பிரியங்காவைக் கருக வைத்த ‘கோடை மழை’

kodai 2

யாழ் தமிழ்த்திரை என்ற எழில் மிக்க பெயர் கொண்ட தயாரிப்பு நிறுவனம் சார்பில் அலெக்சாண்டர் தயாரிக்க, புதுமுகம் கண்ணன் மற்றும் பிரியங்கா , இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் நடிக்க, பிரபு தேவாவிடம் பணியாற்றிய கதிரவன் எழுதி இயக்கி இருக்கும் படம் கோடை மழை .

”கோடை மழை என்பது கோடைக் காலத்தில் பெய்யும் மழை என்றுதான் பொருள் படும். ஆனால் இந்தப் படத்தில் இந்தப் பெயரை கோடையும் மழையும் என்ற பொருளில் வைத்து இருக்கிறோம் . படத்தின் முதல் பகுதி முழுக்க கோடையை பின்புலமாகக் கொண்டு இருக்கும். இரண்டாம் பகுதி முழுக்க மழையை பின்புலமாகக் கொண்டு இருக்கும். ” என்று,  ஓர் ‘அடடே’ அறிமுகம் கொடுத்து விட்டுத் தொடர்கிறார் இயக்குனர் கதிரவன் 
kodai 5
“ஓர் ராணுவ வீரன் தனது சொந்த ஊரான, திருநெல்வேலிப் பகுதியில் உள்ள சங்கரன் கோவிலுக்கு இரண்டு முறை வந்து போகும்போது நிகழும் சம்பவங்கள்தான் படம் . அந்த ஊர் காவல் அதிகாரி ஒருவருக்கும் அவனுக்கும் ஏற்படும் உரசல்கள் பற்றிய கதை இது .ஆனால் இதில் யாருமே கெட்டவர் இல்லை . அவரவர்  நிலையில் அவரவர் கொள்ளும் உறுதியை படம் சொல்கிறது.  ” என்று முடிக்க , 
“அந்த காவல் அதிகாரியாக நான் நடிக்கிறேன் ” என்று துவங்கும் இயக்குனர் களஞ்சியம் ” பொதுவாக திருநெல்வேலி பாஷை என்றால் ‘ஏலே…’,  ‘வாலே…’ ,  ‘போலே……’  என்பதோடு முடித்து விடுகிறார்கள். ஆனால் இந்தப் படத்தில் நுணுக்கமாக அந்த பாஷையை இயக்குனர் கையாண்டு இருக்கிறார் .  
kodai 1
பிரியங்கா இவ்வளவு கலரான பொண்ணு என்பதே எனக்கு இப்போதான் தெரியுது . ஷூட்டிங் சமயத்துல கருப்பா இருந்தார் . அந்த அளவுக்கு அந்த ஊர் வெயிலில் கிடந்தது உடலை கருக்கிக் கொண்டு நடித்தார்.  புதுமுகம் கண்ணனும் அப்படியே. இந்தப் படத்தில் நடித்தது எனக்கு ஓர் அற்புதமான அனுபவமாக  இருந்தது.  ” என்றார்  
 kodai 4
படம் பற்றி பிரியங்கா சொல்லும்போது ” நல்ல அண்ணனான ஒரு காவல் அதிகாரி , மிக நல்ல காதலனான ஒரு ராணுவ வீரன் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட உரசலை தீர்க்கப் போராடும் ஒரு கிராமத்துப் பெண் கதாபாத்திரம் எனக்கு . வந்தா மல படத்தில் சென்னை பாஷை பேசி நடித்தேன் .இது முற்றிலும் மாறான கிராமியப் பாத்திரம் . எனக்கு இது ரொம்ப பிடிச்சு இருந்தது” என்கிறார்.
kodai 6
அறிமுக நாயகன் கண்ணன் ” வாய்ப்புத் தேடிப் போன என்னை தேர்ந்தேடித்த இயக்குனர் கதிரவனுக்கும் தயாரிப்பாளர் அலெக்சாண்டருக்கும் நன்றி . அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கையை நான் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, இயக்குனர்  பல நாட்கள் என்னை அந்த மக்களோடு வாழ வைத்து  பழக்கினார் . எனக்கே புதுப் பிறவி போல இருந்தது ” என்கிறார் 
kodai 3பாடல்கள் எழுதி இருக்கும் வைரமுத்து முதன் முதலாக எல்லாப் பாடல்களையும் நெல்லைத் தமிழில் எழுதி இருக்கிறாராம்.
படத்தில் ஒரு நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கும் இமான் அண்ணாச்சி ” இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகளுக்கு யாராவது சிரிக்காமல் இருந்தால் அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் தர்றேன் ” என்று சொல்லி இருப்பதாக இயக்குனர் கூறுகிறார் .
அப்போ,  செம காமெடி இருக்குனு சொல்லுங்க  ! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →