
புலிப் பார்வை படத்தை என்னிடம் காட்டினார்கள் . நான் அதில் பாலாவின் சீருடை விசயத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொன்னேன். சில வசனங்களையும் காட்சிகளையும் நீக்க சொன்னேன் . உடனே நீக்கி விடுவதாக சொல்லி விட்டார்கள். நீக்க முடியாது என்று சொல்லி இருந்தால் அந்தப் படம் வெளிவர நானே விட்டிருக்க மாட்டேன்.
ஆனால் அவர்கள் எடுத்த காட்சிகளால் வெளியிட்ட புகைப் படங்களால் சில தவறுகள் நடந்து விட்டது. உதாரணமாக ராணுவ சீருடையோடு பாலா இருக்கும்படியும் தலைவர் அந்தப் பிள்ளைக்கு ஆயுதப் பயிற்சி தருவது போலவும் எடுத்த காட்சிகளின் புகைப்படங்களை வைத்து சிங்களவன் இப்போதே “பார்த்தீர்களா ? பாலச் சந்திரனும் தீவிரவாதிதான் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டான் .
கத்தி படத்தை பொறுத்தவரை ஏ ஆர் முருகதாஸ் தமிழன். நடிக்கும் விஜய் தமிழன் . ஐங்கரன் கருணாஸ் தமிழன் . லைகா அதிபர் அல்லிராஜனும் தமிழன்.

அல்லி ராஜன் ஒன்று சாதரணமாக இந்த நிலைக்கு வந்து விடவில்லை. இலங்கையில் இருந்து கஷ்டப்பட்டு தூர தேசம் சென்று வீடு வீடாக கார்டு கொடுத்து உழைத்து முன்னேறியவர்.
அவர் ராஜபக்சேவுக்கு காசு கொடுக்கிறார் என்று சொல்லுங்கள் . நம்புவேன். ஆனால் ராஜபக்சே அவருக்கு காசு கொடுத்து தமிழ்ப் படம் எடுத்து கோடம்பாக்கத்தை ஆக்கிரமிக்கிறார் என்று பொய்யாக அட்டைப் படக் கட்டுரை எழுதாதீர்கள். அது அநியாயம்
கத்தி படத்தில் தமிழர்களுக்கு எதிராக ஏதாவது காட்சி இருந்தால் சொல்லுங்கள் . அந்தப் படத்தை தடுப்போம் . அதை விட்டுவிட்டு லைக்கா தயாரிப்பதால் எதிர்ப்போம் என்றால் .. அந்த மாதிரியே எல்லோரிடமும் நடந்து கொள்கிறோமா ?

மெட்ராஸ் கபே எடுத்தவன் தமிழன் அல்ல .. அவனை நம்மால் கேட்க முடியாது . அதனால் படத்தை தடுத்தோம் .
ஆனால் புலிப் பார்வை எடுக்கும் பாரி வேந்தர் , பிரவீன் காந்த், கத்தி படத்தை எடுக்கும் முருகதாஸ், விஜய் , லைக்கா அல்லிராஜன் எல்லாரும் நம்மவர்கள் . தமிழர்கள் . நம் சொந்தங்கள்.
நாம் கேள்வி கேட்டால் விளக்கம் தருவார்கள். தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள் என்றால் திருத்திக் கொள்வார்கள் சரியானதை சொன்னால் கேட்பார்கள் .
கத்தி பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு லைக்கா அல்லிராஜனே வருவார் . அப்போது அவரிடம் உங்கள் கேள்விகளை கேளுங்கள் . அவர் பதில் சொல்லுவார். பதில்கள் சரியாக இல்லை என்றால் அப்புறம் பேசிக் கொள்வோம்.
எல்லோரையும் பகைத்துக் கொண்டு அப்புறம் யாருடன் சேர்ந்து தமிழ் தேசியத்துக்காக போராடுவது ?
ஐம்பது வருடம் எம் ஜிஆரை தூக்கி வைத்துக் கொண்டு ஆடினோம் . அப்புறம் முப்பது வருடம் ரஜினிகாந்தை தூக்கி வைத்துக் கொண்டு ஆடினோம் . இப்போதுதான் அந்த இடத்துக்கு முதன் முதலாக ஒரு தமிழன் (விஜய்யை சொல்கிறார்) வந்து கொண்டு இருக்கிறார். அவரை உடைத்துப் போட்டுவிட்டு என்ன சாதிக்கப் போகிறோம் ?
நாம் தமிழர் இயக்கத்தை கட்டிக் காக்கிற எங்களுக்கு எந்த விசயத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும என்பது தெரியாதா ?
கடைசியாக ஒன்று .

புலிப் பார்வை படத்திலேயே நிறைய காட்சிகளில் பாலச் சந்திரனுக்கு ராணுவ சீருடை அணிவித்து எடுத்து விட்டார்கள் . இப்படி எடுத்து முடித்து விட்டு அப்புறம் வந்து போட்டுக் காட்டி சரி செய்து.. சிக்கல்களை உருவாக்கி இதெல்லாம் தேவை இல்லாத விஷயம்.
எனவே இனிமேல் படைப்பாளிகளில் தமிழ் இனம் மொழி, களப் போராட்டம் ஆகியவை பற்றி படம் எடுக்க விரும்புபவர்கள் முறையான ஆராய்ச்சி , அறிவு வழிகாட்டுதல்களோடு ஆலோசனைகளையும் பெற்று படம் எடுக்க வேண்டும் . இந்த சந்திப்பின் மூலம் நான் கேட்டுக் கொள்வது அதுதான் ” என்றார் .
நீங்க என்ன சொல்றீங்க ?