தப் படத்தின் பெரும் பலம் .
இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட காலத்தில் இந்தப் பகுதி மக்கள் “மொழியாலும் இனத்தாலும் நாங்கள் கன்னடத்தை விட தமிழுக்குத்தான் நெருக்கமானவர்கள் . எனவே எங்களை தமிழ்நாட்டோடு இணையுங்கள் ” என்று கூறினார்கள் . காரணம் குடகு என்ற பழந்தமிழ் வார்த்தைக்கு மேற்கு என்று பொருள். (கிழக்குக்கு குணக்கு என்ற சொல் பழந்தமிழில் உண்டு )
நியாயமாக அப்படி குடகுப் பகுதி தமிழ் நாட்டோடு இணைக்கப்பட்திருந்தால் காவிரி உருவாகும் பகுதி முதற்கொண்டு காவிரி பாயும் பல பகுதிகள் தமிழ் நாட்டுக்குள்தான் இருந்திருக்கும் . ஆனால் அப்போதைய நமது தலைவர்கள் தங்களது இல்லாத போலியான மாயையான அரசியல் சித்தாந்த சுயநலத்தால் ,குடகு வாழ் மக்களின் அந்தக் குரலை, கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை.
குடகு மக்களின் விருப்பத்துக்கு மாறாக , அந்தப் பகுதிகளை வலுக்கட்டாயமாக கர்நாடகாவோடு இணைத்துக் கொண்டனர் கன்னடர்கள். மத்திய அரசும் அதற்குத் துணை போனது . இதற்கு மூல காரணமாக இருந்தவர் விஸ்வேஸ்வரய்யா என்ற கன்னட என்ஜினீயர் . அதானல்தான் தமிழகத்துக்கு காவிரி பிரச்னையே வந்தது
எவ்வளவு அழகான பூமியை தமிழ்நாடு இழந்திருக்கிறது என்பது…
குடித்து விட்டு கொடுமைப்படுத்தியே மனைவியைக் கொன்று விட்டு அவள் இறந்த பிறகு அவளைக் காதலிக்கும் லாரி டிரைவர் (இளவரசு)…
கன்னட அப்பாவுக்கும் தமிழ் அம்மாவுக்கும் மகனாகப் பிறந்து , அம்மாவின் அண்ணன் மகளான வாய் பேச முடியாத பெண்ணை மணந்து அன்புடன் வாழும் குடகு விவசாயி (நான் கடவுள் ராஜேந்திரன் )….
ஆகிய பாத்திரப் படைப்புகளில் இயக்குனர் ராஜசேகர் கவனம் ஈர்க்கிறார் .
ஜிப்பா ஜிமிக்கி… டால் கொஞ்சம் ‘டல்’தான்.