அறிவிக்கப்பட்டு இருக்கும் தேசிய திரைப்பட விருதுப் பட்டியலில் விசாரணை படம் சிறந்த மாநில மொழி படமாக விருது பெறுவதோடு ,
அந்தப் படத்தில் நடித்த சமுத்திரக்கனி சிறந்த துணை நடிகருக்கான விருதையும் , படத்தின் எடிட்டரான மறைந்த கிஷோர் அதே படத்துக்காக சிறந்த எடிட்டருக்கான விருதையும் பெற்று இருக்கிறார்கள்.
இவர்களோடு தாரை தப்பட்டை படத்துக்காக இசைஞானி இளையராஜா சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதையும் பெற்று இருக்கிறார் .
விருதுப் பட்டியல் மகிழ்வு அளித்தாலும், எடிட்டர் கிஷோர் அதீத வேலைப் பளு காரணமாக உடல் நலிவுற்று மரணம் அடைந்த விஷயம், அவருக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில்,
கனத்த நெகிழ்வை உருவாக்குகிறது
அந்த மனிதன் உயிரோடு இருந்திருந்தால் விசாரணை போன்ற இன்னும் எத்தனை படைப்புகளுக்கு உயிர் தருவானோ என்ற .ஏக்கம் எழுகிறது .
ஒரு படைப்பு சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக அந்த படம் சம்மந்தப்பட்ட பலரும் மெய் வருத்தி உழைப்பது ஒன்றும் புதிய விஷயம் இல்லை .
ஆனால் ஒரு காலத்தில் இயக்குனர்களுக்கு எடிட்டிங் சென்ஸ் அதிகம் இருந்தது .
பீம்சிங் ,கே.ஷங்கர் போன்ற திரைக்கலை மேதைகள் எடிட்டராக இருந்து இயக்குனர் ஆனவர்கள். எனவே தேவை இல்லாமல் நிறைய படம் பிடிக்க மாட்டார்கள் .
ஆனால் பின்னாளில் இயக்குனர்கள் எடிட்டிங் என்பது, தான் சம்மந்தபட்ட விஷயம் இல்லை என்ற முடிவுக்கு வந்தார்கள் . எனவே தோணுவதை எல்லாம் படமாக்கித் தள்ளி விட்டு ,
எடிட்டிங்கில் பார்த்துக் கொள்ளலாம் என்ற பழக்கத்துக்கு வந்தார்கள் . அவர்களாவது எடிட்டிங்கில் உடன் உட்காருபவர்களாக இருந்தார்கள் .
ஃ பிலிம் பயன்பாடு இல்லாமல் போன பிறகு, இப்படி அளவு இல்லாமல் படம் எடுத்துக் குவிக்கும் பழக்கம் அதிகம் ஆனது. அதோடு அப்படி எடுத்துக் கொண்டு வந்ததை எடிட்டரிடம் கொட்டி,
தொகுத்துக் கொடுக்கச் சொல்லும் வழக்கம் பெருகியது .
தவிர மாறி வரும் புரமோஷன் உத்திகளின் அடிப்படையில் டிரைலர், டீசர், டி வி ஸ்பாட்ஸ் என்று, வேலைகளும் அதிகம் ஆனது .
அது மட்டுமல்ல படங்களை ரிலீஸ் செய்வதில் உள்ள குழப்பம் காரணமாக, அதிக வேலைகளை குறைவான நேரத்தில் செய்ய வேண்டிய கட்டாயம் . அதனால் ஓய்வொழிச்சல் இல்லாத நிலை .
ஓபி அடிப்பவர்கள் என்றால் பிரச்னை இல்லை . ஆனால் சின்சியர் ஆன நபர்களுக்கு இது ஒரு சித்திரவதையே .
இப்படி ஓய்வின்றி பல படங்களுக்கு வேலை செய்ததால் உயிரைக் கொடுத்தவர் கிஷோர் .
அவருக்குத்தான் இப்போது தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இப்படி பல படங்களுக்கு உழைப்பைக் கொடுத்து உயிரையும் கொடுத்து , மரணித்த பிறகு தேசிய விருது எடிட்டராக அங்கீகாரம் பெற்று இருக்கும் கிஷோரின் குடும்பம் எப்படி இருக்கிறது . ?
எடிட்டர் கிஷோரின் தந்தையாரிடம் சக பத்திரிக்கையாளர் ஒருவர் தொலைபேசியில் பேசியபோது அந்த தந்தை கதறி அழுதது நெஞ்சை உலுக்கி இருக்கிறது .
உடல் நலத்திலும், பொருளாதார ரீதியிலும் மிகுந்த சிரமத்தில் இருப்பதாக சொல்லி இருக்கிறார் அந்த தந்தை
மகனை இழந்த தந்தைக்கு கிஷோரால் பலன் பெற்றவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? தமிழ் சினிமா உலகமும் விருது கொடுக்கும் இந்திய சினிமா உலகமும் என்ன செய்யப் போகிறது ?
இதுதான் அந்த தந்தையின் முகவரி .
Editor kishore father, 21/32, drowpathi Amman koil street, kumara kuppam, valavanur – 605108. PH – 9600249340
IF YOU ARE ALL NOT HANDICAPPED , PREPARE TO SAVE HIM NOW !