மனைவி ஊரில் இருந்து ஒரு ஹீரோயின்

IMG_8121தீபக் குமார் நாயர் தயாரிப்பில் மிர்ச்சி செந்தில் , ஸ்ருதிபாலா , ஜான் விஜய் ஆகியோர் நடிக்க , ஏ. வெங்கடேஷ் இயக்கி இருக்கும் படம் ரொம்ப நல்லவன்டா நீ

படத்தில் சர்வஜித், கடலோரக் கவிதைகள் ரேகா, ரோபோ ஷங்கர், இமான் அண்ணாச்சி இவர்களுடன் இயக்குனர் வெங்கடேஷும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் .

அதை விட முக்கிய விஷயம் .. நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் கலக்கி இருக்கிறார் ப்ப்ப்ப் ரர்ர்ர்ர்… ப்ப்ப்ப்பா… வெண்ணிற ஆடை மூர்த்தி .

IMG_8112

படுபயங்கர வில்லியாக ஒரு கேரக்டரில்,  தலை முடியை ஊதித்தள்ளி டெர்ரர் காட்டுகிறார் சோனா ஹெய்டன் . (சாதரணமாவே அப்படிதானே சோனா)

“உங்கள் பிரச்னைகளை தயவு செய்து யாரிடமும் வெளியே சொல்லாதீர்கள். அதனால் தீர்வு என்று ஒன்று கிடைக்கவே கிடைக்காது . சிக்கல்தான் அதிகமாகும் என்பதையே காமெடி , காதல் , ஆக்ஷன் எல்லாம் கலந்து சொல்லி இருக்கிறேன் ” என்கிறார் இயக்குனர் ஏ. வெங்கடேஷ் .

படத்தின் ஒளிப்பதிவாளர் மனோ நாராயணன் வெண்ணிற இரவுகள் என்ற மலேசியத் தமிழ்ப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியதற்காக மலேசிய நாட்டின் தேசிய விருது பெற்றவர்,

IMG_8133

சரவணன் மீனாட்சி தொடரில் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக நடித்து உண்மையிலும் ஜோடியான அவர் மனைவி பிறந்த அதே திருவில்லா என்ற ஊரில் பிறந்தவராம் இந்தப் படத்தின் கதாநாயகி சுருதி பாலா . படம் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்தத் தகவலை சந்தோஷமாக சொன்னார் செந்தில் .

அது மட்டுமல்ல ” வெண்ணிற ஆடை மூர்த்தி சாரோடு  நடித்தது மறக்க முடியாத அனுபவம் . ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் பேசிய பேச்சை எல்லாம் கேட்டால் .. அப்பப்பா ! படத்தில் அவர் பேசியது எல்லாம் ஒன்றுமே இல்லை ” என்றார் செந்தில் ( திருவில்லா தகவலுக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தி தகவலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லாமல் இருக்கக் கடவது !)

IMG_8108

செந்தில் உட்பட நிகழ்ச்சியில் பேசிய எல்லோருமே ” இருக்கிற வசதியை வைத்துக் கொண்டு மனம் கோணாமல் விரைவாக சிறப்பாக படம் பிடிக்கக் கூடிய திறமை வாய்ந்தவர் இயக்குனர் வெங்கடேஷ் . அது பற்றி அவர் ஒரு பள்ளிக்கூடமே நடத்தலாம் ” என்று பாராட்டினார்கள்.

இல்லாவிட்டால் சண்டமாருதம் வெளியான  எட்டே  நாளில் அடுத்த படத்தை முடித்து விட்டேன் ” என்று சொல்ல முடியுமா ?

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →