இயக்குனரும் நடிகருமான ராஜேஷ் கண்ணனின் ஃபாக்ஸ் அண்ட் க்ரோ நிறுவனம் மலேசியாவைச் சேர்ந்த டத்தோ புருஷோத்தம ராகவன் மற்றும் ராஜா ராகவன் ஆகியோருக்கு சொந்தமான லார்ட் நிறுவனத்துடன் இணைந்து ஒரே நேரத்தில் ஏழு படங்களை தயாரிக்கிறது . ஜனவரி மழையில், லந்து, கடவுள் இருக்கான் குமாரு, கொள்ளக் கூட்ட பாஸ், வட்டச் செயலாளர் வண்டு முருகன், நீ புடுங்கற ஆணி எல்லாம் தேவை இல்லாத ஆணிதான், கோக் .. என்று ஏழு படங்கள்.
இதில் ராஜேஷ் கண்ணனே இரண்டு படங்களை இயக்குகிறார். ஒரு படத்தில் நடிக்கிறார். ஜனவரி மழையில், லந்து ஆகிய முதல் இரண்டு படங்கள் தயாராகி விட்டன. மூன்றாவது படமான கடவுள் இருக்கான் குமாரு படப்பிடிப்பில் இருக்கிறது.
ஜனவரி மழையில் நட்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்க,
லந்துவின் டிரைலர் செம செம ….
அந்த டிரைலரில் ”லந்துன்னா என்னண்ணனே” என்று ஒருவன் கேட்க , இப்படி தொடர்கிறது உரையாடல்.
“உனக்கு புடிக்காதவன் ஒருத்தன் பேரை சொல்லு .”“ராஜபக்சே “அடுத்து ஒரு வார்த்தை சொல்லி தொடர்ந்து “……. அவன். கைல கெடச்சா வெட்டணும்டா அவன “ என்கிறான் முதலாமவன்
அஜித்தின் அன்புக்கு பாத்திரமானவர் இந்த ராஜேஷ் கண்ணன் . படம் எடுக்கப் போவதாக ராஜேஷ் கண்ணன் முதன் முதலில் சொன்னது அஜித் மற்றும் ஷாலினியிடம்தான். அவர்களின் வாழ்த்துகளோடு இறங்கி இருக்கிறார் ராஜேஷ் கண்ணன். மேற்படி ஏழு படங்களுக்கான அறிமுக விழாவில் ராஜேஷ் கண்ணனின் நண்பரான ஸ்டுடியோ 9 சுரேஷ், இணை தயாரிப்பாளர் சிங்கப்பூர் கார்த்திகேயன், மற்றும் துணைத் தயாரிப்பாளர்களான மலேசியாவைச் சேர்ந்த நளினி முத்தையா, தனபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுரேஷ் பேசும்போது ” இந்த ஏழு படங்களின் பேரை வரிசையா சொல்ல சொன்னால் கூட கஷ்டம்தான் . படம் எடுக்கறது எவ்ளோ பெரிய கஷ்டம்னு யோசிச்சு பாருங்க . ஆனாலும் ஏழு படங்களை ஒரே நேரத்தில் பண்றாங்க . என் நண்பன் ராஜேஷ் கண்ணனுக்கு என்னால் முடிந்த ஆதரவை எப்போதும் தருவேன் ” என்றார் . விளக்கவுரையாகப் பேசிய ராஜேஷ் கண்ணன் “இந்த ஏழு படங்களில் முதல் மூன்று படங்களில் எல்லோரும் புதுமுகங்கள். அடுத்த நான்கு படங்கள் பெரிய நடிகர்களின் பங்களிப்போடும் தயாராகும். எதனால ஒரே நேரத்தில் ஏழு படம்னு எல்லாரும் கேட்டாங்க . எவ்வளவோ திறமைகள் இங்கே கொட்டிக் கிடக்குது . நிறைய பேருக்கு வாய்ப்பு தரணும். அதோடு தொடர்ந்து எங்கள் படங்கள் வரணும்.
அதிக பட்சம் மாசத்துக்கு ஒரு முறை எங்க படம் வெளியாகும் . எப்படியும் வருடத்துக்கு பத்து படம் தயாரிக்கணும். அதுக்கான வார்ம் அப் மாதிரிதான்தான் இந்த ஏழு படங்களையும் தயாரிக்கிறோம் ” என்றார் .
லந்து டிரைலர் ஒண்ணே போதும் .. இவரு சொல்றத செய்யிற ஆள் என்பதற்கு !
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462