கலகலப்பு @ விமர்சனம்

அவ்னி மூவி மேக்கர்ஸ் சார்பில் குஷ்பூ சுந்தர் தயாரிக்க,  ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ரானி, கேத்தரின் தெரசா,  ராதா ரவி , யோகி பாபு, ரோபோ ஷங்கர்,மனோபாலா  நடிப்பில், 

வேங்கட் ராகவன் திரைக்கதைக்கு பத்ரி வசனம் எழுத சுந்தர் சி கதை எழுதி இயக்கி இருக்கும் படம் கலகலப்பு 2.  படம் கலகலக்க வைக்குமா? லகலகக்க செய்யுமா? பார்ப்போம் . தமிழக அமைச்சர் ஒருவரின் (மது சூதனன்)  சொத்துகள் அடங்கிய லாப் டாப்பை திருடிக் கொண்டு காசி போகும் ஆடிட்டர் ஒருவர் ( முனீஸ்காந்த் ராமதாஸ்) அஞ்சு கோடி கொடுத்தால் லேப் டாப்பை தருவதாக சொல்ல, 

பணத்தைக் கொடுத்து லேப் டாப்பை வாங்கி வர  ஒரு போலீஸ் அதிகாரியை (ராதாரவி) காசிக்கு  அனுப்புகிறார் அமைச்சர் . 
 
தனது முன்னோர் நூறு வருடம் லீசுக்கு விட்ட சொத்து காசியில் இருப்பதை அறிந்த இளைஞன் ( ஜெய்) அதை மீட்க காசி வருகிறான் .
அதை இப்போது லாட்ஜ் ஆக நடத்தி வரும் இன்னொரு இளைஞன் (ஜீவா) விசயம் தெரியாமல் உரிமையாளனையே  அங்கே தங்க வைக்கிறான் . 
 
அங்கே இருக்கும் பெண் தாசில்தார் ( நிக்கி கல்ராணி) ,மீது  லாட்ஜின் நிஜ உரிமையாளனுக்கு காதல் வருகிறது . 
 
லாட்ஜை இப்போது நடத்தும் வரும் இளைஞனின் தங்கைக்கு  மாப்பிள்ளை பார்க்கப் போன இடத்தில் அந்த மாப்பிள்ளையின் தங்கை மீது (கேத்தரின் தெரசா ) இவனுக்கு காதல் வருகிறது .
தாசில்தாரின் தமிழ்நாட்டு உறவினர் ஒருவருக்கு  (சந்தான பாரதி) பிள்ளை இல்லாத நிலையில் அவர் ஒருவனை (மிர்ச்சி சிவா) மகனாக தத்தெடுக்கிறார் .
 
அவனோ பண விசயத்தில் லாட்ஜின் நிஜ மற்றும் தற்போதைய உரிமையாளர் இருவரையும் ஏமாற்றியவன்  
 
தத்தெடுக்கும் தந்தையின் பரம்பரை வைரங்களை கொள்ளை அடித்துக் கொண்டு அவன் காசிக்கு வர , அவனை எல்லோரும் துரத்த , ஒரு நிலையில் மேலே சொன்ன அத்தனை கேரக்டர்கள் , இவர்களோடு ஒரு போலி சாமியார் ( யோகி பாபு),  வைர உரிமையாளரின் மனைவியின் தங்கை (ரோபோ ஷங்கர்) மற்றும் சில கதாபாத்திரங்கள் ஆகியவை கலக்க , 
 
நடக்கும் சம்பவங்களே இந்த கலகலப்பு 2 . 
 
 பார்த்த விசயங்கள்தான் . ஆனால்  அதை எல்லாம் ஒரு கோர்வையோடு கோர்த்து பின்னைப் பிணைத்து பின்னல் பின்னி திரைக்கதை அமைத்து இருக்கிறார்  வேங்கட் ராகவன். 
அதில் காமெடி கொஞ்சம் காமெடி மாதிரி கொஞ்சம் , பரபரப்பு கொஞ்சம் , சுறு சுறுப்பு கொஞ்சம் , மசாலா கொஞ்சம் எல்லாம் வருகிறது . எல்லா கதாபாத்திரங்களுக்கும் தோதான ஒரு சம்பவமாவது கொடுத்து இருக்கிறார்  வேங்கட் ராகவன். 
 
அதற்கு அதே பாணியில் காமெடி கொஞ்சம் , காமெடி மாதிரி  கொஞ்சம் , கொஞ்சம் பலான  விஷயம் எல்லாம் கலந்து வசனம் எழுதி இருக்கிறார் பத்ரி . 
 
அதை தனது அனுபவ முத்திரை காரணமாக காமெடி, கலகலப்பு , கிளாமர், கலர் ஃபுல் மற்றும் கலர்ஸ்ஃபுல் எல்லாம் சேர்த்து கண்ணுக்கு குளிர்ச்சியாக இயக்கி இருக்கிறார் சுந்தர் சி விளைவு ? கலகல  என்று போகிறது கலகலப்பு 2 . 
 
காசியின் பின்புலத்தில் கலர் பொடிகள்,  பூக்கள் படம் முழுக்க ஜாலம் செய்கின்றன , யூ கே செந்தில்குமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு ரிச்னஸ் சேர்க்கிறது . 
 
ஹிப்ஹாப் ஆதி இசையில் பாடல்கள் சுமார் ரகமே. பின்னணி இசையும் பெரிதாக சோபிக்கவில்லை (கேப் இருந்தால் தானே வாசிக்க முடியும்?) ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பும் குறை சொல்ல முடியாத அளவில் இருக்கிறது . 
 
சண்டைக் காட்சிகளில் பின்னிப் பெடல் எடுத்து இருக்கிறார் தளபதி  தினேஷ் .  சூப்பர் 
 
ஜீவா, ஜெய் , சிவா மூவரும் ஜஸ்ட் லைக் தட் தங்கள் பாத்திரங்களை செய்து இருக்கிறார்கள் . மற்ற  பலரும் கூட  பண்பட்ட நடிகர்கள் என்பதால் நடிப்பில் ஒன்றும் குறை இல்லை, 
 
இடுப்பு வளைவில் இதய விபத்துகளை நடத்துகிறார் நிக்கி கல்ராணி.
தன்னைத்தானே உரித்துப் போட்டுக் கொண்டு உய்யலாலா பாடுகிறார் கேத்தரின் தெரசா . அடேயப்பா !
 
சும்மா சம்மந்தமில்லாத காட்சிகளில் கூட பின்னணியில் நாலஞ்சு பெண்களை கண்ணுக்கு குளிர்ச்சியாக நடமாட விடுகிறார் பாருங்கள்… . அங்கே நிற்கிறார் இயக்குனர் சுந்தர் சி . 
 
இப்படியாக காமெடி கொஞ்சம் , கலர்புல் கொஞ்சம் கவர்ச்சி   கொஞ்சம் இவற்றை நம்பி  களம் கண்டிருக்கிறது கலகலப்பு . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *