மிரள் @ விமர்சனம்

AXESS FILM FACTORY சார்பில் டில்லி பாபு தயாரிக்க, பரத், வாணி போஜன், கே எஸ் ரவிக்குமார், ராஜ் குமார் நடிப்பில் எம். சக்திவேல் இயக்கி இருக்கும் படம். 

இரவில் காரில் ஊருக்குப் போகும் வழியில் ஆள் அரவமற்ற இடத்தில் கணவன் (பரத்)  அடித்துக் கொல்லப் படுவது போல கனவு காணும் மனைவி (வாணி போஜன்) மற்றும் பள்ளி செல்லும் ஒரு மகன் கொண்ட குடும்பம்.  அவர்களுக்கு வேறு ஒரு பிரச்னை இருக்கிறது என்பதும் உணர்த்தப்படுகிறது. நிஜத்திலும் ஒரு பெரும் உயிராபத்தில்  இருந்து கணவன் மயிரிழையில் உயிர் தப்புகிறான் . 
 
சாதிக் கலப்புத் திருமணம் செய்து  கொண்டவர்கள் என்பதால் பெண்ணின் அப்பா ( கே எஸ் ரவிக்குமார்) மற்றும் அந்த வழி உறவுகளுக்கு இன்னும் கோபம் உண்டு. 
 
எனினும் மாமியாரின் அழைப்பின் பேரில் குலதெய்வம் கோவிலுக்குப் போய் வர, மனைவியின் ஊருக்கு போகிறார்கள் . அலுவலக நண்பனும் (ராஜ்குமார்) தன் மனைவி மற்றும் மகனோடு சில நாட்கள் கழித்து ஊருக்கு வருகிறான் . 
 
நாயகனுக்கு பணி நிமித்தம் உடனே சென்னை வர அழைப்பு வருகிறது . கணவன் மனைவி மகன் மூவரும் இரவில் கிளம்ப வழியின் அமானுஷ்ய உணர்வுகளோடு,  ஒரு  உருவம் கணவனை  அடித்துக் கொன்று உயிரோடு எரிக்க முயல்கிறது . செய்தும் முடிக்கிறதே . இங்கே ஒரு டுவிஸ்ட். 
 
நடந்தது என்ன என்பதே படம். 
 
பிரசாத்தின் அருமையான பின்னணி இசை அசத்துகிறது  . ஒலியின் ஆதிக்கம் நிறைந்த இசையை அருமையாக செய்து இருக்கிறார்.  காற்றாலை மின்சாரக் காற்றாடியின் விசிறித் தகடு சுழலத் துவங்கும் போது வரும் ஒலியை வைத்து அவர் அமைத்து இருக்கும் தீம் மியூசிக் அபாரம்  
 
சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு சிறப்பு.  கிராமம், இருள் , விஸ்தீரணம், விபத்து என்று எல்லா விசயங்களையும் அழகாக கண்ணுக்குள் கொண்டு வருகிறார். 
 
 சந்தீப் குமாரின் ஒலி வடிவமைப்பும் சபாஷ்  . திக்கிட வைக்கிறார். 
 
மணிகண்டன் சீனிவாசனின் கலை இயக்கம் அருமை ,. வைக்கோல் போருக்கும்  காரின் ஹெட் லைட் எரிவது உட்பட பல இடங்களில் சிறப்பான வேலை   குறிப்பாக அந்த மூகமூடி வடிவமைப்பு பிரம்மாதம் . அந்த முகமூடியை கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தாலே நல்ல கதைகள் வரும் வாய்ப்பு உண்டு . கனவு கண்டு விழிக்கும் வாணி போஜனின் முன்னாள் வீட்டில் இருக்கும் ஓவியம் , கனவில் வந்த முக மூடி சாயலில் இருக்க, அவர் தலையை சட்டென்று திருப்பி வேறு ஓவியங்களைப் பார்ப்பது , காரின் சக்கரத்தில் நசுங்கும் பொம்மைக் கார் ஆகிய ஷாட்களில் பாராட்டுப் பெறுகிறார் இயக்குனர் சக்திவேல். 
 
பரத் , வாணி போஜன் இருவரும் மிக சிறப்பாக நடித்துள்ளனர். 
 
முக்கிய சம்பவம் நடக்கும் லொக்கேஷன் அருமை . 
 
வம்படியாக இறுக்கிப் பிடித்து இழுத்துக் கட்டப்பட்ட-  வசதிக்கு ஏற்ப வளைத்துக் கொள்ளப்பட்ட  திரைக்கதை , மிக பலவீனமான வசனங்கள் , தேவையற்ற திணிப்புகள் நியாய தர்மமின்மை எல்லாம் இருந்தாலும் கூட,  படம் கடைசியில் சொல்லும் விசயத்தில் கவனம் கவர்கிறது . மரியாதை பெறுகிறது. 
 
இன்னொரு பக்கம் பல இடங்களில் நிஜமாகவே மிரள வைக்கிறார்கள் 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *