நதிகள் நனைவதில்லை @ விமர்சனம்

Actor Pranav and Actress Monica in Nadhigal Nanaivathillai Movie Stills

சரஸ்வதி எண்டர்டெயின்மென்ட் வழங்க , கே. லாவண்யா தயாரிப்பில் அறிமுகக் கதாநாயகன் பிரணவ், மோனிகா, ரிஷா , பாலாசிங் ஆகியோர் நடிக்க கதை திரைக்கதை வசனம் எழுதி நாஞ்சில் பி.சி. அன்பழகன் இயக்கி இருக்கும் படம் நதிகள் நனைவதில்லை .

படம் வெற்றியில் நனையுமா? பார்க்கலாம்.

முதுகலைப் பட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றும் வேலை கிடைக்காமல் இருக்கும் நாயகனை (பிரணவ்) , அப்பா (பாலாசிங்) வெறுப்பு வார்த்தைகளால் தினசரி சாகடிக்கிறார் .  அம்மா இல்லாத அவனுக்கு பாசமுள்ள தங்கை மட்டுமே ஆதரவு . இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் விதவை அக்காவும் தம்பி மீது வெறுப்பையே உமிழ்கிறாள்.

அவன் மீது ஆசைப்பட்டு அவனை பணக்காரன் என்று நம்பி காதலிக்கிறாள் ஒரு பெண் (ரிஷா) .  நாயகன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்கு குடி வரும் பெண்ணின் (மோனிகா) வீட்டில் புகுந்த திருடனை விரட்டப் போன நாயகன் , அவர்களுடன் நடந்த சண்டையில் ஒரு பெரும் இழப்புக்கு ஆளாகிறான் . .தான் காதலித்தவான் உண்மையில் ஏழை என்பது மட்டுமால்லாது இப்போது இன்னும் வழிவற்றுப் போன நிலையில் அவனால் பலன் இல்லை என்று காதலை விட்டுப் போய் விடுகிறாள்.

அதே நேரம் பக்கத்து வீட்டுப் பெண் அவனைக் காதலிக்கிறாள் . ஒரு நிலையில் அவனை தந்தை வீட்டை விட்டே துரத்த , யாரிடமும் சொல்லாமல் விலகும் அவன் மனம் வெறுத்த நிலையிலும் மக்களைக் காக்கும் செயற்கரிய ஒரு செயல் செய்கிறான் . அவனை ஒதுக்கியவர்கள் எல்லாம் இப்போது உறவு கொண்டாடி வர, அவன் எடுத்த முடிவுதான் இந்தப் படம்.

nadhigal_nanaivathillai_tamil_movie_stills_2107141100_043

படத்தில் முதலில் கவர்வது சவுந்தர்யனின் பாடல் இசை . அதன் புண்ணியத்தில் ஒரு டப்பாங்குத்து பாடல் பட்டையைக் கிளப்ப, ஜேசுதாஸ் பாடும் பாடல் ஒன்று காதில் தேன் ஊற்ற , இன்னும் இரண்டு பாடல்களும் வசீகரிக்கின்றன.

அடுத்து இயக்குனர் எழுதி இருக்கும் வசனங்கள் அங்கங்கே அட என்று ஆச்சர்யப் பட வைக்கின்றன . உதாரணம் வேலை கிடைச்சிடுச்சா என்று கேட்கும் கதாநாயகியிடம், நாயகன் சொல்லும் ” நான் விக்கிரமாதித்தனா இருந்தா , வேலை வேதாளமா இருக்கு ” என்ற பதில் !

சண்டைகாட்சிகளும் பரவாயில்லை . ரிஷா பாடல்களில் வளைந்து நெளிந்து ஆடினால் , மோனிகா மழைப் பாட்டில் குலுங்கி குலுங்கி ஆடுகிறார் .

திருநங்கையை கவுரவப் படுத்தும் வசனம் , மாற்றுத் திறனாளிகளின்  மன உறுதியை சொல்லும் பாடல் ஆகியவை பாராட்டுக்குரியவை .

அணை உடையும் கிராபிக்ஸ் காட்சி சிறப்பு.

நலிந்து போவோர்க்கு நம்பிக்கை ஊட்டும் கதை .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →