பேய்கள் ஜாக்கிரதை @ விமர்சனம்

Peigal Jagirathai Movie Stills (5)

ஸ்ரீ சாய் சர்வேஷ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் ஜி.ராகவன் தயாரிக்க, ஜீவரத்னம் , ஈஷான்யா, தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி கண்மணி இயக்கி இருக்கும் படம் பேய்கள் ஜாக்கிரதை .

மிகப் பெரிய தாதா (தம்பி ராமையா) ஒருவருக்கு பேய் என்றால் மட்டும் ரொம்ப பயம் . இதனால் அவரது மனைவியும் குழந்தையுமே அவரை விட்டுப் பிரிந்து வாழ்கிறார்கள் . 
மற்ற அடிதடி விசயங்களுக்கு ஆயிரம் பேர் இருந்தாலும் பேய் பயத்தில் இருந்து தன்னை மீட்க ஒரு நபரை தாதா தேடுகிறார். பலமுறை தற்கொலைக்கு முயன்றவனும் உயிர் பயம் இல்லாதவனுமான இளைஞன் (ஜீவரத்னம்) அவரைப் பார்த்துக்கொள்ள  வருகிறான் . 
Peigal Jagirathai Movie Stills (9)
தாதாவால் பாதிக்கப்படும் ஒருவரின் (மனோபாலா) மகளுக்கு (ஈஷான்யா) உதவி செய்த வகையில் அவளது காதலையும் பெறுகிறான் . 
ரொம்ப முயன்று  தாதாவின்  பேய் பயத்தை அவன் நீக்குகிறான் . தாதாவின் மனைவியும் மகனும் வீடு வருகின்றனர். 
 
அதே நேரம் காதலியின் தந்தை கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ளாததால், நாயகன் தற்கொலைக்கு முயல,  அவனை சில பேய்கள் காப்பாற்றுகின்றன . அதோடு அவனுக்குள் புகுந்தும்  கொள்கின்றன . (அதற்கான காரணம் நாம் முன்பே மற்ற படங்களின் மூலம் அறிந்த ஒன்றுதான் ).
Peigal Jagirathai Movie Stills (6)
அடுத்து  நடக்கும் குளறுபடிகளால் தாதாவின் மனைவி மீண்டும் பிரிகிறார் . 
தந்தையை சமாதானப் படுத்த முயன்று கொண்டிருந்த காதலியும் மனம் உடைகிறாள்  . 
அந்தப் பேய்கள் யார் ? என்ன? எதற்கு இவன் உடம்பில் புகுந்தன ? என்பதே இந்த பேய்கள் ஜாக்கிரதை . 
படத்தின் ஆரம்பக் காட்சிகளை தனது காமெடியால் சற்றே கலகலப்பாக்கி இருக்கிறார் தம்பி ராமையா . பெரும்பகுதி படத்தை ஒற்றை ஆளாக இழுக்கிறார் . வசனங்கள் அதற்கு உதவுகின்றன. 
Peigal Jagirathai Movie Stills (14)
நாலு பேய்களும் உடம்புக்குள் புகுந்த நிலையில் நான்கு பேர் போல நடிக்க முயலும் முயற்சியில் ஜீவரத்னம் கவனிக்க வைக்கிறார் .  ஈஷன்யா ஒகே யா!
சவுண்ட் எபெக்ட் காரணமாக பேய்கள் மிரட்டவும் செய்கின்றன 
ஆனாலும்  சில பல காட்சிகள் வறட்சியாகவும் நாடகத்தனமாகவுமே கடக்கின்றன. 
”செத்தவங்கள நாம மறந்துடறோம் . ஆனா செத்தவங்க நம்மளை மறப்பதே இல்லை” என்ற வசனமும் அந்த சிந்தனையும் மனம் கனக்க வைக்கிறது .சூப்பர்  
Peigal Jagirathai Movie Stills (18)
சந்தேகப்படும் கணவன் ஒருவன் தன் மனைவியிடம்  “எவனையாவது வச்சிருக்கியா டி ?” என்ற கேட்க,  ”ஆமாம்” என்று அந்த மனைவி சொல்ல , அதற்கான அர்த்தம் புரிய வரும்போது நெகிழ்வில் சிலிர்த்துப் போகிறோம். படத்தின் கிளாஸ் ஏரியா இது . சபாஷ் கண்மணி !
பேய்கள் யார் என்பதை உணரும் நாயகன் அவர்களை சந்திக்கும் இடமும் சிறப்பாக படமாக்கப்பட்டு உள்ளது . 
பிரச்னைக்குக் காரணமான பேய்கள் கடைசிவரை செட் புராபர்ட்ட்டி  போல நிற்காமல் பொறுப்பு எடுத்து எதையாவது செய்து பிரச்னையை தீர்க்க வித்தியாசமாக முயன்று இருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்து இருக்கும் . 
Peigal Jagirathai Movie Stills (10)
பேய்கள் ஜாக்கிரதை … இருந்திருக்க வேண்டும் இன்னும் ஜாக்கிரதை . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →