கிடா @ விமர்சனம்

ஸ்ரவந்தி ரவி கிஷோர் தயாரிப்பில் பூ  ராம், மாஸ்டர் தீபன் , காளி வெங்கட், கதிர்,  மீனாம்பாள், விஜயா, லோகி,  , ராஜு , பாண்டி நடிப்பில் ரா. வெங்கட் எழுதி இயக்கி இருக்கும் படம் 

குடித்து விட்டு லேட்டாக வேலைக்குப் போவதால் கறிக் கடையில் மட்டன் வெட்டும் பணியில் இருந்து முதலாளியின் மகனால் நீக்கப்படுகிறான் வெள்ளைச்சாமி ( காளி வெங்கட்) . அவனது மகன் லோகிக்கும் (பாண்டி)  அத்தை மகள் கமலிக்கும் (ஜோதி)  காதல். அதை ஏற்காத அத்தை, தனது  மகளுக்கு வேறு  மாப்பிள்ளை பார்க்கிறாள். 

பெற்றோரை இழந்த நிலையில்,  தாத்தன் செல்லையா  ( பூ ராம்)  பாட்டி மீனம்மாள் ( பாண்டியம்மாள்) ஆதரவில் வளர்க்கப்படும் பேரன் கதிர் ( தீபன்) . 

தீபாவளிக்கு பேரன் புது சட்டைக்கு ஆசைப்பட , அதை வாங்கித் தர தாத்தாவால் முடியவில்லை. வீட்டில் இருக்கும் கிடா ஆட்டை விற்று சட்டை வாங்கித்தர முயல்கிறார். ஆனால் அப்படி விற்று விட்டால் ஆட்டை வெட்டிவிடுவார்கள் என்பதால் ஆட்டின் மீது பாசம் காட்டும் பேரனுக்கு அதில் விருப்பமில்லை.   தவிர  அது சாமிக்கு நேர்ந்த கிடா என்பதால் யாரும் வாங்க வரவில்லை. 

வேலை இழந்த வெள்ளைச்சாமி முதலாளி மகனுக்கு எதிராக புதிதாக கடை போட சவால் விட்டு விட்டு ஆடுவாங்க முயல்கிறான் . அவனது மகன் காதலியோடு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ள வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு செல்லையாவின் கிடாவை வாங்க கடைசி நேரத்தில் வர, ஆடு திருடு போயிருக்கிறது . அப்புறம் என்ன என்பதே படம் . 

அழகான கிராமத்துக் கதை . அச்சு அசல் கிராமம் . நிஜமான கிராமத்து முகங்கள் .. சரியான மொழி .  மூன்று  வெவ்வேறு சூழல்களை இணைத்த விதம் அழகு 

நடிகர்கள் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள் 

கறிக்கு அட்வான்ஸ் வாங்கி அந்தக் காசில் ஆடு வாங்கும் ஐடியா,   படத்தின் இறுதியில் மனிதர்களின் நல்ல குணங்களால் காட்சிகளை நிறைப்பது ஆகியவை அழகு . 

இப்படி சிறப்பாக செய்தவர்கள் திரைக்கதையில் சறுக்கி விட்டார்கள் . 

ஆடு திருடும் ஆட்களை முன்பே காட்டி விலாவாரியாக காட்சிகளும் வைத்து விட்டதால் ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி அனுபவத்தை ரசிகர்கள் இழக்க வேண்டி இருக்கிறது . அதன் பிறகும் கடைசி வரை கிடைப்பது எல்லாம் சுமாரான காட்சிகளே 

கிடா … கறியே இல்லாத மட்டன் பிரியாணி 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *