பகிரி @ விமர்சனம்

pakiri-5

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ரணவீரன் , ஷ்ரவ்யா , ரவி மரியா, ஆகியோர் நடிக்க,

 கதை திரைக்கதை வசனம் எழுதி இசக்கி கார்வண்ணன் இயக்கி இருக்கும் படம் பகிரி . வாட்ஸ் அப்  கருவிக்கான தமிழ்ச் சொல்லே பகிரி . படம் என்ன பக(கி)ர்கிறது என்று பார்ப்போம் 
விவசாயத்தின் அருமையை உணர்ந்து சிரமங்களுக்கு இடையிலும் தொடர்ந்து விவசாயம் செய்யும் ஒருவரின் மகன் (பிரபு ரண வீரன் ),  அரசு வேலைக்கு ஆசைப் படுகிறான் . 
அரசு மதுக் கடையில் வேலை கிடைக்கும் வாய்ப்பு மட்டுமே அவனுக்கு சாத்தியமானதாக தெரிகிறது .
வேலை தர அரசியல்வாதி அஞ்சு லட்ச ரூபாய் பணம் கேட்கிறார் . அப்பாவிடம் நிலத்தை விற்று காசு தர சொல்ல, அப்பா திட்டி அனுப்பி விடுகிறார். 
pakiri-4
இளைஞன் அரசு  மதுபானக் கடை பார் ஒன்றில் சர்வராக வேலைக்கு சேர்ந்து பணம் சம்பாதித்து அதை அரசியல்வாதியிடம் கொடுத்து வேலை பெறத்  திட்டமிடுகிறான் . 
இடையில் இட்லி மாவு கடை வைத்து இருக்கும் ஒரு பெண்ணின் மகளுக்கும்  (ஷ்ரவ்யா) அவனுக்கும் காதல் வருகிறது . 
அந்தப் பெண்ணின்  நகைகள் , பார் ஓனரின் உதவி இவற்றோடு பணம் சேர்த்து  அரசியல்வாதிக்கு கொடுத்து வேலைக்கு ஆர்டர் வாங்கினால் ..
மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம்  வாட்ஸ் அப்  செய்திகள் மூலம்  தீவிரமாகிறது . 
அவன் வேலைக்கு போகும் கடைகளை எல்லாம் மக்கள் அடித்து உடைக்க , அவனால் வேலை செய்ய முடியவில்லை . சம்பாதிக்க முடியவில்லை. 
pakiri-3
ஒரு நிலையில் மக்கள்  திரண்டு எழ, மது  விலக்கு அமலுக்கு வர , இளைஞனின் பணம் அரசு வேலை லட்சியம் இரண்டும் கானல் நீராகிறது. 
அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்தப் பகிரி . 
விவசாயத்தின் அருமை சொல்லும் வசனங்கள்  அருமை . சிறப்பு 
நாயகி ஷ்ரவ்யா முட்டைக் கண்கள் வெட்டும் இடுப்பு என்று துடிப்பும் துள்ளலுமாக கவர்கிறார் . 
மாமியார் மருமகள் போல சண்டை போடா வைத்தே காதலை சொல்லும் அந்த ஏரியா கலகல . ஆனால் இன்னும் சிறப்பாக படமாக்கலில் கொண்டு வந்து இருக்கலாம் . 
pakiri-2
நாயகியின் அம்மாவுக்கு ரூட் போடும் கவுன்சிலர் .. உவ்வே !  இது போன்ற நல்ல கருத்துகளை சொல்லும் படங்களில் கூடவா கமர்ஷியல் என்ற பெயரில் இந்த  கருமம் எல்லாம்?
ஒரு நல்ல கதையை சிறப்பாக  சொல்வது கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுப்பது இதெல்லாம்தான் கமர்ஷியல் .
அதே போல மதுவிலக்குக்காக போராடுபவர்கள் எல்லோரையுமே  ஏதோ கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் என்று சொல்வது போன்ற தொனி அநியாயமானது . 
அப்படி சொல்வது நோக்கம் இல்லை என்றால் பிரித்துக் காட்ட வேண்டாமா ?
pakiri6
அதே போல வாட்ஸ் அப் செய்திகளால் நாட்டு மக்களே திருந்தி அதனாலேயே மதுவிலக்கு வந்து விட்டது என்று கதை சொல்வதெல்லாம் … ம்ஹும் ! கதை விடுவதெல்லாம்  ரொம்ப ஓவர் . 
முக்கிய சமூக பிரச்னைகளை எடுத்துக் கொண்டு திரைக்கதை அமைக்கும்போது , நிகழ்வுகளும் நம்பும்படி இருந்தால்தான்  ரசிகன் அதோடு இணைந்து பயணிப்பான் . 
பகிரி …வலுவற்ற செய்தி எனினும் சொல்ல வரும் கருத்துக்களால்  பகிரலாம் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *