காதல் மட்டும் வேணா @ விமர்சனம்

லக்கி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்து இயக்கி படத் தொகுப்பு கலை இயக்கம் செய்து சாம் கான் என்பவர் கதாநாயகனாகவும் நடிக்க ,

எலிசபத், திவ்யாங்கனா ஜெயின், மாறி முத்து, ராமதாஸ் ஆகியோர் உடன் நடித்திருக்கும் படம் காதல் மட்டும் வேணா .

படம் வேணுமா வேணா வா ? பேசலாம் .

இரவில் பஸ்சுக்குள் வைத்து ஒரு இளம் பெண்ணையும் ஆணையும் சில ரவுடிகள் அடித்துத் துவைக்கிறார்கள் . பெண் கற்பழித்துக் கொலை செய்யப்படுகிறார் . 

தற்கொலை செய்து கொள்ள முயல்வோருக்கு நம்பிக்கை தரும் சேவை செய்யும் ஓர் அமைப்புக்கு வந்த போனை அங்குள்ளொரு நபர் யாருக்கோ டைவர்ட் செய்ய , அது நாயகன் போனுக்கு வருகிறது .

 அவன் ஆறுதல் கூற அவள் ஆறுதல் அடைய , அடுத்து நேரடி சந்திப்பு . பழகுகிறார்கள் . காதலில் உருகுகிறார்கள் . ஒரு நிலையில் அவள் சட்டென்று காணமல் போக போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறான் நாயகன் .

 அந்தப் பெண் பல மாதங்களுக்கு முன்பே கற்பழித்துக் கொலை செய்யப்பட ( முதல் காட்சி ) பெண் என்பது தெரிய வருகிறது . 

 அவன் வெளியே வர , அவளது குரல் அவனை அழைக்கிறது .

— இந்த இடத்தில் தான் இதுவரை நாம் பார்த்த எல்லாமே,  நாயகன் நடித்து இயக்கிக் கொண்டு இருக்கும் சினிமா என்பதை சொல்கிறார்கள் .

அன்றைய படப்பிடிப்பு முடிந்த நிலையில் நாயகன் பாலியல் பெண் தேடி, இரவில் பயணிக்கிறான் . வழியில் போலீசிடம் சிக்குகிறான் . 
ஒரு வழியாக விடுபட்டு கிளம்ப , 

அந்த போலீஸ்காரர் கத்துகிறார் , ” சார் இவன் யாரு தெரியுதா ? மேற்படி பேருந்து கொலை கற்பழிப்புய் வழக்கில் உயிர் பிழைத்த  பையன்  ” என்று!

 இப்போது மீண்டும் பேருந்து சீன் காட்டப்பட , பேருந்தில் இருந்து ரத்தம் வழிய நாயகன் இறங்க .. மீதிக் கதையை இரண்டாம் பாகத்தில் சொல்வார்களாம். 

மிகக் குறைந்த நடிக நடிகையர் , மிகக் குறைவான செலவு , என்ற வகையில் படத்தை எடுத்திருக்கிறார் சாம் கான் . பாராட்டலாம்.

சொந்த செலவில் தனக்கு ஒரு ஷோ ரீல் எடுத்துக் கொண்டிருக்கிறாரோ என்று தோன்றுகிறது .

 பேருந்தில் நடக்கும் கற்பழிப்புக் கொலை சம்பவத்தில் — ஆரம்பத்தில் பெண்ணை மட்டும் காட்டி அவள் செத்துப் போவதை காட்டி அவள் பேயாக வரும் உணர்வை படம் பார்ப்பவருக்கு ஏற்படுத்தி விட்டு ,

 மறுபக்கம் அடிபடும் இளைஞன்தான்  நாயகன் என்பதை ஆரம்பத்தில் மறைத்து கடைசியாக சொல்லும் உத்தி சிறப்பு .

நாயகன் எடுக்கும் படத்தில் காதலியாக வரும் எலிசபத் நிஜ காதலியாக வரும் திவ்யாங்கனாவை விட நன்றாக இருக்கிறார் . (மாறாக அல்லவா இருக்க வேண்டும் ?)

ஜே எஸ் கே வின் ஒளிப்பதிவு சிம்ப்ளி ஒகே . 

இரண்டாம் பாதியில் தேவையில்லாமல் காட்சிகள் நீள்கின்றன . குறிப்பாக நாயகனோடு காரில் வரும் உதவி இயக்குனர் பல பாடல்களை பாடிக்கொண்டே வருவது . ( அப்படி இருந்தும் படத்தின் நீளம் நூறு நிமிடம் மட்டுமே !)

இரண்டாம் பாகத்தில் பாருங்க என்று சொல்கிறாரே .. அதையும் முதல் பாகத்திலேயே சொல்லி இருந்தால்தானே இது ஒரு முழுமையான பாடமாகவாவது வந்திருக்கும்? 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *