பட்டையைக் கிளப்புமாம் ‘பட்ற’

DSC_0112
ஜிகே சினிமாஸ் சார்பில் வி.காந்திகுமார் தயாரிக்க, மிதுன் தேவ், வைதேகி , சாம் பால், புலிப்பாண்டி, ஆகியோர் நடிப்பில் பாக்யராஜ், பாண்டியராஜன் சுந்தர் சி ஆகியோரிடம் பணியாற்றிய ஜெயந்தன் இயக்கும் படம் பட்ற (பட்டறை என்பதன் பேச்சு வழக்குச் சொல் )பட்டறை என்பது ஆயுதங்கள் உருவாகும் இடம் .  உருவாகிப் போகும் இடம் நல்ல இடமாக இருந்தால் அந்த ஆயுதங்கள் நல்ல பயன்பாட்டுக்கு போகிறது. இல்லை எனில் அழிவு சக்தியாகப் போகும் என்பதை சொல்ல வரும் படமாம் இது .

“பதினைந்து வயது முதல் இருபத்தி மூன்று வயது வரை உள்ள  இளைஞர் சமூகம் பயம் அறியாதது. பக்குவமும் பெறாதது . அந்த வயசில் உள்ளவர்கள் என்ன செய்ய நினைத்தாலும் செய்வார்கள். என்ன செய்யச் சொன்னாலும் செய்வார்கள்.. அவர்களை செலுத்துகிறவர்கள் நல்லவர்களாக இருந்து நல்ல விசயங்களை செய்ய வைத்தால் அவர்கள் நல்லவர்களாக மாறுவார்கள் . செலுத்துபவர்கள் தீயவர்களாக இருந்து தவறான செயல்களை செய்ய வைத்தால் அந்த இளைஞர்கள் சமூக விரோதிகளாகப் போவார்கள்  என்பதை இந்தப் படத்தில் அழுத்தமாக சொல்கிறேன் “என்று கூறும் இயக்குனர் ஜெயந்தன் ,

DSC_0135

தொடர்ந்து “இந்த பின்னணியில் இரண்டு பெரிய குழுக்களுக்கு இடையே நடக்கும் சண்டையில் தேவையில்லாமல் சிக்கிக்கொள்ளும் ஒரு இளைஞன், அவனது காதலி, சில நண்பர்கள் இவர்களுக்கு நிகழும் சம்பவங்களே இந்த ‘பட்ற’ படம் ” என்கிறார்.

படத்தின் தயாரிப்பாளர் காந்திகுமாரும் இயக்குனர் ஜெயந்தனும் சிறு வயது நண்பர்களாம். ” ‘நான் டைரக்டர் ஆவேன்’னு சின்ன வயசுல ஜெயந்தன் சொல்லும்போது , உடனே நான் ‘அப்போ நான்தான் உன்னோட புரடியூசர்’னு  சொல்லுவேன் . அப்போ பஞ்ச்சர் ஆனா சைக்கிளை ஓட்டக் கூட என் கிட்ட காசு இருக்காது . பணம் வந்தது . எங்க நட்பு போகல. அதனால நான் சொன்னபடியே தயாரிப்பாளர் ஆகிட்டேன் ” என்று சிரிக்கிறார் தயாரிப்பாளர் காந்தி குமார்.
DSC_01401
படத்தின் ஹீரோ மிதுன் தேவ் அடிப்படையில் ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினியர் . நடிப்பாசை காரணமாக தனது புகைப்படத்தை சினிமா முகவரி டைரக்டரியில் கொடுத்து இருக்க, அதைப் பார்த்து அவரை நாயகனாக தேர்ந்தெடுத்து இருக்கிறார் இயக்குனர் . ஆனால் ஷூட்டிங் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் இவரது தாத்தா பாட்டி இறந்து  அப்பா அம்மா படுகாயம் அடைந்து கோமா நிலைக்கு போய்.. இப்படி குடும்பமே சீர்குலைந்து போனது . “படத்துக்கு சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்று இயக்குனர் கூற அப்படியே வைத்து இருந்தேன் . இந்த நிலையில் என் குடும்பம் இப்படி ஒட்டுமொத்தமாக சிதைய எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்களை மருத்துவமனையில் பார்த்துக் கொண்டே மருத்துவமனையிலேயே உடல் பயிற்சியை தொடர்ந்து சமாளித்தேன். அந்த சமயத்தில் எனக்காக படப்பிடிப்பை இயக்குனரும் தயாரிப்பாளரும் இரண்டு மாதம் தள்ளி வைத்தார்கள் . எனக்காக காத்திருந்தார்கள். இந்த நன்றியை மறக்கவே மாட்டேன் ” என்று கூறி,  சூழலைக் கனமக்குகிறார்  மிதுன் தேவ்.

“அந்த சூழ்நிலையிலும் மிதுன் தேவ் நடிப்பில் காட்டிய ஆர்வமும் கஷ்டங்களை எல்லாம் மனதில் புதைத்துக் கொண்டு நடித்துக் கொடுத்த விதமும் அற்புதமானது. நிச்சயமாக இவர் பெரிய ஹீரோவாக வருவார் ” என்கிறார் இயக்குனர் ஜெயந்தன் .

ஓங்குதாங்காக இருக்கிறார் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் Dr S.R.S.பால் M.E., Phd, B.L..

DSC_0302

ஆமாங்க , எஞ்சினியர் வக்கீலான இந்த ஆசிரியர் சென்னை , பாண்டிச்சேரி ,திருச்சி, ஆகிய ஊர்களில் பள்ளி, கல்லூரி, ஹோட்டல் , அழகு நிலையம் என்று பல்தொழில் நடத்தும் தொழிலதிபர்.

“முதல்ல இவரோட கல்லூரியில் இடம் கேட்டுத்தான் போனோம் . பார்த்தா வில்லன் கேரக்டருக்கு பொருத்தமா இருந்தாரு. நடிக்கக் கேட்டோம் . அவர் விரும்பல . சின்ன கேரக்டர்தான்னு சொல்லி இழுத்து உள்ள போட்டு மெயின் வில்லனா நடிக்க வச்சுட்டோம் ” என்று Dr S.R.S.பால் பற்றி இயக்குனர் ஜெயந்தன் கூற , ” நான் பொருத்தமா இருப்பேன்னு அவர்கள் அந்த அளவுக்கு நம்பிக்கையாக கூறும்போது, ஏன் நடிக்கக் கூடாதுன்னு ஒரு நிலையில தோணுச்சு.  நடிச்சேன் . நல்லா வந்திருக்குன்னு எல்லாரும் சொல்லும்போது சந்தோஷமா இருக்கு” என்கிறார் Dr S.R.S.பால்

DSC_0043

படத்தின் கதாநாயகி வைதேகி சில மலையாளப் படங்களிலும் சில தமிழப் படங்களிலும் நடித்து வருபவர் .

“படத்தின் ஐந்து பாடல்களுக்கான சூழலும் வெரைட்டியாக இருந்தது . அது இசையமைக்கும்போது மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது” என்கிறார் இசையமைப்பாளர் ஸ்ரீ கிருஷ்ணா .

DSC_0187

படத்தொகுப்பாளர் மணியை வெகுவாக புகழ்கிறார் இயக்குனர் ஜெயந்தன். ” மிக சிறப்பான எடிட்டர் அவர். நான் எடுத்ததைக் கொண்டு போய் அப்படியே அவரது டேபிளில் வைப்பேன் . அவரே அழகாக எடிட் பண்ணுவார் . அதன் பிறகு நாம் போய்ப் பார்த்தால் நாம் என்ன நினைத்து எடுத்தோமோ அது அப்படியே இருக்கும் ” என்பது அவரது பாராட்டு .

பதிலுக்கு மணி என்ன சொல்கிறார் ? “நான் கதையே கேட்காமதான் எடிட் பண்ண உக்காருவேன் . அப்படி உட்காரும்போதே நமக்கு தெளிவா புரிஞ்சா , அது நல்லா வரும்னு அர்த்தம் . இந்தப் படம் அப்படி தெளிவா இருந்தது ” என்கிறார் மணி .

DSC_0223

சென்னையிலும் பாண்டியிலும் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள் . கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி மிகப்பிரம்மாதமாக வந்திருக்கிறதாம். படத்தில் கூத்துப் பட்டறையில் இருந்து பல நடிகர்களை நடிக்க வைத்து இருக்கிறார்கள் . (இந்த பட்றக்கி அந்த பட்ற!

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →