அஞ்சானை சூர்யாவே அழித்த விதம் .

sooryaa
surya
ஏதோ தேடல்?

அஞ்சான் படம் வெளியான மறுதினம்.

கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் அருகில் உள்ள ஒரு இடத்தில் வெங்கட் பிரபு இயக்கும் மாஸ் படத்தின் படப்பிடிப்பில் இருந்த சூர்யாவை பார்த்த ரசிகர்கள் பலர்,

அஞ்சான் படத்தை கிண்டல் செய்து கமெண்ட் அடிக்க ,

டென்ஷனான  சூர்யா அந்த ரசிகர்களை திட்டினார் என்றும்

அப்போதும் ரசிகர்களின் கிண்டல் குறையாத நிலையில் அவமானம் தாங்க முடியாமல், 

படப்பிடிப்பையே கேன்சல் செய்து விட்டு வருத்தத்துடன் போய் விட்டார் என்ற விஷயம் தெரிந்த போது …

ஒரு நொடி சூர்யா மீது பரிதாபம்தான் வந்தது .

ஒரு படம் ஓடவில்லை என்பதற்காக  ஒரு நடிகனை இப்படியா அசிங்கப்படுத்துவது என்று,

அந்த ரசிகர்கள் மேல் கோபம் கூட வந்தது.

ஆனால் அஞ்சான் படம் இப்படி ஏமாற்றம் தரும் வகையில் வந்ததற்கே சூர்யா கொடுத்த டார்ச்சர்தான் காரணம் என்ற உண்மை….

இப்போதுதான் ரகசியமான  முட்டலுக்கும் மோதலுக்கும் இடையே வெளியே வருகிறது.

விஷயம் இதுதான் !

அஞ்சான் படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்திருக்கும் இந்தி நடிகர் வித்யுத்,

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக வந்து நடிப்பால் அசத்தியவர் .

அஞ்சான் படத்தின் திரைக்கதையில்  ராஜு பாயின் நண்பன் கதாபாத்திரத்தில் வித்யுத் நடிக்க இருப்பதை சூர்யா விரும்பவில்லையாம் . நடிப்பில் அவர் டாமினேட் செய்து விடுவார் என்ற பயம்தான் அதற்கு காரணமாம்.

அதையும் மீறி அவரே அந்த கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தமாகி அவர் நன்றாக நடிப்பதையும் பார்த்த சூர்யா..

ஒரு நிலையில் இயக்குனரை கட்டாயப்படுத்தி வித்யூத் கேரக்டரை சீக்கிரம் கொலை செய்துவிடும்படி வற்புறுத்தினார் என்று படத்தின் உதவி இயக்குனர் ஒருவர் கூறுவதுதான்….

vidyutjamwal
அநியாயமாக கொல்லப்பட்டவர்

இப்போது திரைக்கதையில் உள்ளவற்றை  விட  சிறப்பான  திருப்பமாக  இருக்கிறது

 தளபதி படத்தில் வருவது போல் கடைசியில்தான் வித்யூத் கதாபாத்திரம் கொல்லப்படுவதாக ஆரம்பத்தில் கதை அமைக்கப்பட்டிருந்தது என்றும் ஆனால் சூர்யாவின் வற்புறுத்தல் காரணமாகவே இடைவேளையிலேயே அந்தக் கதாபாத்திரத்தை  கொன்றுவிட்டதாகவும் தகவல் கசிகிறது இப்போது .

அதனால்தான் அஞ்சான் நோஞ்சான் ஆனது என்பது ஒரு பக்கம் இருக்க, இப்படியெல்லாம் செய்தும் சூர்யாவுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை என்பதுதான் இன்னும் பரிதாபம்

படம் பார்த்த சினிமா ரசிகர்கள் இப்போதும் வித்யூத்தான் படத்தின் ஹீரோ போலவும் , சூர்யா இரண்டாவது ஹீரோ போல தெரிவதாகவும்….

குறைவான காட்சிகள் இருந்தும் வித்யுத் ஒருபடி மேலே உயர்ந்து  டாமினேட் செய்து விட்டார் என்றும் கருத்து தெரிவிக்கிறார்கள்.

சூர்யாவை யார் என்றே தெரியாத ஒருவர் இந்த படத்தை பார்த்தால் கண்டிப்பாக வித்யூத் கதாநாயகன் என்றும், சூர்யாவை அடியாள் என்றுதான் கூறுவார்கள் என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

பொதுவாக வெள்ளிக் கிழமை வெளியாகும் படத்துக்கு வியாழன், வெள்ளியன்றே பத்திரிக்கையாளர் காட்சி  போடுவார்கள்.

sooryaa lingusaami
பத்திரிக்கையாளர்  காட்சியில் பதவிசு

ஆனால் அஞ்சான் படம் நன்றாக இல்லாத நிலையில் அப்படிப் போட்டால்…

பத்திரிக்கை விமர்சனங்களால்  மக்களுக்கு உண்மை புரிந்து விடும் என்பதால் ஞாயிற்றுக் கிழமை வரை மக்கள் நம்பி வந்து காசு கொடுத்து ஏமாந்து போகட்டும் என்று முடிவு செய்து,

ஞாயிறு இரவு பத்திரிக்கையாளர் காட்சியை போட்டார்கள்

அதில் பேசிய சூர்யா “பத்திரிக்கையாளர்களாகிய நீங்கள் உங்களுக்கு தோன்றியதை அப்படியே எழுதினாலே எங்களுக்கு மிகப் பெரிய பலம். நான் செலக்ட் பண்ணி படம் பண்ணிட்டு வர்றேன், நான் இந்த அளவுக்கு வந்திருக்கேன்னா… அது நீங்க, பத்திரிகைக்காரங்க நல்லது கெட்டது சொல்லி, ஒரு வேலி போட்டுதான் இந்த இடத்தை காமிச்சிருக்கீங்க. ஆனால், போற தடம்லாம் முள்ளை போடாதீங்க… ” என்றார் .

பத்திரிக்கையாளர்களை உயர்வாக மதிப்பதாக இயக்குனர் லிங்குசாமியும் பேசினார் .

ஆனால் அதில்தான் கூடவே குத்த வச்சு குந்தி இருக்கிறது ஒரு விபரீத வில்லங்கம்

 ‘தயாரிப்பாளர் இயக்குனர் ஹீரோவுக்கு ஆதரவாக எழுதினால் என்ன? எழுதாவிட்டால் என்ன ? ஐ டோன்ட் கேர்’ என்று சவால் விட்டபடி  பத்திரிக்கையாளர்களை மதிக்காமல் ஆணவமாக நடந்து கொள்கிற ஒரு பத்திரிகை தொடர்பாளரை வைத்துக் கொண்டு,  இவர்கள் பத்திரிக்கையாளர்களை மதிப்பதாக சொல்வது என்பது கஞ்சா விற்பவன் ஊதுபத்திப் புகையை உடம்புக்கு கெடுதல் என்று சொல்வது போல …

— என்று,  ஒரு பத்திரிக்கையாளர் உடனடி கமென்ட் அடித்ததுதான் அசத்தல் அருமை அட்டகாசம்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →