கார்த்திக் மீண்டும் ஹீரோவாக… அமரன் -2 !

அமரன் 2
அமரன் 2

சரித்திரம் படைத்த தமிழ் திரைப்படமான அவள் அப்படித்தான் படத்தின் கதையை எழுதியதோடு , படத்தின் இயக்குனர் ருத்ரைய்யா மற்றும் வண்ண நிலவனோடு சேர்ந்து திரைக்கதை வசனத்தையும் சோம சுந்தரேஸ்வர் என்ற தனது இயற்பெயரில் எழுதி புகழ் பெற்று ….

அமரன் 1
அமரன் 1

நவரச நாயகன் கார்த்திக் நடித்த இதயத் தாமரை , அமரன் ஆகிய படங்களை இயக்கி … அவற்றைத்  தொடர்ந்து சீவலப்பேரி பாண்டி, கோவில் பட்டி வீரலட்சுமி உட்பட பல படங்களையும்  இயக்கியவர் கே.ராஜேஷ்வர்.

அமரன் 1
அமரன் 1

இவற்றில் அவள் அப்படித்தான் உருவாக்கிய வரலாறு நாடறியும் .

அமரன் படம்  ஜனவரி 15 1992 ஆண்டு வெளியாகி, ராஜேஷ்வரின் இயக்கம், கார்த்திக்கின் நடிப்பு,  ஆண்டவப் பெருமாள் என்ற வில்லன் கதாபாத்திரத்தின் அட்டகாசமான உருவாக்கம்  , பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு

அமரன் 1
அமரன் 1

இவற்றால் பெரிதும் பாராட்டப்பட்டது.

சுமார் 24  ஆண்டுகளுக்கு பிறகு அமரன் படத்தின் பார்ட் டூ உருவாகிறது . இயக்குனர் கே. ராஜேஷ்வர் தனது ஆர்லவ் எண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மூலம் தயாரித்து எழுதி இயக்க, படத்தில் ஹீரோவாக நடிப்பது முதல் பாகத்தில் நடித்த அதே…. நவரச நாயகன் கார்த்திக் !

அமரன் 2
அமரன் 2

வாவ் ! வாட் எ கம்பேக் !! ஹாங்…?

(ராஜேஸ்வரின் தந்தை அவன் அமரன் என்ற படத்தை தயாரித்தவர் . ஆகவே பெயரின்படி பார்த்தால் இந்தப் படம் மூன்றாவது அமரன் )

அமரன் பார்ட் டூ என்பதை சொல்ல பார்ட் ஒன் என்பதற்காக ரோமானிய எண்  வடிவத்தை எழுதி , இடையில் கார்த்திக்கின் உருவத்தை பதித்தே அதை ரோமன் எண் இரண்டின் வடிவமாக மாற்றி ..

ராஜேஷ்வர் , கார்த்திக்
ராஜேஷ்வர் , கார்த்திக்
இப்படி டிசைனிலேயே அசத்தி இருக்கிறார் ராஜேஷ்வர். இந்த அமரன் பார்ட் டூ வுக்கு ஒளிப்பதிவு  ஜி பி கிருஷ்ணா, இசை கிரிநந்த்,  பாடல்கள் முதல் பாகத்துக்கு எழுதிய அதே வைரமுத்து.

படத்தைப் பற்றிப் பேச  பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர் ராஜேஷ்வரும் கார்த்திக்கும்.

“ஒரு நண்பனாக சகோதரராக என் வாழ்வில் கலந்தவர் கார்த்திக் . ஒற்றை ரோஜாவாக இருந்த என்னை நந்தவனமாக மாற்ற நீர் வார்த்தவர் கார்த்திக் . ‘எல்லாமும் எல்லாரும் உன்னை விட்டுப் போகும்போது உனக்காக உள்ளே நுழைபவன் எவனோ அவனே உண்மையான நண்பன்’  என்ற ஆங்கில வாசகத்துக்கு என் வாழ்வில் அர்த்தம் சொன்னவர் கார்த்திக் ” என்று கார்த்திக்குக்கும் தனக்குமான நட்பை கவிதையாக சொன்ன ராஜேஷ்வர் ,

Amaran 2 First Look Press Meet Stills (8)

தொடர்ந்து “அமரன் முதல் பாகத்தில் பல கேரக்டர்கள் முடிவுக்கு வந்து விடும். அதனால அந்த கேரக்டர்களை மீண்டும் கொண்டு வர முடியாது  . ஆனால்  அமரன் கேரக்டர் முற்றிலும் புதிய பாணியில் புதிய களத்தில் பயணிக்கும்.  பல புதிய கேரக்டர்கள் வரும் . கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்குப் பிறகு  இரண்டாம் பாகம் செய்வதால் அதற்கு ஏன்ற  மாதிரி நவீனமா இன்றைய ரசிகர்களை கவர்வது போல  பல விஷயங்கள் படத்தில் இருக்கும் .

கதை லண்டன் , மாஸ்கோ, இத்தாலி, பூடான், கம்போடியா இப்படி பல ஊர்களில் நடக்கிறது . அங்கெல்லாம் ஷூட்டிங் நடக்குது . படத்துல மொத்தம் ரெண்டு ஹீரோயின். கதைப்படி ஒரு இந்தியப் பெண் . ஒரு வெள்ளைக்காரப் பெண்  .நிச்சயமா இந்தத் தலைமுறை இளைஞர்கள் உட்பட அனைத்துத் தரப்பையும் கவரும்படி படம் இருக்கும் “என்றார் ராஜேஷ்வர் .

ரஞ்சன் ராஜேஷ்வர், ராஜேஷ்வர், கார்த்திக்
ரஞ்சன் ராஜேஷ்வர், ராஜேஷ்வர், கார்த்திக்

அமரன் முதல் பாகத்தை நினைத்துப் பார்த்தால் ”ஆண்டவப் பெருமாள் இல்லாத அமரன் படமா ?” என்ற கேள்வி எழுந்தாலும்,  இயக்குனர் ராஜேஷ்வர் அதற்கு நியாயமான காரணம் சொல்வதால் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அடுத்துப் பேசிய கார்த்திக் ” அப்பா இறந்து போன பிறகு அவர் மேல மரியாதை உள்ள பல சீனியர் நடிகர்கள் , அப்பாவுக்கு தெரிஞ்ச நடிகர்கள் எல்லாரும் ‘நல்ல பிள்ளையா நடந்துக்கணும். ஷூட்டிங்கு டைமுக்கு வரனும் . கெட்ட பழக்கம் எதுக்கும் ஆளாகக் கூடாது’ அப்படின்னு எல்லாம் அக்கறையா அறிவுரை சொல்வாங்க.  ஆனா நான்… ?
 Amaran 2 First Look Press Meet Stills (2)இப்போ நினைச்சுப் பார்த்தா அவங்க சொன்னது எல்லாம்  எவ்வளவு நல்ல விசயம்னு தோணுது. நான் நிறைய இழந்துட்டேன் . இந்த நிலையில் இதோ இப்ப ராஜேஸ்வர் அமரன் பார்ட் டூ ல என்னை மீண்டும் ஹீரோவா போட்டு எடுக்கறாரு. ஆரம்பத்துல அவர் என்னைப் பத்தி ஏதேதோ சொன்னாரே . அதெல்லாம் நான் உண்மையில் அவரைப் பத்தி சொல்ல வேண்டிய விஷயங்கள்.

அமரன் முதல் பாகத்தில் வெத்தல போட்ட ஷோக்குல பாட்டு பாடின மாதிரி இந்தப் படத்திலும் பாடுவேன் . இடையில் சில படங்களில் கேரக்டர் ரோல் , வில்லன் எல்லாம் பண்ணினேன் . அது எனக்கு திருப்தியா இல்ல  இப்போ மறுபடியும் ஹீரோவா வந்து இருக்கேன்.  நான் ஃபிட் ஆகத்தான் இருக்கேன் . என்னுடைய  இப்போதைய ஃபிட்நெஸ் லெவலுக்கு உரிய கதைகள்ல தொடர்ந்து ஹீரோவா நடிப்பேன் ” என்றார்

வாழ்த்துகள் ராஜேஷ்வர் , கார்த்திக் மற்றும் அமரன் –  2 டீம் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →