மூணே மூணு வார்த்தை @ விமர்சனம்

3 varthai 1

கேப்பிட்டல் பிலிம் ஒர்க்ஸ் சார்பில் எஸ்.பி.பி சரண் தயாரிக்க, அர்ஜுன் சிதம்பரம் , அதிதி செல்லப்பா, வெங்கடேஷ் ஹரி நாதன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், லக்ஷ்மி , கே.பாக்யராஜ் ஆகியோர் நடிக்க , மதுமிதா இயக்கி இருக்கும் படம் மூணே மூணு வார்த்தை .  எத்தனை வார்த்தைக்கு பலன் உண்டு என்று பார்க்கலாம் .

நல்ல வேளையில் இருந்தும் ஒழுங்காக வேலை செய்யாததால் வேலையை இழந்த நண்பர்கள் அர்ஜுனும்  (அர்ஜுன் சிதம்பரம் )  கர்ணாவும் (வெங்கடேஷ் ஹரி நாதன்)!   அர்ஜுனுக்கு அஞ்சலி (அதிதி செல்லப்பா) என்ற பெண் மீது காதல் வருகிறது . அதை வெளிப்படுத்த சரியான சமயம் பார்த்து அர்ஜுன் காத்திருக்கிறான் . அப்பா அம்மாவை இழந்த அர்ஜுனின் தாத்தாவும் (எஸ்.பி.பாலசுப்ரமணியம் ) பாட்டியும் (லக்ஷ்மி ) அவன் வேலை வெட்டி இல்லாமல் சுத்துவதைப் பார்த்து வருத்தப்படுகிறார்கள் .

எனவே அர்ஜுன் தன் நண்பன் கர்ணாவுடன் சேர்ந்து ஒரு புதிய தொழிலை ஆரம்பிக்கிறான் . அதாவது ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடம் நேரில் சொல்ல விரும்பாத விஷயங்களை இவர்களிடம் சொன்னால் இவர்கள் போய் சொல்வார்கள். அதற்கு சர்வீஸ் சார்ஜ் பெறுவார்கள். காதலியை கழட்டி விட விரும்பும் காதலன், வேலை தருவதாக சொல்லி விட்டு பிறகு மறுக்கும் நிறுவனங்கள்.. இப்படி  எல்லோரும் இவர்களை பயன்படுத்திக் கொள்கிறர்கள் .

இந்நிலையில் இவர்கள் சொன்ன ஒரு தகவல் காரணமாக அஞ்சலியின் அக்காவின் திருமணம் அநியாயமாக நின்று போகிறது . அர்ஜுனுக்கு அஞ்சலி காதல் கூடி வரும் வேளையில் அவளுக்கு இந்த உண்மை தெரிய வர, அவள் அர்ஜுனை வெறுக்கிறாள். தவிர, இவர்கள் போய் சொல்லும் தவறான தகவல்களால் பாதிக்கப்பட்ட எல்லோரும் இவர்களுக்கே சாபம் விடுகிறார்கள் .

இந்த சிக்கல்களில் இருந்து நண்பர்கள் எப்படி மீண்டார்கள்? அஞ்சலி அர்ஜுனை ஏற்றுக் கொண்டாளா? என்பதே இந்தப் படம் .

3 varthai 2

வேலைப்,பணியால் ஏற்பட்ட உடல் நலக் குறைபாட்டால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் இயக்குனர் பாக்யராஜிடம் நாயகன் தன் கதையை ஒரு சினிமாக் கதை போல சொல்ல , அதில் இருந்து படம் துவங்கும் விதம் ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது .

அர்ஜுன் ஆர்வமாக நடித்துள்ளார் . வெங்கடேஷ் ஹரி நாதன் சில சந்தர்ப்ப்பங்களில் சிரிக்க வைக்கிறார் . அதிதி செல்லப்பா எப்போதும் புன்னகையில் இருக்கிறார் .

சில காட்சிகளில் இயக்குனர் மதுமிதாவும்  வசன கர்த்தா ராம்போவும் சிரிக்க வைக்கிறார்கள்

சீனிவாச வெங்கடேஷின் ஒளிப்பதிவு ஒகே ரகம்.

கிளைமாக்சில் சின்ன சின்ன திருப்பங்களுக்கு முயன்று இருக்கிறார்கள்

மூணே மூணு வார்த்தை …நிறைய சிரத்தை தேவை

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →