கல்யாணத்தில் உள்ள வன்முறை சொல்லும் ‘ஒரு நாள் கூத்து’

oru 999999

கெனன்யா பிலிம்ஸ் சார்பில் J.செல்வகுமார் தயாரிக்க, 

தினேஷ் ,  மியா ஜார்ஜ் , நிவேதா பெத்துராஜ்,, மெட்ராஸ் ரித்விகா, பாலசரவணன், ரமேஷ் திலக்  ஆகியோர் நடிக்க, 
 
பண்பலை வானொலியில் முதன்மை நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணிபுரிந்த நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கும் படம் ஒரு நாள் கூத்து .

“கல்யாணம் என்பது வாழ்வில் ஒரு நாள் மட்டுமே நடைபெறும் விஷயம் என்றாலும் அது  முக்கிய நிகழ்வு. எனவே அதற்கு விரும்பியபடி செலவு செய்யலாம். தப்பில்லை” என்பது ஒரு கருத்து . 
 
“மனைவியை நன்றாக வைத்துக் கொள்வது வேறு . கல்யாண நிகழ்ச்சிக்கு காசை இறைப்பது வேறு. 
 
ஒரு போட்டோ ஆல்பம் வீடியோ ஆல்பத்தில் முடிந்து போகும் ஒரு நாள் கூத்துக்கு பெரும் செலவு  தேவை இல்லை” என்பது இன்னொரு கருத்து. 
இந்த இரண்டு கருத்துக்கும் இடையே பயணிக்கும்  படம் இது என்பதை தெளிவாக புரிய வைக்கிறது படத்தின் முன்னோட்டம்  

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் வெரைட்டியாக வந்து இருக்கும் பாடல்கள் இப்போதே செம ஹிட் .

oru 99999

அவற்றில் நூறாண்டுகளுக்கு முன்பு கோபால கிருஷ்ண பாரதி எழுதிய ‘எப்போ வருவாரோ ..’  என்ற பாடலும் ஒன்று  . ‘அடியே அழகே…’  என்ற  பாடல் இளைஞர்களை ஈர்க்கிறது  

கோகுலின் சிறப்பான ஒளிப்பதிவில் பாடல்களை மிக அட்டகாசமாகப் படமாக்கி  இருக்கிறார் இயக்குனர் நெல்சன் . 

இவை தவிர, 

 ஆண்கள் –  பெண்கள் ,படித்தவர் – படிக்காதவர் , ஏழை – பணக்காரர் சந்தோஷமாக இருப்பவர் — நொந்து போனவர் என்று… சமூகத்தின் பல தட்டு மக்களிடமும், 

 அவர்களின் கல்யாண சந்தோஷ — விரக்தி  அனுபவங்கள்  , கல்யாண வரவு — செலவு , கல்யாணத்துக்கு முந்தைய — பிந்தைய வாழ்க்கை என்று கதம்பமாகக் கேள்விகள் கேட்டு அவர்களின் பதில்களை பெற்று, 

ஓர் ஆவணப்  படமாகக் காட்டினார்கள் . அவர்களில் ஓர்  ஆட்டோ டிரைவர் சும்மா ஆங்கிலத்தில் ஸ்டைலாக பொளந்து கட்டிப் பேசுகிறார் பாருங்கள்…அபாரமோ அபாரம் . 

“என்ன நெல்சன் .. செட்டப்பா?” என்று கேட்டால் ” சேச்சே …. முழு ஒரிஜினல் . அவர் ஆங்கிலோ இந்திய பள்ளி மாணவர்களுக்கு ஆட்டோ ஓட்டுகிறவர் .

oru 9

அந்த மாணவர்களிடம் பேசிப் பேசி அப்படி சூப்பர் ஸ்டைலாக இங்க்லீஷ் பேச ஆரம்பித்து விட்டார் . அதுக்கு அப்புறம்  அவரை தேடினேன் . கிடைக்கவே இல்லை ” என்கிறார் . 

அதுவும் பலரும்  தமிழில் தங்கள் சொந்தக் கதை சோக சுகக் கதைகளை பேசிக் கொண்டு இருக்க , எடிட்டர் சாபு ஜோசப் சரியான டைமிங்கில் அவர் ஆங்கிலத்தில் பேசும் ஷாட்களைப் போட,  

ஆட்டோ டிரைவர் பேசும்போது எல்லாம் கைதட்டல் குவிகிறது . 

தமிழில்  இப்படி ஒருசுவையான ஆவணப் படம்  வேறு இருக்குமா என்று தெரியவில்லை .

இந்த விளம்பர ஆவணப் படம் ஒரு நாள் கூத்து திரைப் படத்தின் உள்ளீட்டை,  குணாம்சத்தை …அவ்வளவு அட்டகாசமாக அந்த படம் விளக்கி விடுகிறது . செம செம …. !

பண்பலை வானொலியில் பணிபுரியும் ஊழியர்களின் பின்னணியில் ஒரு நாள் கூத்து படத்தின் கதைக் களத்தை அமைத்து இருக்கிறார்நெல்சன் வெங்கடேசன் . 

படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய வசனகர்ததா சங்கர் தாஸ் ( இவர் கல்லூரியில் நெல்சனுக்கு தமிழ் ஆசிரியராக இருந்தவர் ) .

oru 2

” நெல்சன் எனது மாணவன் என்பதில் எனக்கு ஒரு பெருமை உண்டு . 

எனது சிறுவயதில் எங்கள் ஊரில் இருந்த ஓர் அழகான கண்ணியமான நல்ல பெண்மணி , ஒரு அநியாயமான அவமானத்தை சந்தித்தார் . அதற்குக் காரணம் அவரது கல்யாணம் . 

ஒரு நாள் இதை நான் நெல்சனிடம் கூற , கிட்டத்தட்ட  அதே  கருத்தியலில் கல்யாணம் பற்றிய ஒரு கதையைச் சொன்னார் நெல்சன் . இருவரும் தொடர்ந்து பேசினோம் . அப்படித்தான் இந்தப் படம் உருவானது . 

கண்டிப்பாக இந்தப் படம் சமூகத்தில் பல கேள்விகளை எழுப்பும் . அதுவே படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமையும் ” என்றார் . 

ஒளிப்பதிவாளர் கோகுல் பேசும்போது

oru 999

“மிக சிறப்பான கதை திரைக்கதை வசனம் இந்தப் படத்தில் இருக்கிறது . அப்புறம் இந்தப் படத்துக்கு அமைந்த நடிக நடிகையர் அப்படி சிறப்பாக  பொருந்தி அமைந்தார்கள் . 

அவர்கள் நின்றாலே ஃபிரேம் அழகாகி விடும். அதுவே பெரிய பலமாக இருந்தது  ” என்றார் . 

நடிகர் ரமேஷ் திலக் பேசும்போது

oru 1

” நான் பண்பலையில் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்த எனக்கு தலைவராக நிகழ்ச்சித தயாரிப்பாளராக இருந்தவர் நெலசன் . அவர் இயக்கும் படத்தில் நடித்தது சந்தோஷமாக இருந்தது .

இதுவரை எனக்கு அமையாத ஒரு நல்ல கேரக்டரைக் கொடுத்து இருக்கிறார் .  ” என்றார் 

ரித்விகா பேசும்போது

orru 1

” இந்தப் படத்தில் எனக்கு ரேடியோ ஜாக்கி வேடம் . அதற்காக பல நாட்கள் ஒரு ரேடியோ நிலையத்துக்குப் போய் அவர்கள் பேசுவதைப் பார்த்து பயிற்சி எடுத்துக் கொண்டு நடித்தேன் . 

இப்போ எல்லாம் சினிமாவில் பெண்களுக்கு கேரக்டர் ரீதியா முக்கியத்துவம் இருக்கறது இல்ல . ஆனா இந்தப் படத்துல அப்படி இல்லை .

பெண் கேரக்டர்களுக்குதான் முக்கியத்துவம் அதிகம் . எனக்கு ரொம்ப பிடித்த கேரக்டர் இது ” என்றார் . 

இன்னொரு நாயகியான நிவேதா பெத்துராஜ் மிஸ் துபாய் பட்டம் பெற்றவர் . ஆனால் அடிப்படையில் மதுரைப் பொண்ணு . 

எனவே ‘நற்றமிழி’ல் பேசிய நிவேதா பெத்துராஜ்

oru 3

“படத்தின் காஸ்டியூம் டிசைனர் ஜெயலக்ஷ்மி மூலமாக எனக்கு வந்த வாய்ப்பு இது .தினேஷுடன் நடித்தது சந்தோஷமான அனுபவம்.

 படத்தில் நிறைய கேரக்டர்கள் . ஆனால் எல்லா கேரக்டர்களுக்கும் ஒரு நல்ல நேர்த்தியும் , கேரக்டகளுக்கும் கனெக்ஷனும் நன்றாக இருந்தது . எல்லா கேரக்டர்களும் காட்சிகளும் சூப்பராக வந்தது .

ரொம்ப  நல்ல ஸ்கிரிப்ட் கண்டிப்பபா வெற்றி பெறும் ” என்றார் . (பேசுறதப் பார்த்தா,  பாப்பா டைரக்டர் சேர்ல உட்காரும் போல  தோணுதே )

மியா ஜார்ஜ்  தன் பேச்சில்

orru 2

” இந்தப் படத்தில் நான் நடித்து இருக்கும் லக்ஷ்மி என்ற கேரக்டர் அட்டகாசமான கேரக்டர் . என்னால் எப்பவும் மறக்க முடியாத கேரக்டர் .

இந்தக் கேரக்டரில் என்னை நடிக்க வைத்த டைரக்டர் நெல்சனுக்கும் தயாரிப்பாளர் செல்வகுமாருக்கும் நன்றி ” என்றார் . 

பால சரவணன் பேசும்போது

oru 5

” இந்தப் படத்துலதான் முதல் முதல்ல என்னை குளிக்க வச்சாங்க . தலை சீவி பவுடர அடிக்க எல்லாம் விட்டாங்க.  இதுவரை பண்ணின படங்கள்ல  இதை எல்லாம் பண்ண விட்டதே இல்ல . 

படத்துல நகர்ப்புற இளைஞன் கேரக்டர . இதுக்கு என்னை கூப்பிட்டப்போ நானே நம்பல. ஆனா நான்தான் நடிக்கனும்னு தயாரிப்பாளர் செல்வகுமார் உறுதியா சொன்னார் , 

டைரக்டர் நெல்சன் சாரும் அதை அங்கீகரிச்சார். படத்துல பாக்கும்போது எனக்கே ஆச்சர்யமா இருந்தது. அவ்ளோ  நல்லா வந்திருக்கு ” என்றார் . 

கருணாகரன் தன் பேச்சில்

oru 4

” நல்ல கதை . நல்ல சீன்ஸ் . நல்ல வசனம் . எனக்கு நல்ல கேரக்டர் . படம் கண்டிப்பான நல்லா ஓடும்  .

அப்புறம் முக்கியமா நடிகர்களை புரடியூசர் தரப்பில் ரொம்ப நல்லவிதமா கவனிச்சாங்க..சில படங்கள்ல நடிக்கும்போது நான் ஒரு பேல் பூரிக்காக  எல்லாம் சண்டை போட்டு இருக்கேன் .

கேட்டா சென்னை முழுக்க பெல் பூரியே இல்லன்னு சொல்வாங்க . ஆனா இந்த கம்பெனியில்  அப்படி இல்லாமல் நல்ல உபசரிப்பு இருந்தது ” என்றார் . 

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசும்போது

oru 6

” இசையில் தன் கதைக்கு என்ன வேணும் என்பதில்,  டைரக்டர் நெல்சன் தெளிவா இருந்தார் .

அதனால வரைட்டியாக பாடல் பண்ண முடிஞ்சது . இப்பவே எல்லா பாடலும் ஹிட் ஆனதுல   ரொம்ப சந்தோசம் . பின்னணி இசையும் நல்லா இருக்கும் .படம் எல்லாருக்கும் பிடிக்கும் ” என்றார் . 

தினேஷ் தனது பேச்சில் “இந்தப் படத்தோட உண்மையான ஹீரோன்னா அது இந்த மூன்று ஹீரோயின்கள்தான் 

அவங்க கூட நான் இருக்கேன் . ஆனா ஒரு நடிகனா நான் மிஸ் பண்ணக் கூடாத படம் இது. .  ” என்றார் 

இயல்பாக உண்மையாகப் பேசினார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்

oru 9999

“இந்தப் படத்தின் வசனகர்த்தாவும் எனது தமிழ் ஆசிரியருமான சங்கரதாஸ் சார்தான் ,

எனக்கு கதை படிக்கிற இலக்கியம் படிக்கிற பழக்கத்தை ஏற்படுத்தினார். எனது வாசிப்புப் பழக்கம் அவர் உருவாக்கியது . நிறைய வாசிச்சு இருக்கேன் . இனியும் வாசிப்பேன் . 

நான் எப்பவும் அவரோடுதான் கதைகள் பேசுவேன் . கதை பேச எங்கெங்கோ போவோம் . அதில் நிறைய பணத்தையும் இழந்து இருக்கேன் .

அப்படி பேசிப் பேசி உருவாக்கிய எட்டு கதைகளை முழுமையாக வச்சு இருக்கேன் . 

நான் யாரிடமும் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்தது இல்லை . படப்பிடிப்பில் பயன்படுத்தும் மானிட்டரையே நான் எனது ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் பார்த்தேன். 

அப்படிப்பட்ட நான் தன்னம்பிக்கையோடு படத்தை இயக்கி முடித்திருக்கக் காரணம் , கதை திரைக்கதை வசனம் மீது எனக்கு உள்ள நம்பிக்கைதான் . 

oru 7எனக்கும்  இந்தப் படத்தின் தயாரிப்பாளர் செல்வகுமாருக்கும் பல வருடப் பழக்கம் . அவரிடம் ஒரு கதை சொன்னேன் . ஒரு நாள் திடீர்னு கூப்பிட்டு ‘உங்க கதை தியேட்டரில் ஓடுது’ என்றார் .

தாவது  நான் அவரிடம் சொன்ன ஒரு கதையில்  பாதி,   ஒரு படத்தில் வந்து இருந்தது . 

‘மத்த கதைகளும் வருவதற்குள் படம் கொடுங்க’ என்றேன் . ‘வாங்க பேசுவோம்’ என்றார் . செல்வகுமார் எதிலும்  ஆப்ஷன் எதிர்பார்ப்பார் .

எனவே அவரிடம் நான் மூன்று கதைகள் சொன்னேன் . அதில் அவர் செலக்ட் செய்ததுதான்  இந்த ஒரு நாள் கூத்து படத்தின் கதை . .

எனக்கென்னமோ கல்யாணம் என்ற விசயத்தில் ஒரு வன்முறை இருப்பது போல தோன்றுகிறது . அந்த உணர்வில் உருவான கதை இது . 

orru 4

படத்துக்கு என் நண்பர் பாஸ்கரன்தான் ஒளிப்பதிவு செய்வதாக இருந்தது . ஆனால் வேறு படத்தில் அவர் இருந்ததால் கோகுல் வந்தார் .  

மிக அமைதியாக படம் பிடிப்பார் . சிறு சத்தம் கூட இல்லாமல்  படப்பிடிப்பு நடக்கும் . இந்தப் படம் சிறப்பாக வந்ததில் கோகுலுக்கு பெரும் பங்கு உண்டு .

இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் வந்தார் .அவரை நான் ரொம்ப டார்ச்சர செய்து இருக்கிறேன் அனால் அவர் நல்ல பாடல்களையும் நல்ல இசையையும் கொடுத்து இருக்கிறார் . 

அலுவலகத்துக்கு தினேஷ் வந்து போவார் . நான் செல்வகுமாரிடம் ‘இவரையே ஹீரோவாக போடலாம் .

சாதரணமாக வந்து போகும்போது இவர் எப்படி நடந்து கொள்கிறாரோ அப்படியே நடித்தால் போதும்’ என்றேன் . . அவரும் அப்படியே நடித்துக் கொடுத்தார் . 

orru 5

மெட்ராஸ் படம் பார்த்த போதே ரித்விகாவை நடிக்க வைக்க முடிவு செய்து விட்டேன் . ரேடியோ ஜாக்கியாக அவ்வளவு சிறப்பாக நடித்தார் .

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நிலையில் நன் அவரை நிஜ ரேடியோ ஜாக்கியாகவே டீல் செய்ய ஆரம்பித்தேன்.  எதாவது பேசுங்க என்பேன் . அது எல்லாம் தப்பு .

ஆனால் அவர் பொறுத்துக் கொண்டு  சிறப்பாக நடித்தார் 

நிவேதா நடித்து இருக்கும் கேரக்டருக்கு தமிழ் தெரியாத நடிகையை எல்லாம் போட்டு கஷ்டப்பட நான் விரும்பவில்லை . எனவே அவர் ஸ்டில்லை பார்த்து விட்டு தூக்கிப் போட்டு விட்டேன் . 

செல்வகுமார்தான் ‘ஒரு முறை டெஸ்ட் எடுத்துப் பார்ப்போம்’ என்றார் , துபாய்க்கு போன் போட்டு நிவேதவிடம்  பேசினால் தமிழ் சூப்பராக பேசினார் ..அவரை ஒப்பந்தம் செய்தோம் . 

orru 6

மியா ஜார்ஜ் படத்தின் கதையைக் கேட்டு ஒகே சொன்னார் . அனால் தேதி எப்போது என்று சொல்லவில்லை . அப்புறம் அவர் தொடர்பு கொள்ளவும் இல்லை . 

ஆறுமாதம் கழித்து மீண்டும் கதை சொல்லச்  சொன்னார்கள் . ‘மீண்டும் எதற்கு சொல்லணும்/’ என்ற கேள்வியோடு அவரைப் பார்க்கப் போனால்,நான் சொன்ன கதையை அப்படியே திருப்பி சொன்னார் .

இடையில் அவர் மூன்று படங்கள் நடித்து இருந்தார் . அவரது ஈடுபாடு வியக்க வைத்தது . சில விசயங்களை விளக்கமாக கேட்டுத் தெரிந்து கொண்டு நடிக்க வந்தார் . 

கருணாகரனை எனக்கு ரொம்பப்  பிடிக்கும் . இந்தப் படத்தில் நடிக்கும்போது அவர் பத்து படங்களில் நடித்துக் கொண்டு இருந்தார் .

நான் கூட ‘என்ன படம் என்ன கேரக்டர்னு குழப்பம் இல்லாம இருக்கா சார்?’னு கேட்பேன் . ஆனா சூப்பரா நடிச்சுக் கொடுத்தார் 

படம் சிறப்பாக வந்ததில் இவர்கள் எல்லோருக்கும் பங்கு உண்டு . தயாரிப்பாளர் செல்வகுமாருக்கு நன்றி ” என்றார் . 

நன்றி உரையாற்றிய தயாரிப்பாளர் செல்வகுமார்

oru 99

“இந்தப் படம் இந்த அளவுக்கு மிக சிறப்பாக வந்ததற்கு முதல் காரணம் படத்தின் கதை திரைக்கதை வசனம்தான் . 

நெல்சன் அதை மிக சிறப்பாக உருவாக்கி இருப்பதைப் பார்த்துதான் படத்தையே ஆரம்பித்தேன் . 

லக்ஷ்மி கேரக்டருக்கு மியா ஜார்ஜ்தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் நெல்சன்  , மியாவையும்  ரித்விகாவையும் படத்துக்குள் கொண்டு வருவதற்கே ஆறு மாதம் காத்து இருந்தோம் . 

இப்படி எல்லாவகையிலும் பர்ஃபக்ஷனில் உறுதியாக இருந்தோம் . 

தினேஷ் படத்தில் மிக சிறப்பாக நடித்து இருக்கிறார் . எல்லோருமே நன்றாக நடித்துள்ளனர் படம் மிக நன்றாக வந்து இருக்கிறது . 

வரும் ஜூன் 10 ஆம்தேதி  படம் வெளிவருகிறது ” என்றார் .

ஒரு நாள் கூத்து, குறைந்தது  ஒரு மாத திரைக் கூத்தாக வெற்றி பெறட்டும்! 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →