உலகம் சுற்றும் வாலிபனில் ‘சகலகலா வல்லவன் ‘

IMG_0497
லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் சார்பில் கே.முரளிதரன், வி.சுவாமிநாதன், டி.எஸ்.ரங்கராஜன், எம் .கோகுல கிருஷ்ணன் ஆகியோர் தயாரிக்க, ஜெயம் ரவி, திரிஷா, அஞ்சலி, சூரி நடிப்பில் சுராஜ் இயக்கி இருக்கும் (அப்பா டக்கர் என்கிற ) ‘சகலகலா வல்லவன்’  படம் வரும் ஜூலை 31ஆம் தேதி திரைக்கு வருகிறது . சில வருடங்களாக படத் தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்த லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்,  ஓர்  இடைவேளைக்குப் பிறகு எடுத்திருக்கும் படம் இது .

தாஸ் படத்துக்குப் பிறகு மீண்டும் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு ஜெயம் ரவி நடிக்கும் இரண்டாவது  படம்.

எம்.குமரன் s/o மகாலட்சுமி படத்துக்கு பிறகு ஜெயம் ரவியும் விவேக்கும் நடிக்கும் படம் .

காமெடி,  கவர்ச்சி,  கலகலப்பு என்று படம் கலர்ஃபுல்லாக வந்திருக்கும் உற்சாகத்தோடு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது படக் குழு .

படத்தின் இரண்டு முன்னோட்டங்களையும் பாடல்களையும் போட்டுக் காட்டினார்கள்.

தயாரிப்பாளர்கள்
தயாரிப்பாளர்கள்

திரிஷா , அஞ்சலி இருவரோடும் மாறி மாறி ஆடுகிறார் ஜெயம் ரவி. அதிரடியாய் சண்டை போடுகிறார் . சூரி வழக்கம்போல நட்பு , பீர் என்று காமெடி பண்ணுகிறார் சூரி . அஞ்சலி கெட்ட ஆட்டம் போடுகிறார். திரிஷாவும் இவற்றோடு அடிஷனலாக சவுண்டு கொடுக்கிறார். பிரபு சீறுகிறார். விவேக் ஒரு ஷாட்டில் தோன்றுகிறார்.

உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் பச்சைக் கிளி முத்துச் சரம் பாடல் வரும் திரைக்கதைப் பகுதி படமாக்கப்பட்ட தாய்லாந்து மிதக்கும் மார்க்கெட்டில் (FLOATING MARKET )இந்தப் படத்துக்கான  ஒரு பாடலைப் படம் பிடித்து இருக்கிறார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் முரளிதரன் “என் மகன் கோகுல கிருஷ்ணன் சினிமா தயாரிக்க விரும்பியதால் மறுபடியும் படம் எடுக்க வந்தேன் . அவர்தான் படத்தை தயாரிக்கிறார் . நான் பணம் கொடுத்தேன் . என் அனுபவத்தையும் கொடுத்தேன். அவ்வளவுதான்.

IMG_0434

படத்துக்கு முதலில் அப்பா டக்கர் என்று பெயர் வைத்தோம் . அதற்கு அனைத்தும் அறிந்தவன் என்று பொருள் சொன்னார்கள். ஆனால் அது தமிழ் இல்லை என்று தமிழ் வளர்ச்சித் துறை சொல்லி விட்டது . எனவே அனைத்தும் அறிந்தவன் என்ற வார்த்தைக்கு பொருத்தமான பெயரைத் தேடியபோது சகலகலா வல்லவன் என்ற பெயர் ஞாபகம் வந்தது . உடனே கமல் நடித்த சகலகலாவல்லவன் படத்தின்  தயாரிப்பாளரான ஏ வி எம்  சரவணன் அவர்களிடம் கேட்டேன் . இந்த டைட்டிலை பல பேர் கேட்டும் அவர் யாருக்கும் தரவில்லை. ஆனால்  நான் கேட்டதும் சம்மதம் சொன்னார்.

அதோடு வெளிநாட்டில் இருந்த அவரது சகோதரர் பால சுப்பிரமணித்திடமும் பேசி அனுமதி வாங்கித் தந்தார் . வெளிநாட்டில் இருந்து பால சுப்பிரமணியம் எனக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார். இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ” என்றார் .IMG_0451

“இப்போது படம் தயாரிப்பதில் ஆயிரம் பிரச்னைகள் இருக்கு என்று சொல்கிறார்கள் . ஆனா இப்போதும் சரியான கதையை தேர்ந்தெடுத்து நல்ல முறையில் படமாக்கினால் ஜெயிக்க முடியும் . இதுதான் உண்மை ” என்றார் கோகுல கிருஷ்ணன் .படத்தில் சண்டை இயக்குனர் தினேஷ் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்க, அவரது மகன் ஹரி சண்டைப் பயிற்சி செய்து இருக்கிறார் . இவர் முன்பே வேலை இல்லாப் பட்டதாரி படத்தில் சண்டை இயக்குனராக பணியாற்றியவர்.

“இந்தப் படத்தில் நடித்து நல்ல அனுபவம் . நல்ல கேரக்டர் . ” என்றார் அஞ்சலி .

திரிஷா பேசும்போது ” அடாவடியான ஒரு கேரக்டரில் காமெடியும் கலந்து தெலுங்கில் ஒரு படம் செய்து இருக்கிறேன். தமிழில் இதுவரை அது போல படம் செய்யவில்லையே என்ற குறையை இந்தப் படம் போக்கும் ” என்றார் .

IMG_0487

வருண் மணியனுடனான கல்யாண அறிவிப்பு மற்றும் ரத்து பற்றி சில பத்திரிக்கையாளர்கள் திரிஷாவிடம் பேசியபோது ” அது நடந்து முடிந்து போன விஷயம். நான் அது பற்றிப் பேச விரும்பவில்லை” என்றார் . எப்போது கல்யாணம் என்று கேள்விக்கு  ” கல்யாணம் செய்து கொள்ளாமலே நிறைய பேர் வாழ்கிறார்கள் ” என்றார் திரிஷா .

படத்தின் இயக்குனர் சுராஜ் பேசும்போது ” இது முழுக்க முழுக்க காமெடி படம் . எனக்கு காமெடிதான் வரும். திரிஷா , அஞ்சலி இரண்டு பேரையும் காதலிக்கிற ஒரு கேரக்டரில் சூரி நடித்து இருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு சூரி இன்னும் பெரிய உயரத்துக்கு போவார் . விவேக் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார். இதுவரை அவரை பார்க்காத ஒரு வித்தியாசமான புது தோற்றத்தில் மொட்டை அடித்துக் கொண்டு அவர் நடித்திருக்கிறார். ஜெயம் ரவி, திரிஷா, அஞ்சலி ஆகியோர் மிக சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்” என்றார் .

IMG_0543

ஜெயம் ரவி தனது பேச்சில் ” திரிஷா இந்தப் படத்தில் ரொம்ப ஜாலியான நல்ல பெண்ணாக நடித்து இருக்கிறார். திரிஷாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்களுக்கு இது மூணாவது படம். திரிஷாவோட  சிந்தனை, பிரச்னைகளை சமாளிக்கும் விதம் , தெளிவு எல்லாம் மிக சிறப்பானது.

அப்பாவி கிராமத்துப் பெண்ணா அஞ்சலி  சிறப்பா நடிச்சு இருக்கார். சுராஜ் சார் சொன்ன மாதிரி இந்தப் படம் சூரிக்கான படம் . படத்தில் 50 சதவீதம் அவர்தான் . மீதி 50 சதவீதம்தான் நான் திரிஷா அஞ்சலி எல்லாம் .

படத்துல நான் ஒரு பாட்டுப் பாடி இருக்கேன் . அது எல்லோருக்கும் பிடித்த மாதிரி இருக்கறதுல சந்தோசம். காமெடி அவ்வளவு சிறப்பா வந்திருக்கு.

ஆனா அதையும் மீறி இன்னொரு விஷயம் இருக்கு. புருஷன் பொண்டாட்டி சேர்ந்து வாழ்ந்தாலே,  அவங்கள கூட்டுக் குடும்பம்னு சொல்ல ஆரம்பிச்சுடுவாங்களோ என்ற பயம் வர ஆரம்பிச்சு இருக்கற இந்தக் காலத்தில்,  உறவுகளின் அருமையை சொல்ற படமா இது இருக்கும் ” என்றார் .

எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது இந்த சகலகலா வல்லவன் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →