உறியடி @ விமர்சனம்

uriyadi 9

சாவனிர் புரடக்ஷன்ஸ் மற்றும் பின்ரோம் பிக்சர்ஸ் சார்பில் விஜயகுமார் , இயக்குனர்  நலன் குமாரசாமி, சமீர் பரத்ராம், சதீஷ் சுவாமிநாதன் ஆகியோர் தயாரிக்க , 

தயாரிப்பாளர் விஜயகுமார் , மைம் கோபி, சிட்டிசன் சிவகுமார், சந்துரு , ஜெயகாந்த், சிவபெருமாள் , ஹென்னா பெல்லா ஆகியோர் நடிக்க , 
தயாரித்து நடித்து இருக்கும் விஜயகுமாரே எழுதி இயக்கி இருக்கும்  படம்,  விடியும் வரை  விண்மீன்களாவோம்  என்கிற உறியடி. 
uriyadi 555
அடி எப்படி ?பார்ப்போம் . 
1999 ஆம் ஆண்டில் நிகழும் கதை . 
திருச்சி நகரை ஒட்டிய பகுதி!  இரண்டு  சாதிக்காரர்களின்  ஆதிக்கம்! இறந்து போன சாதிப் பிரமுகர்களுக்குச் சிலைகள்! . 
ஒரு சாதியின் முக்கியப் பெரிய மனிதர்  இறந்து போயிருக்க , அவருக்கு சிலை வைக்க முடிவு செய்கின்றனர் அந்த  சாதியினர் .
uriyadi 5555
அதன் பின்னால் ஏற்பட வாய்ப்புள்ள  சாதி மோதல்களைத் தவிர்ப்பதற்காக ,அந்தச்  சிலை  திறப்பை தடுக்கிறார் மாவட்ட ஆட்சித் தலைவர் 
தங்கள் சாதிக்கு ஒரு  கட்சி இருந்தால் இது போன்ற தடைகள் வராது என்று  கூறும் அந்த சாதியின் இளம் தலைவர் ஒருவர் (மைம் கோபி ),கட்சி  ஆரம்பிக்க  தனது சாதி  மக்களைச்   சம்மதிக்க வைக்கிறார் .
இவர்களுக்கு இணையாக உள்ள இன்னொரு சாதியினருக்கு இதனால் மனசுக்குள் புகைச்சல் . இப்படி  புகையும் சாதியைச் சேர்ந்த இறந்த போன பிரமுகருக்கு  முன்பே  சிலை  இருக்கிறது 
uriyadi 5
கட்சி ஆரம்பிக்க முயலும் சாதித் தலைவருக்கு போலி சாராயம் தயாரிப்பு உள்ளிட்ட பல சட்டவிரோதத் தொழில்கள் . 
அந்த  பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள  உள்ள ஒரு பொறியியல் கல்லூரி . அங்கே ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவர்களில்,  
ஒரே அறையில் தங்கி இருக்கும் நான்கு நண்பர்கள் (விஜயகுமார், சிவகுமார், சந்துரு, ஜெயகாந்த்.  பேர்லாம் கரெக்டா  பாஸ்? )
uriyadi 55
கல்லூரியில் ஜாலியாகப்   பொழுதை ஓட்டுவது , சைட்டடிக்க கிளாஸ்  போவது, ஹாஸ்டலில் சிகரெட் புகை  நடுவில் வாழ்வது ,
இரவானால்  நெடுஞ்சாலை தாபாவில் தண்ணி  அடிப்பது என்று  போகிறது இவர்கள் வாழ்க்கை . 
அந்த  நால்வரில் ஒருவனுக்கும் (விஜயகுமார் ) சக  மாணவிக்கும் (ஹென்னா  பெல்லா ) காதல் 
நான்கு மாணவர்களில் இருவர் , கட்சி  ஆரம்பிக்க நினைக்கும் சாதியைச் சேர்ந்தவர்கள் .
uriyadi 6
அந்த இளம் ஜாதித் தலைவரின்  போலி சாராய  தொழிலில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு நபரின் மகனும் அந்தக் கல்லூரியில் படிக்கிறான் . 
கஞ்சா அடிப்பது பெண்களிடம் தவறாக நடப்பது என்று எல்லை மீறும் அந்த மெல்லிய சைக்கோ மாணவனுக்கும்,   நண்பர்கள் நால்வருக்கும் ஏற்படும் சண்டை   பகையாகிறது . பகை போர்க்களம் ஆகிறது .
இதில்  ஜாதிப் பகையும் , ஜாதித் தலைவர்களின் சிலை  அவமதிப்புகளும்,  கட்சி ஆசை ஜாதித் தலைவனின் வஞ்சகமும் கலக்கும்போது என்ன ரணகளம் நடக்கிறது  என்பதே இந்த உறியடி.  
uriyadi 7
வாஜ்பாய் கட் அவுட், மாணவர் அறைகளில் சிம்ரன் , கஜோல் , மாதுரி தீட்சித் ஆகியோரின் கவர்சிப் படங்கள், , பொதிகைத் தொலைக்காட்சி என்று…..
1999 ஆம் ஆண்டு காலக்கட்டத்தை  ஆர்ப்பாட்டம் இல்லாமல் மிக எளிமையாக இயல்பாக படத்தில்  கொண்டு  வருகிறார்கள் . சபாஷ் 
அந்தக்கால சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் தனிமை சூழலை , மாணவர்களின் வாழ்க்கை முறையை,  பரபரப்போ  பதட்டமோ இல்லாமல் ஜஸ்ட் லைக் தட் சொல்கிறார்கள் . 
Uriyadi Movie Stills
ஒரு பகுதியில் பெரும்பான்மையாக  இல்லாத ஜாதியினரும் பிரிவினரும கூட கட்சி  ஆரம்பிக்க ஆசைப்படுவதற்கு பினனால் இருக்கிற , ஒட்டு அரசியல் ரகசியத்தை  சொல்லும் அந்த வசனம் சிறப்பு . 
கல்லூரி  ஆய்வகத்தில் காதலை உணரும் காட்சியில்,  பிங்க் நிறம் வரும் அந்த , டைட்ரேஷன்  பரிசோதனைக் காட்சி , அட்டகாசமான டைரக்டோரியல் டச் !
பயங்கரமான ஆயுதங்கள் உருவப்பட, அவற்றை யார் எடுத்துள்ளார்கள் என்பதை சொல்லும் இந்த இன்டர்வல்  டுவிஸ்ட், அபாரம் !  . 
uriyadi 33
இடைவேளைக்குப் பிறகு  சில வசனங்களில் காமடி கலகலக்க வைக்கிறது . 
கேரளாவின் புகழ்பெற்ற மசாலா காபி இசைக் குழுவின் இசையில் வரும் பாரதியார் பாடல் சிறப்பு 
விஜயகுமாரே அமைத்து இருக்கும் பின்னணி இசையில் அமைதியின் அருமையை சரியாகப் பயன்படுத்தி இருப்பது  ரசிக்க வைக்கிறது .
மாணவர்களின் பிராக்டிக்கல் வகுப்பில் வரும் பெருநெருப்புக் கலனை  கிளைமாக்சில் பயன்படுத்துய  விதம் பாராட்ட வைக்கிறது . 
uriyadi 8
படமாக்கி இருக்கும் விதத்தில்  ஒரு கேண்டிட் கேமரா எஃபெக்ட் இருப்பதுவும் அபாரம் 
அதே நேரம் முதல் பாதியில் மிக சாவகாசமாக நகரும் காட்சிகள்  அதனால் நின்ற இடத்திலேயே அசையும் திரைக்கதை, இவை எல்லாம் குறைகள் .
கதை எதை நோக்கி நகர்கிறது என்பது சாதாரண ரசிகனுக்கும் புரியும் நிலையில் ..வெகுஜன ரசிகனை ஈர்க்கும்  பரபரப்பு, சுறுசுறுப்பு , உத்வேகம் எல்லாம் படத்தில் மிஸ்ஸிங் . 
Vidiyum Varai Vinmeengalaavom Movie Stills
தவிர அதிரடியாக  உரத்துச்  சொல்ல வேண்டிய ஒரு கதையை,–  சண்டைக் காட்சிகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால்  கிளைமாக்ஸ் ஏரியா வரும் வரை,—  ரொம்ப சல்லிசாக  சொல்லி இருக்கிறார்கள் .
ஒரு புதிரை பூடகத்தோடு விளக்கும் பாணியில்  இருக்கும் கிளைமாக்ஸ் ஏரியாவும் வெகுஜன ரசிகனை குழப்பும் வகையில்தான்  இருக்கிறது . 
மொத்தத்தில்  உறியடி… அடி  விழுந்தது ! ஆனா உறி உடையல ! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →