கோடியில் ஒருவன் @ விமர்சனம்

செந்தூர் பிலிம்ஸ் மற்றும் இன்ஃபினிடிவ் பிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் ஆண்டனி, ஆத்மிகா நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன்  இயக்கி இருக்கும் படம் கோடியில் ஒருவன் . 

கிராமத்தில் கவுன்சிலர் பதவிக்கு வரும் ஏழைப் பெண் ஒருவர் மக்கள் மீது அன்பு கொண்டு நேர்மையாக செயல்பட, அது பிடிக்காத மேல் மட்ட அரசியல்வாதி ,  கர்ப்பிணியாக இருக்கும் அவளைக் கொல்ல முயல, கொலை முயற்சியில் தப்பிக்கும் அவளுக்கு குழந்தை பிறக்கிறது . 

அதிகாரம் முக்கியம் என்று நினைக்கும் அவள் மகனை ஐ ஏ எஸ் ஆகச் சொல்ல, சென்னை வந்து படித்தபடியே சமூக சேவை செய்யும்அவன் ஐ ஏ எஸ் கனவின் வெற்றியின் விளிம்பில் இருக்கும் போது, 

அரசியல்வாதிகளால் பிரச்னை வந்து கனவு கலைய அப்புறம் என்ன ஆனது என்பதே கோடியில் ஒருவன் . 

சமூக சேவை , எளிய மக்களுக்கான முன்னெடுப்பு, அரசியல் கசடுகளை கழுவுதல் என்று  ஏழைப் பங்காளன் கதாபாத்திரத்தில் ரசித்து நடித்துள்ளார் விஜய் ஆண்டனி . உற்சாக நாயகியாய் ஆத்மிகா 

அம்மாவின் ஆரம்பக் கதையும் அவரது சபதமும் அருமை . அடிமைப் பெண் படத்தை நினைவூட்டும் கம்பீரம் .அம்மாவாக நடித்துள்ள திவ்ய பிரபாவும் கவனம் கவர்கிறார் . 

விதம் விதமான வில்லன்கள் பக்க மசாலா நெடி தூவுகிறார்கள் . டைலர் கதாபாத்திரம் வித்தியாசம் . 

குடிசை மாற்று வாரியம் போன்ற பகுதிகளில் வாழும் ஏழைப் பிள்ளைகள் விரும்பினாலும் முன்னேற முடியாத அளவுக்கு எப்படி அரசியல் ரவுடித்தனம் விளங்குகிறது என்று காட்டிய விதம் அருமை. 

விஜய் ஆண்டனியே நடித்த திமிரு புடிச்சவன் படத்தை நினைவு படுத்தும் நல்ல காட்சிகளும் உண்டு . வசனத்தில் வேறு திமிரு புடிச்சவன் , பிச்சைக்காரன் படங்கள் நினைவு கூரப்படுகின்றன .ஒரு காட்சியில் விஜய் நடித்த  கத்தி படமும் நினைவுக்கு வருகிறது . 

ஒளிப்பதிவு , இசை அருமை.

மலைப்பாங்கான அந்த லொக்கேஷன் உள்ளம் கொள்ளை கொள்கிறது 

 விஜய் ஆண்டனியே படத் தொகுப்பு செய்திருக்கிறார் . 

சுயேச்சை எம் எல் ஏ படத்தை நினைவு படுத்தும் அரசியல் சித்து விளையாட்டுகள் மூலம் பரபரப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளை கொண்டு போய் படத்தை சிறப்பாக முடிப்பதோடு ஆரம்பம் முதல் கடைசி வரை அருமையான படமாக்கலில் முத்திரை பதிக்கிறார் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் .

கோடியில் ஒருவன் — 3.75/5 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *