சத்திய சோதனை @ விமர்சனம்

சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பரத் ராம் தயாரிக்க, பிரேம்ஜி அமரன், சித்தன் மோகன்,செல்வமுருகன் , ஸ்வயம் சித்தா , ஞானசம்மந்தன் , லட்சுமிப் பாட்டி நடிப்பில் சுரேஷ் சங்கையா இயக்கி இருக்கும் படம். 

நடமாடும்  நகைக்கடை போல இருக்கும் ஒரு கிராமத்து நபர் நான்கு பேரால் வெட்டிக் கொல்லப்படுகிறார் . மறுநாள் அந்தப் பிணத்தைப் பார்க்கும் ஒரு வெள்ளந்தி நபர் (பிரேம்ஜி ) பிணத்தின் விலை உயர்ந்த வாட்ச் , செல்போன் , மற்றும்  தடிமனான சங்கிலி போன்ற நகைகளை யாரும் திருடி விடுவார்கள் என்று போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்க எடுத்துக் கொண்டு போகிறார் . 
தவிர பிணம்  வெயிலில் காய்வது பொறுக்காமல் கொஞ்ச தூரம் இழுத்து மாற நிழலில் விட்டு விட்டுப் போகிறார் . போகும் வழியில் ஒரு  வயசான பாட்டிக்கு தனது இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுக்கிறார்.  
 
ஸ்டேஷனில் பொருட்களை ஒப்படைக்கும்போது கொலையாளி அணிந்து இருந்த சுமார் அம்பது பவுன் நகைகள் காணாமல் போயிருப்பது தெரிகிறது . கொலை செய்யப்பட்ட இடம்  வேறொரு போலீஸ் ஸ்டேஷன் எல்லை , பிணத்தை நிழலில் இழுத்துப் போட்ட இடம் தான் இந்த ஸ்டேஷன் எல்லை என்ற நிலையில் இரண்டு ஸ்டேஷன்களும் இதில் சம்மந்தப்படுகிறது . 
 
கொலையாளிகள் அந்த ஸ்டேசனில் சரண்டர் ஆக, அவர்கள் கொலையாளிகளையும்  இங்கே கொண்டு  வந்து ஒப்படைக்கின்றனர் . நகை தொலைந்து விட்டதாக சொல்லி விட்டு , கொலை கேசை முடித்து விட்டு ,  அப்பாவி இளைஞனை அடித்து உதைத்து நகையை பிரித்துக் கொள்ள இரு ஸ்டேசன் காவலர்களும் திட்டமிட நடந்தது  என்ன என்பதே படம். 
கிராமத்து போலீஸ் ஸ்டேசன்கள், அங்கு பணியாற்றும் காவலர்கள் என்ன லட்சணத்தில்  கடமைக்கு வேலை செய்கிறார்கள்; அதே நேரம் பொய் சாட்சிகளையும் சம்பவங்களையும் எப்படி தங்களுக்கு சாதகமாக மாற்றுகிறார்கள்; கீழ் நீதிமன்றங்கள் எப்படி இயங்குகின்றன போன்றவற்றை யதார்த்தமாக   காட்டுகிறார் சுரேஷ் சங்கையா . 
 
அதில் ஆங்காங்  சில காமெடிகள் வருகின்றன . 
 
போலீசாராக சித்தன் மோகன்,  செல்வமுருகன், முத்துப்பாண்டி,  காதல் ஜோடியாக பிரேம்ஜி – ஸ்வயம் சித்தா , நீதிபதியாக ஞானசம்மந்தன் எல்லோரும் பேசிக் கொண்டே இருப்பதுதான் நடிப்பு என்று முடிவு செய்து விட்டார்கள்.  
 
எந்த இலக்கணத்திலும் அடங்காமல் இருக்கிறது பிரேம்ஜி அமரன் நடிப்பு .இந்தக் கதை மூலம் சொல்ல வரும் விசயம் என்ன ? அதற்கு பொருத்தமான முடீவு படத்தில் இருக்கிறதா?  சொல்ல வேண்டிய விஷயங்கள் அழுத்தமாக சொல்லப்பட்டு உள்ளனவா என்ற கவனம் இல்லாமல் எடுக்கப்பட்டு இருக்கும் படம். 
 
உள்ளே ஒரு நல்ல கதை இருந்தும் பலகீனமான திரைக்கதை காரணமாக சோதனையே மிஞ்சுகிறது 
 
 
,

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *