காவிரிப் பிரச்னை கதைக் களத்தில் ‘உயிர்க் கொடி’

uyir 99

ஜெயக்கொடி பிக்சர்ஸ் சார்பில் ஜே.பி.அமல்ராஜ் தயாரிக்க, பி ஆர் ரவி என்பவர், கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி கதாநாயகனாக நடித்து இயக்கி இருக்கும் படம் உயிர்க்கொடி

கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார் பெங்களூரைச் சேர்ந்த அஞ்சனா நட்சத்திரா . படத்தின் கதை ரொம்பவே சுவாரஸ்யமானது .

தமிழர்கள் என்றாலே பிடிக்காத ஒரு கன்னடப் பெண்ணையும்  கன்னடர்களின் தமிழ் விரோதப் போக்கு காரணமாக கன்னடர்கள் என்றாலே முகம் சுளிக்கும் ஒரு தமிழ்ப் பையனையும் ,

uyir 1

ஒரு குறிப்பிட்ட சூழலில் சில ரவுடிகள் கடத்திக் கொண்டு போய் ஓர் அத்துவானப் பொட்டைக் காட்டில் உள்ள ஆழமான குழிக்குள் போட்டு விட்டுப் போய் விடுகிறார்கள்.

இருவருக்கும் இடையில் அப்புறம் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதையம்சம் .

கர்நாடகாவில் ஒரு தமிழ்ப் பெண்  தன் குழந்தைக்கு குடிக்கத்  தண்ணீர் கேட்டு வாங்கிக் கொடுக்கும்போது , அதை  அந்த கன்னட வெறிக் கதாநாயகி  தட்டி விட,

பொங்கும் அந்தத் தமிழ்த் தாய் ” குளிக்கிற தண்ணீரையே குடிக்கக் கொடுக்க மறுக்கிற உன்னை,  சீக்கிரம் பெருந்தன்மை மிக்க ஒரு தமிழன் குடிக்கிற தண்ணீரால் குளிப்பாட்டுவான் ” என்று, 

uyir 8

வாழ்த்துச் சாபம் கொடுத்து சபதமிடும் காட்சி ஒன்றும் படத்தில் வருகிறதாம் .இந்தக் கதையில் ஹீரோவாக நடிக்க யாரும் சம்மதிக்க நிலையில் தானே ஹீரோவாக நடித்துள்ளார் இயக்குனர்  ரவி.

ராமநாதபுரம், கமுதி, பெங்களூர், கோவா, பொள்ளாச்சி, அவினாசி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது .

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் படத்தின் சில காட்சிகளை திரையிட்டார்கள்.குழிக்குள் சிக்கிக் கொண்ட நிலையில் நாயகன் நாயகி இருவரும் பேசிக் கொள்கிறார்கள் .

“ஏண்டி தண்ணி கொடுக்காம இப்படி பண்றீங்க ?”

“நீங்க மட்டும் கரண்ட் கொடுக்க காசு வாங்கிகறீங்க இல்ல . நாங்க மட்டும் தண்ணி சும்மா தரணுமா ”

uyir 6

“நாங்க கரண்ட் தரலன்னா நீங்க இருட்டுலதான் இருக்கனும் “

“பரவால்ல . இருட்டுல இருந்துடலாம் . ஆனா நான் தண்ணி தரலன்னா நீங்க விவசாயம் பண்ண முடியாம சாகணும் ” என்கிறாள் அவள் .

இந்த காட்சியை மேலோட்டமாக பார்த்தால் அந்த கர்நாடகாக்காரி சொல்வது சரிதானே என்பது போலவே இருக்கும் . ஆனால் உண்மை அதுவல்ல .

தண்ணீர் என்பது இயற்கை வளம் . அதை தயாரிக்க செலவு இல்லை . ஆனால் மின்சாரம் என்பது இயற்கை வளம் அல்ல . அதை தயாரிக்க செலவு ஆகிறது . அதற்கு கட்டணம் உண்டு .

uyir 9

தவிர தமிழ்நாடு தரும் மின்சாரத்துக்காக கர்நாடகா தமிழ்நாட்டுக்கு காசு தரவில்லை . மத்திய அரசுக்கே காசு தருகிறது .

இன்னொரு காட்சியில் நாயகன் நாயகி வசம் இருந்த தண்ணீரை அவளுக்கு தெரியாமல் குடித்து விடுகிறான் .அவள் ‘ என் தண்ணீரை ஏன்டா திருடுன ?” ” என்று கேட்க,

அவனோ ” தேவைன்னு கேட்கும் போது கொடுத்தா திருட்டு இருக்காதுல்ல ” என்று தத்துவம் பேசுகிறான் . அதன் மூலம் தான் செய்தது திருட்டு என்று ஒத்துக் கொள்கிறான்

கடவுளே ! கடவுளே! காவிரி தண்ணீர் நாம எடுக்குற பிச்சை இல்லீங்க . உரிமை .

சுப்ரீம் கோர்ட்டுல மாதிரியே சினிமாவிலயும் தமிழ்நாடு சைடு ஆர்கியூமென்ட், இவ்வளவு கேவலமா  இருந்தா எப்படி ?

நிகழ்ச்சியில் பேசிய அபிராமி ராமநாதன்

uyir 2

” காட்சி நன்றாக இருக்கிறது . வித்தியாசமான படம் என்பது தெரிகிறது . ஆனால் இது போன்ற கதைப் படங்களில் ஒரு காட்சியை  மட்டுமே வைத்து, 

படத்தின் வெற்றியை தீர்மானிக்க முடியாது . நன்றாக கதை திரைக்கதை அமைத்து இருந்தால் ஓடும் ” என்றார் .

இயக்குனர் –ஹீரோ ரவி பேசும்போது ” படத்தின் நடன இயக்குனர் ட்ரீம்ஸ் காதர் மூலம் எனக்கு  இந்த வாய்ப்பு கிடைத்தது . நான் தயாரிப்பாளர் அமல்ராஜிடம் முழுக் கதையையும் சொல்லவில்லை .

ஒரு காட்சிதான் சொன்னேன் . உடனே ஐந்து லட்ச  ரூபாய் பணம் உள்ள அவரது ஏடிஎம் கார்டை என் பாக்கெட்டில் வைத்து பட வேலைகளை ஆரம்பிக்கச் சொன்னார் .

uyir 5

கதாநாயகி கேரக்டருக்கு கன்னடப் பெண்ணே இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணி அப்படியே அஞ்சனா நக்ஷத்திராவை ஒப்பந்தம் செய்தேன்

படத்தின் முக்கால் வாசி அந்தக் குழிக்குள்தான். எல்லோருக்குமே ரொம்ப கஷ்டம் . அதுவும் கேமரா மேன் கவிநாத் ஒவ்வொரு ஷாட்டுக்கும் லென்ஸ் மாற்ற மேலே ஏறி இறங்கி ரொம்ப கஷ்டப்பட்டார் . ” என்றார் .

பி ஆர் ஓ யூனியன் முன்னாள் செயலாளர் பெரு.துளசி பழனிவேல் பேசும்போது ”

uyir 4

மாநிலம் , இனம் . மொழி போன்ற எல்லைகளை விட மனிதமே பெரிது என்று சொல்லும் இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகள் ” என்றார்.

பி ஆர் ஓ யூனியன் பொருளாளரும் தயாரிப்பாளருமான விஜய முரளி பேசும் போது, ” சிறிய பட்ஜெட்டில் மிக எளிமையாக ஒரு நல்ல கதையை வைத்து,

uyir 3

இந்தப் படத்தை எடுத்துள்ளனர் .  வாழ்த்துகள் ” என்றார் .

“படம் மிக வித்தியாசமான கதையை கொண்டு இருப்பதால் , இதை சீரழிக்க சென்சார் போர்டு காத்திருக்கும் . எனவே அனுபவம் மிக்க தயாரிப்பாளர்களின் ஆலோசனை பெற்று, 

சென்சாருக்குப் போங்க ”

uyir 7

என்றார் இயக்குனர் பவித்ரன் .

படத்தின் தயாரிப்பாளர் அமல்ராஜ் தனது பேச்சில் ” ராமநாதபுரம் மாவட்டம் கமுதி விளக்கு என்ற ஊரில் , பத்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஆள் நடமாட்டமே இல்லாத பகுதியில் ,

கடினாமான பாறைத் தரை கொண்ட இடத்தில் , மதுரையில் இருந்து போகலைன் இயந்திரத்தை கொண்டு வரப்பட்டு ,

ஆறு அடி அகலம், இருபது அடி ஆழத்துக்கு குழி தோண்டி, ஐமபது தண்ணீர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி கிளைமாக்ஸ் காட்சி எடுத்தோம்” என்றார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *