நாஞ்சில் பி.சி.அன்பழகனின்’நட்சத்திர மழை ‘

natchathra mazhai
natchathra mazhai
ஆரம்பம்

காமராசு, அய்யா வழி, நதிகள் நனைவதில்லை ஆகிய படங்களை இயக்கி, தயாரித்துள்ள நாஞ்சில்  பி.சி.அன்பழகன், இயக்கி தயாரிக்கும் நான்காவது படம் ‘நட்சத்திர மழை’.படத்திற்கான ஏழு பாடல்களையும் அவரே எழுதுகிறார். ஆண்டனி என்பவர் இசையமைக்கிறார்.

படத்தின் தொடக்க விழா, பூஜையுடன் செப்டம்பர் 21ஆம் தேதி, காலை  சென்னை தியாகராயா நகரில் உள்ள சர்.பி.டி. தியாகராயர் ஹாலில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுனர் ரோசையா சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். மேலும், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கே.ஆர், பின்னணி பாடகர் யேசுதாஸ், பின்னணி பாடகி வாணி ஜெயராம், சமூக சேவகர் சிவகுமார், நடிகர்கள் குண்டு கல்யாணம், அணு மோகன், நடிகை ரிஷா, தயாரிப்பாளர் கலைப்புலி ஜி.சேகரன் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

natchaththira mazhai
கவர்னரின் டைரக்ஷன்

ஆளுனர் ரோசையா, கேமராவை ஆன் செய்ய, தயாரிப்பாளர் கே.ஆர், கிளாப் போடு அடிக்க, ரிஷா நடிப்பில் படத்தின் முதல் காட்சி படமாக்கப்பட்டது.

ஆளுனர் ரோசைய்யா பேசுகையில், “பொழுதுபோக்கு  அம்சமாக மட்டும் இன்றி, சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை தனது படங்களின் மூலம் தொடர்ந்து சொல்லி வரும் இயக்குனரும், தயாரிப்பாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகனுக்கு எனது பாராட்டுக்கள். இந்த நாளில் தொடங்கியுள்ள நாஞ்சில் பி.சி.அன்பழகனின், இந்த நட்சத்திர மழை படம் பெரிய வெற்றியடை வேண்டும்.” என்றார்.

நட்சத்திர மழை
கதராடைக்கு பொன்னாடை

இயக்குனரும் தயாரிப்பாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன், நிகழ்ச்சியில் நன்றியுரை கூறி பேசுகையில், “மருத்துவத்தை சேவையாக்கி, சமூக அக்கறையோடு வாழ்வை கடந்து செல்லும் இளைஞனை, காதல் மழையில் நனைந்த மயிலிறாகால் வருடி கொடுக்கும், உணர்வுகளுக்கு உருவங்கள் தரும் படைப்பே  ‘நட்சத்திர மழை’.மனத்திருப்தியாய் இயங்குபவனே உண்மையான பணக்கரான், மற்றவர்களெல்லாம் இயந்திரங்கள் துணையுடன் இயங்கும்  வெற்றிட வெறுமைகளே.குணங்களை வெறுத்தாலும் மனிதனை – மனிதன் நேசிக்க வேண்டும், என்கிற கருத்து குவியல்களின் திரை சிற்பமே  ‘நட்சத்திர மழை’.

புது வருடத்தில் , கடவுளின் கைரேகையான கன்னியாகுமரியில் ‘நட்சத்திர மழை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இரண்டு கதாநாயகன், இரண்டு கதாநாயகிகள் கொண்ட ‘நட்சத்திர மழை’ யின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.” என்று தெரிவித்தார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →