இசை அமைத்துப் பாடல்கள் எழுதி பிரதீப் குமார் தயாரிக்க, செந்தூர் பாண்டியன், பிரீத்தி கரன், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ் செல்வி, ஷிவானி கீர்த்தி, நடிப்பில் பிரசாத் ராமர் எழுதி இயக்கி இருக்கும் படம் .
முக நூலில் பெண்களை வளைத்து தியேட்டருக்கு அழைத்துப் போய் கசமுசா செய்வதோடு அந்தப் பெண்ணின் தோழிகளை நண்பர்களுக்கும் கொடுக்கிற ஒரு மதுரை இளைஞன் ( செந்தூர் பாண்டியன்) அதே முகநூலில் உரையாடும் கும்பகோணத்துப் பெண் ஒருத்தியின் (பிரீத்தி கரன்) பிறந்த நாள் அன்று அவளே எதிர்பாராதபடி நேரில் சென்று அவளை ஆச்சர்யப்படுத்த, நண்பனோடு பைக்கில் காலையில் ஐந்து மணிக்கு மதுரையில் இருந்து கிளம்பி கும்பகோணம் வருகிறான் .
எப்படியாவது அவளை கரெக்ட் செய்து அவளது பிறந்த நாள் அன்றே அவளை அனுபவிக்க அவன் திட்டமிட்டு முயற்சிக்க , அவளோடு அவளது தோழி ( பிக் பாஸ் பூர்ணிமா) அவளது தங்கை இருவரும் சேர்ந்து சந்திக்க, அதன் பின்னர் நடந்தது என்ன என்பதே படம் .
முக நூல் நட்புகள் நினைத்தது போல இருக்காது . நேர்மாறாகவும் இருக்கும் என்பதையும் , நட்போ காதலோ அல்லது ஜஸ்ட் லைக் சந்திப்போ அந்த சந்திப்பில் ஆண் சாதிக்க விரும்புவது என்ன ? சந்திப்பை பெண் எப்படி பார்க்கிறாள் என்பதையும் சொல்லும் படம்.
சுவையான கதை. எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் ஆரமபித்துப் பறக்கிறது . பெரும்பாலான காட்சிகளில் இருவர் மட்டுமே. நீளமான ஷாட்கள் யதார்த்தமாக இருக்கின்றன . ஷார்ப்பாக கட் செய்யாமல் end tail எனப்படும் வால் விட்டுக் கட் செய்யும் படத் தொகுப்பு பாணி ரசிக்க வைக்கிறது .
கிளைமாக்சுக்கு இன்னும் கொஞ்சம் யோசித்து இருக்கலாம் .
நேரத்தைக் காட்டுவதற்காக வெறுமனே பைக்கில் போவது நடப்பது போன்ற காட்சிகள் ஷாட்களுகுப் பதில் சின்னச் சின்ன சம்பவங்கள் காமெடிகள் என்று எழுத்தில் இன்னும் அடர்த்தி கொடுத்து இருந்தால் படம் நன்றாக வந்திருக்கும் .