கோலிசோடா படத்தின் வெற்றியை அடுத்து விஜய் மில்டன் இயக்க, விக்ரம் – சமந்தா இருவரும் நடிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள…’ படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் விக்ரமும் சமந்தாவும் கலந்து கொண்டு டீசரை வெளியிட்டார்கள்.
தான் வெளியே சொல்ல விரும்பாத ஒரு படத்துக்காக வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம். இன்னும் கொஞ்சம் இளைத்த சமந்தா .
சென்னையில் இருந்து வட இந்தியாவுக்கு செல்லும் பயணமே இந்தப் படத்தின் கதை . டீசர் கமர்ஷியலாக அதிரடியாக, பத்து முதல் ஒன்றுவரை கவுண்ட் டவுன் எண்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இருந்தது .
“இந்தியாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு பகுதி பற்றி கிளைமாக்சில் வரும் . அதை நேபாளத்தில் எடுத்தோம். அதனால் சமந்தா நேபாளியாக நடிக்கிறார் என்று செய்தி வந்து விட்டது . அது உண்மையில்லை . ” என்ற விஜய் மில்டன்….
தொடர்ந்து ” நான் விக்ரம் சாரிடம் இந்தப் படத்தில் ஹாய்யாக- ஓர் அழகிய இளைஞனாக தோன்றினால் போதும் என்றேன் . ஆனாலும் அவர் ரொம்ப மெனக்கெட்டு நடித்தார். அப்படியானால் ஐ போன்ற படங்களுக்கு எப்படி கஷ்டப்பட்டு இருப்பார் ? அதனால்தான் முன்பே ஒரு முறை அவர் ஒரு நடிப்பு டெர்ரரிஸ்ட் என்று சொன்னேன் ” என்றார் .
“படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் . ஆனால் அதில் மூன்றும் சோலோவாக சமந்தாவுக்குதான் ” என்றார் விக்ரம் .
சமந்தா என்ன சொன்னார் ?
” படத்தோட டைரக்டர் விஜய் மில்டன் ஒரு சாடிஸ்ட் . அவர் என்னை ரொம்ப கொடுமைப் படுத்தினார் . அடித்தார் . திட்டினார். எனக்கு அவரால் காயம் கூட ஏற்பட்டது . ஆரம்பத்துல அவர்தான் அப்படின்னா , அப்புறம் விக்ரமும் தன் பங்குக்கு தானும் ஒரு சாடிஸ்ட் ஆகவே நடந்துக்கிட்டார் ” என்றார் சிரிக்காமல் .
பரபரப்பு உண்டு பண்றாங்களாமாம்!