பாடல் வெளியீட்டு விழாவில் கண்ணதாசன் மருமகள்

Copy of IMG_0471
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை கண்டித்து உருவாகி இருக்கும் படம் தகவல். மலையாள இயக்குனர்கள் பரதன், பத்மராஜன், ஜோஷி, டென்னிஸ் ஜோசப் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சசீந்திரன் என்பவர் இயக்கி இருக்கும்  படம் இது .

இதன் பாடல் வெளியீட்டு விழாவில் கவிஞர் கண்ணதாசனின் அண்ணனும் இந்தியா முழுக்க புகழ் பெற்ற நம்ம ஊர் தயாரிப்பாளருமான ஏ எல் சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன், உயர்நீதி மன்ற ஒய்வு பெற்ற நீதிபதி கண்ணகி, பழம்பெரும் புகழ் பின்னணிப் பாடகி எல் ஆர் ஈஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர் .

_MG_7828

படம் சொல்லும் விசயமும் பெண்களைப் பற்றியது .சிறப்பு விருந்தினராக வந்திருந்த பிரமுகர்களும் பெண்கள்  என்பதால் , சமுதாயத்தில் பெண்களின் நிலை என்ற தலைப்பில் நடக்கும் கருத்தரங்கம் போல ஆனது இந்த நிகழ்ச்சி .

 ஜெயந்தி கண்ணப்பன் பேசும்போது  ” என் பெயர் ஜெயந்தி கண்ணப்பன் . என் மாமனார் ஏ. எல்.சீனிவாசன் நான்கு முதல்வர்கள் சம்மந்தப்பட்ட படங்களை தயாரித்தவர் .

கலைஞர் எழுதிய  பணம், புரட்சித் தலைவரின் முதல் சமூகப்படமான திருடாதே , புரட்சித் தலைவி நடித்த கந்தன் கருணை. என் டி ராமராவ் நடித்த தெலுங்குப் படங்கள் , தவிர பல இந்திப் படங்களை தயாரித்தவர். அந்தக் கால இந்தி சூப்பர் ஸ்டார்களால் ‘கிங் ‘ (ராஜா) என்று மரியாதையாக அழைக்கப்பட்டவர் .

பீம்சிங், கே எஸ் கோபாலகிருஷ்ணன் , மாதவன் உள்ளிட்ட பல சரித்திரம் படைத்த இயக்குனர்களுக்கு எல்லாம் முதல் படம் கொடுத்து அறிமுகப்படுத்தியவர் .

ஜெயந்தி கண்ணப்பன்
ஜெயந்தி கண்ணப்பன்

அதை விட எல்லாம் முக்கியம் . தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்தி உருவான பல படங்களையும் பெண்களின் பெயரில் வந்த பல படங்களையும் தயாரித்தவர். பெண் என்றால் பெண், சாரதா, கற்பகம் , ஆனந்தி, சாந்தி இப்படி பல படங்களை சொல்லிக் கொண்டே போகலாம் .

எனது சிறிய மாமனார் கவியரசு கண்ணதாசன் பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை . பெண்களின் உணர்வுகளை அவர் பிரதிபலித்த அளவுக்கு எத்தனை பெண் படைப்பாளிகள் கூட பிரதிபலிக்க முடியும் என்பது சந்தேகம்தான் .

இப்போது நாங்கள் படம் தயாரிக்காமல் இருக்கலாம் . ஆனால் நாங்கள் சினிமா பற்றிய சிந்தனைகளில்தான் இருக்கிறோம் . சினிமாவைத்தான் சுவாசிக்கிறோம். மூன்று தலைமுறைகளை சினிமாவில் நான் பார்த்து விட்டேன் .

IMG_0477

இப்போது தமிழ் சினிமா எல்லா வசதிகளோடும் இருக்கிறது . தொழில் நுட்பத்தில் சிறப்பாக இருக்கிறது . அதுவும் இன்றைய நிலையில் பிரம்மாண்டத்தில் வட இந்தியாவுக்கு மட்டும் அல்ல . ஹாலிவுட்டுக்கே சவால் விடுகிறோம் .

ஆனால் பெண்களை மையப்படுத்தி படங்களை எடுக்கும் போக்கு குறைந்து விட்டது . பொழுது போக்கு என்ற பெயரில் எதை எதையோ சொல்கிறோம் . அது சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது . பெண்களை போகப் பொருளாகவே பார்க்கும் நிலைக்கு அதுவும் காரணம் ஆகிறது . இந்த  நிலை மாற வேண்டும் .

அதே நேரத்தில் சமுதாயத்தில் நடக்கும் எல்லா பாலியல் குற்றங்களுக்கும் ஆண்களைக் குற்றம் சொல்லக் கூடாது . பெண்களும் நாகரீகமான உடை , நல்ல பழக்க வழக்கங்கள் , கண்ணியமான குணம் இவற்றோடு நடந்து கொள்ள வேண்டும் .

IMG_0462
தவறிழைக்க ஆண்களை தூண்டும்படி நடந்து கொண்டு விட்டு அப்புறம் குற்றம் நடந்தததும் முழுக்க ஆண்களை குறை சொல்லக் கூடாது ” என்றார் , அவருடைய சமநோக்கு பார்வைக்கு பலத்த கைதட்டல்.
அடுத்துப் பேசிய நீதிபதி கண்ணகி ” நான் இங்கு ஒரு நீதிபதியாக பேசுவதை விட, ஒரு பெண்ணாக பேசவே விரும்புகிறேன் . பாலியல் குற்றங்களுக்கு பெண்களின் நடத்தைகளும் காரணமாக இருப்பது உண்மைதான் .
ஆண் நண்பர்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவர்களோடு கண்ணியமாக பழகவேண்டும் என்ற உணர்வும் பெண்களுக்கு இருக்க வேண்டும் . ஒரு பெண் எப்படி நடந்து கொள்கிறாளோ அதற்கு ஏற்பவும் அவளுக்கு நடக்கும் செயல்கள் இருக்கும் .
கண்ணகி
கண்ணகி

நான் நீதிபதியாக இது போன்ற வழக்குகளை சந்தித்தபோது கூட, அந்த பாலியல் குற்றங்களுக்கு பெண்ணும் காரணமாக இருந்தாளா என்பதை மனதில் வைத்துக் கொண்டுதான் வழக்கை அணுகுவேன் . 

சில பல சமயங்களில் ஒரு பெண் என்னதான் ஒழுக்கமாக இருந்தாலும் அதையும் மீறி அவளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கும் ஆண்களை கடுமையாக தண்டிப்பதே சரி . ஐந்து வயது சிறுமியைக் கூட பாலியல் கொடுமைக்கு ஆளாக்கும் மிருகங்கள் இருக்கின்றன, அதற்கு அந்த சிறுமியா காரணம் ? அது போன்ற ஆட்களை தெருவில் நிறுத்திக் கல்லால் அடித்துக் கூட கொள்ளலாம் . தப்பே இல்லை ” என்றார் .

நியாயம் !

இது போன்ற அறிவார்ந்த பெண்மணிகளின் கருத்துக்களை பின்பற்றி இன்றைய தலைமுறை பெண்கள் நடந்தால் , பெண்களுக்கான சமூகப் பிரச்னைகளில் பாதியாவது கண்டிப்பாக குறையும்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →