”நர்ஸ்களும் 420ம்” – கார்த்தியைக் ‘கவுத்த’ சூர்யா

still of suryakarthi
still of suryakarthi
கண்கள் சொல்லும் கதைகள்

சூர்யா அப்படிப் பேசுவார் என்று…. பேசுவதற்கு முன்பு சூர்யாவே கூட நினைத்துப் பார்த்திருப்பாரா என்று தெரியவில்லை . ஆனால் பேசிவிட்டார் !

அது விளையாட்டுக்கு சொன்னதா இல்லை வில்லங்கமாகவே சொன்னதா என்பதுதான் இப்போது கோடம்பாக்கத்து குசுகுசு பட்டிமன்றம் .

அஞ்சான் படத்துக்கான மொபைல் கேம்ஸ் வெளியீடு சமயத்தில் கார்த்திக்கு நடந்த ஒரு சம்பவம்தான் சூர்யாவின் அந்த  பேச்சுக்கு காரணம் .

வேறொரு படப்பிடிப்பில் இருந்த அவரது தம்பி கார்த்தி ஃ புட் பாய்சன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட விஷயம் சில பத்திரிக்கைகளில் கொஞ்சம் ‘சீரியசான’ செய்தியாக வந்திருந்தது சூர்யாவை சூடாக்கி விட்டது .

ஆனால் அதற்காக கார்த்தி பற்றி  சூர்யா அப்படி பேசி இருக்க வேண்டுமா என்பதுதான்,  சூர்யாவின் சம்பளம் அளவுக்கு பெரிய கேள்வி .

surya in anjaan game launch
அப்படிப் பேசிய போது…

“என் தம்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அவங்கவங்க எல்லாம் அவங்கவங்க இஷ்டத்துக்கு எழுதறாங்க. ஏன்னே தெரியல.. எல்லாரும்  என் தம்பிய குறிவச்சு எழுதறாங்க  …” என்பதோடு அவர் நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும் . ஆனா flow அவரை விடவில்லை..

“அவனுக்கு சாதாரண ஃபுட் பாய்சன்தான் . எந்தப் பிரச்னையும் இல்லை ” என்பதோடாவது நிறுத்தி இருக்கலாம் . ஆனால் பேச்சு overflow ஆகி மேற்கொண்டு “அவன் ஆஸ்பத்திரில நர்சுகளை எல்லாம் கொஞ்சிக்கிட்டு ஜாலியா இருக்கான். ஆஸ்பிடல்ல அவன் இருக்குற ரூம் நம்பர் என்ன தெரியுமா? அவனுக்கு பொருத்தமான நம்பர் . அதாவது 420 ” என்று போட்டுத் தாக்க…

‘நாம கூட கார்த்தியை இப்படி தாக்கலையே…’ என்று கான்ட்ரவர்சி கண்மணிகள் எல்லாம் கதறி விட்டார்கள், மானசீகமாக!

“நர்சுகளை கார்த்தி கொஞ்சிகிட்டு இருக்கான் ” என்ற சூர்யாவின்,  ஒப்பன்… சபை….. ஸ்டேட்மெண்டை,

அந்த 420 யில் சர்வீஸ் செய்யும் நர்சுகளும் அவர்களது குடும்பத்தாரும் எப்படி எடுத்துக்குவாங்கன்னு தெரியலையே …

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →