கபாலி ….ஆரம்பிக்கும்போதே ஒரு அபயக் குரல்!

kabaali

‘அப்படி போடு அருவாள’ என்று,  ரஜினிகாந்த்  எதையாவது ஆரம்பித்தாள் போச்சு;  அடுத்த நொடியே …

‘குறுக்க போடு கொடுவாள’ என்று யாராவது கிளம்பிடுறாங்கப்பா !

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் ‘மெட்ராஸ்’ ரஞ்சித் இயக்க ரஜினி நடிக்கும் புதிய படத்துக்கு காளி , கண்ணபிரான் , என்று பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு கடைசியில் கபாலி என்று பெயர் முடிவானது (ரஜினி நடித்த ஒரு தெலுங்குப் படமோ அல்லது கன்னடப்படமோ காளி கோவில் கபாலி என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டதும் இப்போது நினைவுக்கு வருகிறது )

வட சென்னையில் வாழ்ந்த ஒருவரின் கதை… முழு படப்பிடிப்பும் மலேசியாவில்.. ரஜினியின் மகளாக போதைக்கு அடிமையான பெண்ணாக தன்ஷிகா… அவரது ஜோடியாக முக்கிய வேடத்தில் அட்டக்க்கத்தி தினேஷ் ….. என்று வரும் செய்திகள் எல்லாம்,  சொம்மா சொல்லக் கூடாதேய்..

அப்டியே அள்ளிக்கினு போது…. !

அதே நேரம் …

கபாலி என்று பெயர் வெளியான உடனேயே கபால் என்று  குதித்து வருகிறது, அந்த  செய்தி

மைசூரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் பெயரும் கபாலிதானாம். காவ்யா என்ற கன்னடப் பெண்ணே கதாநாயகியாக  நடிக்கும் இந்தப் படத்தை . கடந்த சில ஆண்டுகளாக எடுத்துக் கொண்டே ஏ ஏ ஏ .. இருக்கிறார் சிவகுமார்.  அவரே தயாரிப்பு என்பதால் பணம் கிடைக்கும்போதெல்லாம் படப்பிடிப்பு நடக்கிறதாம் .

தொண்ணூறு சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் அந்தப்படத்துக்கு, கடந்த ஒரு மாதம் முன்புகூட சென்னையில் படப்பிடிப்பு நடந்திருக்கிறதாம் .பாடல் வெளியீட்டுவிழா சென்னையில் நடந்து இருப்பது உண்மை. 

அந்தக்  கபாலியின் பாடல் வெளியீட்டு விழா
அந்தக் கபாலியின் பாடல் வெளியீட்டு விழா

சிவா பிக்சர்ஸ் என்கிற பெயரில் கில்டில் இந்தப்பெயர் பதிவு செய்யப்பட்டதாம்.

முறைப்படி அவர் அந்தப் பெயரை புதுப்பிக்கவில்லை என்று சொல்லி,  ரஜினி படத்துக்குக் கொடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாகப் புலம்பும் சிவகுமார் , “நான் பல லட்சங்கள் செலவு செய்து படமெடுத்துக்கொண்டிருக்கிறேன், இப்போது எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. எங்கள் ரஜினி தமிழ் நாட்டில் வாழ்ந்தாலும் கன்னட பாசம் உடையவர் . எனக்கு நியாயம் செய்வார் ” என்கிறாராம்.

ஆண்டவா ! மோசமான திரைக்கதைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் . இந்த பெயர் வைக்கிற பஞ்சாயத்துகளில் இருந்து தமிழ் சினிமாவை காப்பாற்று .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →