மூவர் தூக்கை வற்புறுத்தும் தமிழ்ப் படம்

they three
the three
ஊசலாடும் மூவுயிர்

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கண்ணில் பட்டவனுக்கு எல்லாம் ஆரம்பத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது . பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு அது ஐந்தாகி கடைசியில் மூன்றானது .

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் காங்கிரஸ் அரசே நியமித்த ஜெயின் கமிஷன் ”சந்திரா சுவாமி மற்றும் சுப்பிரமணிய சாமியை விசாரிக்க வேண்டும்” என்றும் ”அவரது கொலைக்கான சதியின் கரங்கள் இத்தாலி வரை நீள்கிறது ”என்பது பற்றியும் கூறியதை எல்லாம் கண்டு கொள்ளாமல் விடுதலைப் புலிகள் தரப்பு மட்டுமே குறி வைத்து அடிக்கப்பட்டது.

kuppi
குப்பி படத்தில்

இந்த காரணத்தாலும் பொதுவாக தூக்கு தண்டனையே கூடாது என்று கருத்து வலுப்பெற்று வருவதாலும் மேற்படி வழக்கு காரணமாக இப்போது தூக்கின் பிடியில் இருக்கும் முருகன் சாந்தன் பேரறிவாளன் மூவரையும் தூக்குத் தண்டனையில் இருந்து மீட்க பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடக்கின்றன.

ஆனால் அதே நேரம் அவர்களை தூக்குத் தண்டனை நியாயமானது என்று வற்புறுத்தும் நோக்கில் தமிழிலேயே ஒரு படம் உருவாகி வருகிறது .

ராஜீவ் காந்தி கொலை வழக்கை படமாக எடுக்கிறோம் என்ற பெயரில் குப்பி என்ற படத்தை தமிழில் எடுத்து

, அதன் மூலம் இன உணர்வுள்ள தமிழர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியை அதிகப் படுத்தியவர் கன்னட இயக்குனர் ரமேஷ் .

அடுத்து வீரப்பன் கதையை தமிழில்  படமாக எடுக்கிறேன் என்ற பெயரில்

அநியாயப் பொய்களை வீரப்பன் மேல் திணித்து படம் எடுத்தவரும் இவரே .

ramesh
ரமேஷ்

இப்போது ராஜீவ் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் எடுக்கிறேன் என்ற பெயரில்

இவர் தமிழில் எடுக்க இருக்கும் புதிய படத்தில் திரைக்கதை ,

ராஜீவ் காந்தி வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதிகளாக சிறையில் இருக்கும் முருகன், சாந்தன் , பேரறிவாளன் ஆகிய மூவரையும்

கண்டிப்பாக தூக்கில் போடவேண்டும் என்று வற்புறுத்தும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது .

என்ன  செலவானாலும் யாரை விலைக்கு வாங்கியாவது இந்தப் படத்தை அப்படியே ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் அதற்காக டெல்லி அல்ல…

இலங்கை அரசே இருநூறு கோடி ரூபாய் வரை ஒதுக்கி இருக்கிறது என்றும் கூறப்படுவதை கேட்கும்போதுதான் …

இதற்கு பின்னால் உள்ள விபரீத அரசியல் கணக்குகள் விளங்குகின்றன.

பார்ப்போம்.. இந்தப் பண மழையில்  இன்னும் எத்தனை சாயங்கள் வெளுக்கப் போகின்றன என்று! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →