இவை தவிர தெலுங்கில் நீக்கு நேனு நாக்கு நுவ்வு , மலையாளத்தில் வேட்டம், துரோணா….
இந்தியில் டீ டோனா டான், சிலா காஸியாபாத், ஷார்ட் கட் ரோமியோ , போலீஸ் கிரி , வெளிவர இருக்கும் பாய் வெல்கம் டு இந்தியா ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் .
தமிழில் தமிழன் , இயற்கை ஆகிய படங்களை தொடர்ந்து கள்வனின் காதலி , ஈ, பொறி, கந்தசாமி , சுறா , காவலன், காவல் ஆகிய படங்களுக்கும் அதைத் தொடர்ந்து இப்போது புறம்போக்கு படத்துக்கும் ஒளிப்பதிவு செய்து இருப்பவர்.
கந்தசாமி படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்ட காலத்தில் இருந்து தாமதமாக துவங்கி தள்ளிப் போனதால், ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஏகாம்பரத்தல் பணி புரிய முடியவில்லை . எனினும் அந்தப் படத்தை தன் உதவியாளர் சதீஷுக்கு வாங்கிக் கொடுத்து அவரை ஒளிப்பதிவாளராக உயர்த்திய நல்ல மனிதர் ஏகாம்பரம். .
புறம்போக்கு படம் வெளிவருவதற்கு முன்பே ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவைப் பாராட்டிப் பேசிய ஜன நாதன் “. கார்த்திகா ஒரு ஆக்ஷன் காட்சியில் உயிரை பணயம் வைத்து நடித்தார் . அதை ஒரே கேமராவை பயன்படுத்தி ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் மிக சிறப்பாக படம் பிடித்தார். நான் கூட இன்னும் இரண்டு கேமரா வேண்டும் என்றால் வைத்துக் கொள்ளலாம் என்றேம். மறுபடியும் நடிக்க கார்த்திகா துணிவாரா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிற ஆக்ஷன் காட்சி . ஒருவேளை கேமரா அதை கேட்ச் செய்யாவிட்டால் போச்சே என்ற பயம் எனக்கு .ஆனால் ஒரே கேமராவை பயன்படுத்தி அதை பிரம்மாதமாக படம் பிடித்தார் ஏகாம்பரம் . அவர் இந்தப் படத்துக்கு மிக சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார் ” என்று பாராட்டி இருந்தார் . அது உண்மை என்று நிரூபித்திருக்கிறது புறம்போக்கு படம் . ஏகாம்பரத்தில் ஒளிப்பதிவுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் .
அந்த சந்தோஷத்தில் படம் பற்றிய தனது அனுபவங்களை உற்சாகமாகப் பகிர்ந்து கொள்கிறார் ஏகாம்பரம் .
“எதையும் திட்டமிட்டு செய்வது ஜன நாதனின் வழக்கம். லொக்கேஷனை முன்னரே முடிவு செய்து சென்று பார்த்து அங்கே கிடைக்கும் விசயங்களை பயன்படுத்தி காட்சி அமைப்பார் . குலு மனாலி பனிமலையில் உருளும் பந்துக்குள் ஆர்யாவும் கார்த்திக்கும் பாய்ந்து உருளும் காட்சியை அப்படிதான் திட்டமிட்டார் . அது சிறப்பாக வந்துள்ளது .
படத்துக்காக ரெண்டு கோடி ரூபாய் செலவில் ஜெயில் செட் போட்டார் இயக்குனர் தயாரிப்பாளர் ஜனநாதன். செட் போட்ட போது கைதிகளின் வெள்ளை உடைக்கு ஏற்ப ஜெயிலின் சுவர்களை சாம்பல் நிறத்தில் அமைத்தோம். எனினும் ஒரு மாற்றத்துக்காக ஜெயிலர் ஷாம் இருக்கும் அறையின் சுவர்களை மட்டும் வண்ணம் மாற்றினோம்.
ஆரம்பத்தில் அந்த ஜெயில் சுரங்கப் பாதை காட்சி எல்லாம் இல்லை . பின்னர் திரைக்கதை வளர்ந்தபோது அதற்கு ஒரு ஐம்பது லட்ச ரூபாய் வரை ஆனது . தயங்காமல் செலவு செய்தார் ஜனநாதன் .
படம் பிடிக்கும்போதே ஷாம் அந்தக் கேரக்டரை அற்புதமாக செய்வதை உணர முடிந்தது. விஜய சேதுபதியும் நன்றாக நடித்தார். ஆர்யா கார்த்திகாவும் அப்படியே .
அந்த வகையில் நயன்தாரா பெஸ்ட். ஈ படத்தில் சேரிப் பெண் கேரக்டரை சொன்னபோது சரியாக புரிந்து கொண்டு மேக்கப்பே இல்லாமல் நடித்தார் .
அறிமுகமான முதல் படமே விஜய் சார் படமான தமிழன் . பிறகு அவர் விருப்பத்துக்கிணங்க சுறா படத்திலும் அவருடன் பணியாற்றினேன் . அவரே காவலன் படமும் கொடுத்தார் .
டைரக்ஷன் செய்வீர்களா என்று பலரும் கேட்கிறார்கள் . தெரியவில்லை . ஒளிப்பதிவு என்றால் ஷூட்டிங் முடிந்த உடன் அடுத்த படத்துக்கு போய் விடலாம் . ஆனால் டைரக்ஷன் என்றால் அதன் பிறகும் கடுமையாக உழைத்து படத்தை செதுக்க வேண்டி இருக்கும் .
அதுபோல எனது தோற்றத்தை பார்த்து நடிக்க விருப்பமா என்றும் கேட்கிறார்கள். அதெல்லாம் யோசிக்கவே இல்லை
ஜனநாதன் படத்தில் சம்பளம் குறைவாகத்தான் இருக்கும் . உதாரணமாக இந்த புறம்போக்கு படத்திலேயே ஒன்றரை வருடம் இருந்தோம். ஆனால் அவர் படத்தில் பணியாற்றினால் நம்மை அடுத்தடுத்த உயரங்களுக்கு கொண்டு போய் விடுவார் . புறம்போக்கு படத்திலும் அதுவே நடந்துள்ளது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ” என்கிறார் ஏகாம்பரம்
இன்னும் உயரங்களை தொட வாழ்த்துகள் ஏகாம்பரம் சார் .