இரட்டை வேடத்தில் அறிமுக ஹீரோ சுரேஷ்குமார்

DSC_0477-Actor Suresh Kumar
இரட்டை வேடத்தில் நடிக்க வேண்டும் என்றால் எல்லா ஹீரோக்களுமே சந்தோஷமாய் சம்மத சந்தணம் பூசுவார்கள் . ஆனால் முதல் ;படத்திலேயே அந்த வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும் ? பூக்களுக்கு மரியாதை படத்தில் ஹீரோவாக நடிக்கும் சுரேஷ்குமார் அந்த விதத்தில் அதிர்ஷ்டசாலி .

பொறியியல் பட்டதாரியான சுரேஷ்குமார், டெல்லியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிப்புரிந்துக் கொண்டிருக்கும்போதே, நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தினால், அங்கே இருந்த நடிப்பு பள்ளி ஒன்றில் நடிப்பு பயிற்சியும், நடனப் பள்ளி ஒன்றில் நடனப் பயிற்சியும் பெற்றார். பிறகு வேலையை விட்டுவிட்டு, நடிக்க வாய்ப்புத் தேடி சென்னைக்கு வந்த அவர், சென்னையில் கூத்து பட்டறை ஆசிரியர் ஒருவரிடமும் நடிப்பு பயிற்சியை மேற்கொண்டார். 

1 (3)-Actor Suresh Kumar

சினிமா வாய்ப்பு தேடி அலைந்தவருக்கு சில  தேடல்களுக்குப் பிறகு ‘பூக்களுக்கு மரியாதை’ என்ற படத்தில் ஹீரோ வாய்ப்பு கிடைத்தது. தற்போது முடியும் தருவாயில் உள்ள இந்தப்படத்தில்தான்  சுரேஷ்குமார், இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பின் போதே, இவருடைய திறமையைப் பார்த்து, இவருக்கு ‘மிஸ் பண்ணாதிங்க அப்புறம் வருத்தப்படுவிங்க ‘ என்ற படத்திலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த படங்கள் மட்டும் இன்றி, தெலுங்கிலும் இரண்டு படங்களில் நாயகனாக நடித்து வரும் சுரேஷ்குமாரிடம், “முதல் படத்திலேயே  இரட்டை வேடங்களில் நடித்த  அனுபவம் எப்படி இருந்தது?” என்று கேட்டபோது “, முதல் படத்துக்காக கேமரா முன்பு நிற்பதே ஒரு புதுமையான அனுபவம் தான். அதோடு இரட்டை வேடம் என்றதும், கொஞ்சம் பரபரப்பாக இருந்தது. ஆனால்  நான் டெல்லியில் பயின்ற நடிப்பு பயிற்சியும், சென்னையில் கூத்து பட்டறை ஆசிரியரிடம் பயின்ற பயிற்சியும் எனக்கு உதவியாக இருந்தது.

28-Actor Suresh Kumar

மேலும், பூக்களுக்கு மரியாதை படத்தின் இயக்குனர் எனக்கு கொடுத்த ஊக்கமும், தைரியமும் என்னை அனைவரிடமும் பாராட்டு வாங்கும் அளவுக்கு சிறப்பாக நடிக்க வைத்தது. இரண்டு வேடங்களில் ஒன்றில் கல்லூரி மாணவனாக நடித்துள்ளேன். ரொம்ப சிறப்பான கதாபாத்திரமாக அமைந்துள்ளது,”என்கிறார் சுரேஷ்குமார்.

அதோடு “பூக்களுக்கு மரியாதை, மிஸ் பண்ணாதிங்க அப்புறம் வருத்தப்படுவிங்க ஆகிய இரண்டுப் படங்கள் வெளியான பிறகு தொடர்ந்து பல வெற்றிப்  படங்களில் தன்னை தமிழ் ரசிகர்கள் பார்ப்பார்கள்” என்கிறார்  நம்பிக்கையுடன்.

5-Actor Suresh Kumar

வாழ்த்துகள் சுரேஷ்குமார். !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →