வித்தியாசமான கதைக் களத்தில் ‘ஓடு ராஜா ஓடு’

விஜய் மூலன் டாக்கீஸ் வழங்க , கேண்டில் லைட் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் குரு சோம சுந்தரம் , நாசர், ஆனந்த் சாமி, லக்ஷ்மி பிரியா, ஆஷிகா செல்வம் நடிப்பில், 

நிஷாந்த் ரவீந்திரன் மற்றும் ஜத்தின் ஷங்கர் ராஜ் இயக்கி இருக்கும் படம் ஓடு ராஜா ஓடு . படத்தின் திரைக்கதை மற்றும் படத் தொகுப்பும்  நிஷாந்த் ரவீந்திரன்   .

சுனில் சி கே வுடன் சேர்ந்து ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்  ஜத்தின் ஷங்கர் ராஜ். இசி தோஷ் நந்தா .

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் விஜய் மூலன் ,
” புதிய முயற்சிகளுக்கு தமிழ் சினிமாவில்தான் ஆதரவு அதிகம் .
 
எனவேதான் நான் கேரளாவைச் சேர்ந்தவன் என்றாலும் தமிழில் முதல் படத்தை தயாரித்து இருக்கிறேன் .
 
அடுத்த படமும் தமிழ்தான் . மாதவன் கதாநாயகனாக நடிக்கிறார் ” என்றார் .
 
இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான  ஜத்தின் ஷங்கர் ராஜ்,
” எளிமையான நிகழ்வுகளை வைத்து வித்தியாசமான கதைக் களத்தில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம் .
 
எப்போதும் புதிய முயற்சிகளுக்கு ஆதரவு தரும் தமிழ் ரசிகர்கள் இந்த முயற்சிக்கும் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்” என்றார் . 
 
இயக்குனரும் திரைக்கதை ஆசிரியரும் படத் தொகுப்பாளருமான  நிஷாந்த் ரவீந்திரன் பேசும்போது,
”  செட்டாப் பாக்ஸ் ஒரு வீட்டுக்கு வருவதால் ஏற்படும் பிரச்னைகளை சொல்கிற கதை இது .
இந்தப் படத்துக்கு குரு சோமசுந்தரம் கொடுத்த ஆதரவும ஒத்துழைப்பும் மறக்க முடியாதது. ஆனந்த் சாமி , நாசர்  ஆகியோரும் மிக சிறப்பாக நடித்துள்ளனர் ” என்றார் . 
 
இசை அமைப்பாளர் தோஷ் நந்தா பேசும்போது,
“பணம் , அன்பு , இப்படி ஒவ்வொன்றையும் தேடி மனிதன் ஓடிக் கொண்டே இருக்கிறான்.
 
அப்படி ஓடுபவர்களைப் பற்றிய கதை இது . நல்ல இசையும் என்னால் கொடுக்க முடிந்தது ” என்றார் .  
 
ஆனந்த் சாமி பேசும்போது ,
 ” மிக வித்தியாசமான இந்தப் படத்தில் நானும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பது சந்தோஷமாக இருக்கிறது ” என்றார் . 
 
குருசோமசுந்தரம்  தன் பேச்சில், ” வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனமாக இருக்கிறேன் . அப்படி ஒரு படம்தான் இது .
ஒரு ஷேர் ஆட்டோவில் வரும் பலருக்கும் தனித்தனி வாழ்க்கை தேவை பயணம் இருக்கும் . ஒரு நிலையில் அவர்கள் தங்கள் தங்கள் இடத்தில் இறங்கியும் போய் விடுகிறார்கள் .
 
அப்படிப்பட்டவர்கள் ஒரு நிலையில் ஒன்று கூடினால் எப்படி இருக்கும் ? அது போன்ற கதை இது ” என்றார் . 
 
நாசர் பேசும்போது,
” சில படங்கள் படம் எடுத்து ஓடும்போது சந்தோசம் தரும் . ஆனால் வெகு சில படங்கள்தான் நடிக்கும்போதே சந்தோசம் தரும் .
 
அப்படி,  நடிக்கும்போதே சந்தோசம் தந்த படம் இது . குறைந்த வசதிகளை வைத்து சிறப்பாக இந்த படத்தை உருவாக்கினார்கள் .
இந்தப் படம்  நன்றாக ஓட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் ” என்றார் . 
 
ஆகஸ்டு 17 ஆம் தேதி, அதாவது வரும் வெள்ளியன்று  படம் வெளிவருகிறது

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *