நிலை மறந்தவன் @ விமர்சனம்

தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் வழங்க, 

பகத் பாசில், நஸ்ரியா, கவுதம் வாசுதேவ் மேனன், திலீஷ் போத்தன், செம்பான் வினோத், வினாயகன் நடிப்பில் அன்வர் ரஷீத் இயக்கி மலையாளத்தில் சக்கைப் போடு போட்ட ட்ரான்ஸ் படத்தின் தமிழ் வடிவமே நிலை மறந்தவன். 

எளிய அப்பாவி கிறிஸ்தவ மக்கள்,  கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கையைப் பயன்படுத்தி நோய்களைக் குணமாக்குவதாக பொய்யான கூட்டங்கள் நடத்தி மக்களிடம் இருந்து காசு பறித்து பணத்தில் கொழிக்கிறது கிறிஸ்தவ மதத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு கும்பல் . 

மனநிலை பாதிக்கப்பட்ட தம்பியோடு வளர்ந்த , படித்த,   வேலை கிடைக்காத ,  தன்னம்பிக்கை வளர்க்கும் அளவுக்கு பேச்சுத் திறமை உள்ள ஓர் இந்து இளைஞன் அந்த கும்பலின்  வலையில் சிக்குகிறான். அவனை கிறிஸ்தவ இளைஞனாக பெயர் மாற்றி நோய் தீர்ப்புக் கூட்டங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவது போல மேலும் பேசக் கற்றுக் கொடுத்து பைபிளை நன்கு படிக்க வைத்து மேடை ஏற்றுகிறார்கள்  .

மேடையில் அவன் உணர்ச்சிவசமாக பேசுவதைக் கண்டு , பொய்களை நம்பும் கிறிஸ்தவ மக்கள்  பணத்தைக் கொட்டுகிறார்கள் . அதே நேரம் நோய்களுக்கு மருத்துவமனைக்குப் போகாமல்  இவன் சொல்வது போல ஜெபம் செய்து அதனால் மரணங்களும் நிகழ்கிறது. 

ஒரு நிலையில் தனது செயலுக்காக வருந்தும் இளைஞன் என்ன முடிவு எடுக்கிறான் என்ன நடக்கிறது என்பதே படம்.

நாயகனாக அட்டகாசமாக நடித்துள்ளார் பகத் பாசில் . கடைசிக் காட்சிகளில் செம்பான் வினோத் நெகிழ வைக்கிறார். நஸ்ரியா அசத்தி இருக்கிறார் .அமல நீரத் ஒளிப்பதிவும் ,  ஜாக்சன் விஜய் , சுஷின் ஷ்யாம் இசையும் அருமை.

இந்து மதத்தைச் சேர்ந்த சிலர்   பணம்   சம்பாதிக்க இந்து நபர்கள்  காசுக்காக கிறிஸ்தவ மதத்துக்குள் போய் அந்த மக்களின் நம்பிக்கைகளை வைத்து ஏமாற்றிப் பிழைக்கும் படத்தை மலையாளத்தில் ஒரு இஸ்லாமிய இயக்குனர் இயக்க முடிகிறது இஸ்லாமிய நடிக நடிகையர் நடிக்க முடிகிறது என்பதுதான் மலையாள சினிமா உலகின் அற்புதம். 

தமிழகத்தில் இப்படி ஏமாற்று நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை என்பதால் கேரளாவில் சந்தோஷமாகப் பார்த்து இருக்கிறார்கள்.தமிழகத்தில் கிறிஸ்தவ மதத்தில் இப்படி பிரபலமாக இருக்கும் (எஸ்ரா) சற்குணம், பால் திவாகரன் (தினகரன்) போன்ற பெயர்கள் ஒலி மட்டும் நீக்கப்பட்டு வருகின்றன . 

 மோகன் சி மோசஸ்  என்று ஒரு பெயர் நேரடியாக வருகிறது . 

சிறப்பான திரைக்கதை மற்றும் படமாக்கல் . 

வித்தியாசமான விறுவிறுப்பான படம் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *