எஸ் எஸ் எஸ் மூவீஸ் சார்பில் ஏ எஸ் டி சலீம் மற்றும் பி.ரவிகுமார் இருவரும் வழங்க, முத்து நகரம் படத்தை இயக்கிய திருப்பதி இயக்கி இருக்கும் படம் திருட்டு ரயில் .
தூத்துக்குடியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களுக்கும் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் பிரச்னை வருகிறது . தங்கள் பக்கம் எந்த தவறும் இல்லாத நிலையிலும், ‘ எதற்கு வம்பு…..? சென்னைக்கு போய் நிம்மதியாக பிழைத்துக் கொள்ளலாம்’ என்று அந்த ஐந்து இளைஞகர்களும் திருட்டு ரயில் ஏறி சென்னைக்கு வருகிறார்கள்.
முத்துநகரம் படத்துக்கும் இசையமைப்பாளராக பணிபுரிந்த ஜெய் பிரகாஸ் இந்தப் படத்துக்கும் இசையமைக்க, பாடல்களை எழுதி இருக்கிறார், மூன்று தலைமுறை கண்ட பழம்பெரும் பாடலாசிரியர் காமகோடியன்.
திருப்பதி தனது அடுத்த கதையை தயார் செய்து இருவரும் சேர்ந்து செயல்பட , தயாரிப்பிலும் இறங்கினார் ரவிக்குமார் .பணம் போதாது என்ற நிலையில் தயாரிப்பாளராக படத்தில் இணைந்து இருக்கிறார் எஸ் எஸ் எஸ் மூவீஸ் ஏ எஸ் டி சலீம் . ”பழம் பெரும் பாடலாசிரியரான காமகோடியனை தேடிப் பிடித்து கொண்டு வந்திருக்கிறீர்களே …?” என்று ஆச்சர்யமாகக் கேட்டால் ” பாடல்களில் நல்ல தமிழ் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். எனவே அவரை பாடல் எழுத வைத்தோம் . எல்லா பாடல்களையும் இனிய தமிழில் எழுதி இருக்கிறார் ” என்கிறார்கள், இயக்குனர் திருப்பதியும், இசையமைப்பாளர் ஜெய் பிரகாஸும்.
”படத்தின் ஒரு முக்கியமான சண்டைக் காட்சியை கொடும் வெயிலில் ஒரு வறண்ட புழுதிப் பகுதியில் எடுத்தோம் . இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒரு மரம் கூட இல்லாத இடம் அது . அந்த காட்சியில் நாயகன் ரக்ஷன் , வில்லனாக நடித்திருக்கும் இருவரும் மிக சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள் .
காட்சி மிக மிக சிறப்பாக வந்துள்ளது . அதற்கு இயக்குனர் திருப்பதி, ஒளிப்பதிவாளர் விஜய் வல்சன் உள்ளிட்ட அனைவரின் உழைப்பும் சிறப்பானது” என்கிறார் சண்டைப் பயிற்சி இயக்குனர் கில்லி சேகர் .
மாரிஷ் படத்தொகுப்பில் முன்னோட்டமும் பரபரப்பாக இருந்தது .
நாயகன் ரக்ஷனின் தந்தையே படத்தை தமிழகம் எங்கும் ரிலீஸ் செய்கிறார் . வரும் டிசம்பர் 4 ஆம் தேதி வெளியாகிறது திருட்டு ரயில் .








